Friday, February 1, 2008

கலி காலக் காதல்!!

என்னைப் பார்க்கும் போதெல்லாம் சிரித்தாய்,
எனக்குப் புரிந்து போயிற்று
அந்த வார்த்தயை சொல்ல போகிறாயென்று,
பிறிதொரு கணத்தில் சொல்லியும் விட்டாய்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று
மறுத்தேன்,
பிடிவாதமாக இருந்தாய்,
மசிந்தேன்,
பிறகு எங்கெல்லாமோ சுற்றினோம்,
நாட்கள் விரைந்து ஓடியது,
வேறொரு சந்தர்ப்பத்தில்
வெகு இயல்பாய் சொன்னாய்,
"என்னை மறந்துவிடு" என்று,
இதையும் நான் எதிர்பார்த்தேன்
நினைத்தால் தானே மறப்பதற்கு!

No comments: