ஏகாந்தத்தின் பிடியில்
தோன்றிய கருவொன்றை
கவிதையாக்க நினைத்து
எழுதி பார்க்கையில்
ஏதோ குறைவதாயுணர்ந்து,
மீண்டும் மீண்டும் யோசித்து
அழகு வார்த்தைகள்
இட்டு நிரப்பி,
எதுகை மோனை சரி செய்து,
வாசித்தப் பொழுது
தொலைந்து போயிருந்தது-கரு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment