ஆளே இல்லாத சாலையிலும்
அனிச்சையாய் எழுப்பினேன்
மிதிவண்டி ஒலியை
அருகே உன் வீடு!!
************************************
கோலமிட்டுச் சற்றுத்
தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது!!
*************************************
நிறைகுடமும் கூத்தாடும்
நீ சுமந்து வருகையில்!!!
*************************************
உன்னைப்
பார்த்துக்கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடரி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்!!
Sunday, August 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment