Thursday, August 16, 2007

இது காதல் காலமடி!!!(பகுதி 2)

அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொன்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது!!

******************************************
உன் அக்காவின் திருமணத்தில்
உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!
*********************************************

உனக்குப் பிடித்தக்
கவிஞர் யார் என்றாய்,
உன் அப்பா என்றேன்
புரியாமல்ப் பார்த்து
பிறகு
வெட்கப்பட்டுச் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!

**********************************************
நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு
நீர் இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா?!!!!!
******************************************
உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும்
இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு!!!
************************************************

No comments: