Thursday, August 23, 2007

கவிதை வேண்டாமடி!!!

காதலைச் சொல்லக்
கவிதை வேண்டுமாம்,
எழுதிப் பார்த்தேன்
கவிதை வரவில்லை
காகிதக் குப்பைதான் வந்தது,
என் காதலின் ஆழம் புரிய
கவிதை வேண்டாமடி
கசக்கிப் போட்ட
காகிதங்களைப் பார் !!!!

No comments: