Friday, November 28, 2008

நொடிக் கவிதைகள்.....!



நொடிக்கவிதைகள் பகுதி 1 இங்கே:

கொசுறு:பெரிதாக ஈர்க்கும் படி இருக்காது.கொஞ்(சு)சம் தமிழில் விளையாடி பார்த்தேன்.

Wednesday, November 26, 2008

அறுவடை நாளும்,ஒருவர் வாழும் ஆலயமும் கூட சின்னத்தாயும்...!

நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி போய் பார்ப்பவரா நீங்கள், அப்படியெனில் உங்களுக்காத்தான் இந்த பதிவு.தமிழில் இதுவரை வெளியான படங்களில் மறக்க முடியாத படங்களென்றும், பார்க்க வேண்டிய படங்களென்றும் பெரும்பாலானோர் சொல்வது முள்ளும் மலரும், உதிரி பூக்கள்,மூன்றாம் பிறை,நாயகன்,16 வயதினிலே மற்றும் சில பாலச்சந்தர் திரைப்படங்கள் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த காதல், வெயில், பருத்தி வீரன் இப்படி சிலவும் இந்த பட்டியலில் உண்டு.இவைத் தவிரவும் நான் ரசித்த எல்லோரும் பார்க்க வேண்டும் என நினைக்கிற சில படங்களும் உண்டு.

அந்த வகையில் நல்ல கதையம்சம் மற்றும் வித்யாசமான திரைக்கதையில் வெளிவந்த அறுவடை நாள்,ஒருவர் வாழும் ஆலயம் மற்றும் சின்னத்தாயி படங்களை பற்றிய ஒரு பார்வை.இம்மூன்று படங்களும் மேற்சொன்ன படங்களை போல பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாவிட்டாலும் உங்களுக்குள் ஒரு சின்ன அதிர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

அறுவடை நாள்:

G.M.குமாரின் இயக்கத்தில் பிரபு,ராம்குமார், பல்லவி, R.P.விஸ்வம், வடிவுக்கரசி, ராசி ஆகியோரின் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் கதை புதுமையாக இல்லாவிட்டாலும்,கதைக் களம் வித்யாசமானதாய் இருக்கும்.கதை வடிவுக்கரசியின் பார்வையில் தொடங்கும், ஒரு கிராமம், அதில் ஒரு பண்ணையார்(விஸ்வம்), அவரின் வெகுளித்தனமான மகன்(பிரபு), அவ்வூர் தேவாலயதின் பாதிரியார்(ராம்குமார்),மருத்துவ சேவை செய்ய வரும் ஒரு கிறித்துவப் பெண்(பல்லவி) மற்றும் பிரபுவின் முறைப் பெண்ணான ராசி இவர்களை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கும். கன்னியாஸ்திரியாகும் எண்ணத்தோடு இருக்கும் பல்லவிக்கு, பெற்ற தந்தையாலேயே அடிமைபோல் நடத்தப்படும் பிரபு மீது இயல்பாய் பிறக்கிற இரக்கம் நாளடைவில் இருவருக்குமிடையே காதல் மலர காரணமாயிருக்கிறது . இவர்களின் காதலுக்கு பாதிரியார் ராம்குமார் துணையாக நிற்கிறார். விஷயம் பண்ணையாருக்கு தெரியவரும்போது தனது குள்ளநரித்தனத்தால் பிரபுவுக்கே தெரியாமல் மைனர் பெண்ணான ராசியை திருமணம் செய்து வைத்துவிடுகிறார். ராசியுடன் தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா,பல்லவியுடனான காதல் என்னானது என்பதையெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.இப்படத்தின் தலைப்பு இக்கதைக்கு எவ்வளவு பொறுத்தமானது என்பதை படத்தின் முடிவில் உணர்வீர்கள்.

இந்த படத்தில் என்னை கவர்ந்த விஷயம் ராம்குமாரின் கதாபாத்திரமும் மற்றும் அவர் பேசும் வசனங்களும். ராம்குமார், பல்லவி, விஸ்வம் மற்றும் ராசி ஆகியோருக்கு இது முதல் படம். ஆனால் யாருடைய நடிப்பும் இதுதான் முதல் படம் என்பதுபோல் தெரியாது. இளையராஜாவின் இசையில் "தேவனின் கோவில் மூடிய நேரம்" என்ற அற்புதமான பாடலும் உண்டு. பாடல்கள் கங்கை அமரன்,கதை லிவி ,வசனம் R.P.விஸ்வம்.

கொசுறு:இப்படத்தின் இயக்குனர் G.M.குமார் பின்னர் இப்படத்தின் கதாநாயகியான பல்லவியை மணந்து கொண்டார்.வெயில் படத்தில் பசுபதியின் தந்தையாக நடித்திருப்பதும் இவரே.

ஒருவர் வாழும் ஆலயம்:

சண்முகப் பிரியன் இயக்கத்தில்,இளையராஜாவின் இசையில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரபு, ரஹ்மான், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிவக்குமார் ஒரு இசைக்கலைஞன், தன் மனைவிமீது(அம்பிகா) அளவுக்கடந்த அன்பு வைத்திருக்கிறார், தலைபிறசவத்தில் ஒரு பெண்குழந்தையை ஈன்று மனைவி இறந்து போகிறார். மனைவியின் இறப்பிற்கு காரணமாக தனது மகள் ரோகினியை(ராது) நினைக்கும் சிவகுமார் அவரை வெறுக்கிறார், அது அவள் வளர்ந்து குமரியான பிறகும் தொடர்கிறது. இந்நிலையில் சிவக்குமாரிடம் சங்கீதம் பயில வரும் ரகுமானுக்கும், ரோகினிக்குமிடையே மெலிதாக காதல் அரும்புவது தெரிந்து அவசரமாக தனது மகளை பிரபுவிற்கு மணமுடித்து வைக்கிறார்.அதன் பிறகு ரகுமான் ஒருமுறை ரோகினியை பார்க்க நேரிடும்போது ஊர்மக்களால் அவர்களது சந்திப்பு தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பிரபுவிடம் சொல்லிவிட பிரபு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு துறத்துகிறார்.இந்த சூழ்நிலையில் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயலும் ரகுமானை அவர் யாரென்று அடையாளம் தெரியாத பிரபு காப்பாற்ற நேரிடுகிறது. பிறகு ரகுமான் யாரென்று தெரிந்து பிரபு என்ன செய்கிறார், கதாநாயகி என்ன ஆனாள் என்பதை ஆன்லைனிலோ,டி.வி.டியிலோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் திரைக்கதை, கதையின் ஒருபாதி ரகுமானின் கண்ணோட்டத்திலும்,மறுபாதி பிரபுவின் பார்வையிலும் எடுத்துச் சென்றிருப்பது வித்யாசமாய் இருந்ததால் எனக்கு பிடித்த படமாயிற்று."மலையோரம் மயிலே","நீ பௌர்ணமி" போன்ற பாடல்களும் உண்டு.

சின்னத்தாயி :

கணேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் விக்னேஷ் அறிமுகமான இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது.ஒரு கிராமத்தை கதைக்களமாக கொண்டுள்ள இத்திரைப்படத்தில் வித்யாசமான திரைக்கதையோ,பிரமாண்டமான காட்சி அமைப்புகளோ எதுவுமே இராது,ஆனால் எடுத்துக்கொண்ட கதை சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் இருந்தது. ஊரின் பூசாரியான வினுசக்கரவர்த்தி, அவரின் மகன் விக்னேஷ், அந்த ஊரின் முக்கியஸ்தர் நெப்போலியன், அவரின் கீப்பாக சபிதா ஆனந்த், சபிதா ஆனந்தின் மகளாக கதாநாயகி பத்மஜா(பொற்காலம் ராஜேஸ்வரி) இவர்களை சுற்றி கதை பிண்ணப்பட்டிருக்கும். கதைப்படி சின்னத்தாயி(பத்மஜா) மற்றும் விக்னேஷ் இருவரும் சிறுவயது முதலே விளையாடித்திரிகிறார்கள்,பருவ வயது வந்ததும் அவர்களிடத்தில் காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. இவர்களின் பழக்கம் மெல்ல சபிதா ஆனந்திற்கு தெரியவர தன் மகளை கண்டிக்கிறார். தன் நிலை தன் மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கல்யாணத்திற்கு முன்னரே சின்னத்தாயி கர்ப்பமாகிறாள்,இதற்கிடையில் சபிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக நெப்போலியனின் கண் சின்னத்தாயின் மீது விழுகிறது, அவரிடத்திலிருந்து தன் மகளை காப்பாற்றும் போராட்டதில் தனது உயிரை விடுகிறார் சபிதா.ஊர் திருவிழா வருகிறது, எப்போதும் சுடலைமாடன் வேடம் தறித்து ஊரில் நடக்கும் கெட்ட விஷயங்களை அழிக்கும் வினுசக்கரவர்த்திக்கு(சுடலைமாடன் வேட்டைக்கு போகும்போது அவர் கொலை செய்தால் கூட அது சாமி செய்ததாக நம்புகிற ஊர்) பதிலாக அவர் மகன் விக்னேஷ், அந்த வருடம் சுடலைமாடனாகிறார். இதற்கிடையில் சின்னத்தாயி ஊரைவிட்டு விரட்டபடுகிறார். பிறகு சுடலைமாடன் வேடம் தறித்து வேட்டைக்கு கிளம்பும் விக்னேஷின் முன்னால் பிறசவித்த பச்சை உடம்போடு ( கதைப்படி தீட்டு உடம்போடு) வந்து விக்னேஷிடம் கேட்கும் கேள்விகளும்,அதை தொடர்ந்து வரும் சம்பவங்களும் இந்தப் படத்தை சிறந்த படமாக எனக்கு அடையாளம் காட்டியது. இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் பெரிய ஹிட்டானவை, குறிப்பாக "நான் ஏரிக்கரை மேலிருந்து","கோட்டையை விட்டு" ஆகிய பாடல்கள்.

கொசுறு:இத்திரைப்படங்களை பார்க்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அந்த படங்கள் வெளியான வருடத்தையும் அப்போதுள்ள டெக்னிக்கல் விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டுகிறேன்.

Tuesday, November 25, 2008

காணாமல் போன பின்னணி பாடகர்கள்:

புதிது புதிதாக எத்தனையோ இளமை மற்றும் திறமையான பாடகர்கள் தற்போது பாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இசை ஆர்வலர்களால் மறக்க முடியாத பாடல்களை பாடி தற்போது வாய்ப்புகள் இல்லாமலும் அல்லது முழுநேர பாடகர்களாக இல்லாமல் அவ்வப்போது ஒரு சில பாடல்களை மட்டும் பாடியிருக்கும் சில பின்னணி பாடகர்களை பற்றி ஒரு சிறிய நினைவூட்டல் இப்பதிவு.

தீபன் சக்கரவர்த்தி:
பழம்பெறும் பாடகரான திருச்சி லோகநாதனின் கலைவாரிசான இவரின் இசைத்திறமையை பறைசாற்ற நிழல்கள் படத்தில் இடம்பெற்ற "பூங்கதவே தாழ்திறவாய்" பாடல் ஒன்று போதும்.நல்ல குரல் வளம் இருந்தும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே திரையில் பாடியிருக்கிறார். தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரின் அண்ணன் டி.எல்.மஹாராஜனுக்கும் இதே நிலைதான்.ஆனாலும் இவர் பக்தி பாடல்கள் பாடுவதில் பிஸி.

தீபன் சக்கரவர்த்தி பாடிய சில பாடல்கள்:

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு -மெல்ல பேசுங்கள்
அரும்பாகி மொட்டாகி பூவாகி-எங்க ஊரு காவல்காரன்
தேவதை போலொரு பெண்ணிங்கு-கோபுர வாசலிலே
டி.எல்.மகாராஜன் பாடிய சில பாடல்கள்:
நீ கட்டும் சேலை மடிப்பிலே - புதிய மன்னர்கள்
பூவாட்டம் காயாட்டம் கன்னித் தோட்டம்-அரவிந்தன்
காதல் யோகி - தாளம்

எஸ்.என்.சுரேந்தர்:
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனால் நல்ல குரல் வளம் உடையவர் என்ற பாராட்டை பெற்றவர்.1980 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்.நடிகர் மோகனுக்கு தொடர்ந்து பின்னணி பேசியவர்.நடிகர் விஜயின் தாய் மாமாவான இவர்,விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் 'பூவே பூவே பெண்பூவே' என்ற பாடலையும் ப்ரியமுடன் படத்தில் "ஒயிட் லகான் கோழி" பாடலையும் பாடியிருக்கிறார்.
இவரின் சில பாடல்கள்:

தேவன் கோவில் தீபம் ஒன்று -நான் பாடும் பாடல்
தனிமையிலே ஒரு ராகம் - சட்டம் ஒரு இருட்டறை
மாமரத்து பூவெடுத்து,கண்மணி நில்லு - ஊமை விழிகள்
பாரிஜாத பூவே - என் ராசாவின் மனசில

அருண் மொழி:
இசைஞானி இளையராஜாவிடம் புல்லாங்குழல் இசைகலைஞராக இருக்கும் அருண்மொழி ஒரு சிறந்த பின்னணி பாடகராகவும்,விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் இடம் பெற்ற 'அரும்பும் தளிரே' என்ற பாடலை எழுதி தன்னை ஒரு பாடலாசிரியராகவும் பண்முகம் காட்டியவர்.நடிகர் பார்த்திபன் படங்களுக்கு பெரும்பாலும் இவரே பாடியிருப்பார்.இளையராஜாவின் இசையில் பார்த்திபன் நடித்த "தாலாட்டு பாடவா" படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் பாடும் வாய்ப்பை பெற்றவர்.

இவரின் சில பாடல்கள்:

மேக வீதியில் நூறு வெண்ணிலா(மனோவுடன்)-வெற்றிக் கரங்கள்
வராது வந்த நாயகன்,நீதானா நீதானா -தாலாட்டு பாடவா
ஆத்துல அன்னக்கிளி - வீரா
தென்றலுக்கு தெரியுமா - பாரதி கண்ணம்மா
உன்னை காணாமல் நானேது-கவிதை பாடும் அலைகள்
மனசுக்குள்ள நாயனச் சத்தம்-மல்லு வேட்டி மைனர்
புன்னை வனப் பூங்குயிலே- செவ்வந்தி
நானென்பது நீ அல்லவோ- சூரசம்ஹாரம்
மனோ:

இவருக்கு அறிமுகமெல்லாம் தேவையில்லை,1990 களின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் என அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியவர். இப்போது இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லையெனினும் தெலுங்கில் பாடிக் கொண்டிருக்கக் கூடும். தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ரஜினிகாந்தின் முத்து மற்றும் சிவாஜி படங்களுக்கு சூப்பர் ஸ்டாருக்கு பின்னணி பேசியவரும் இவரே.
இவரின் ஒரு சில பாடல்கள்(ரொம்ப பெரிய பட்டியல் போடவேண்டும் இருப்பினும் சில):
மலையாளக் கரையோரம்,மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா -பாண்டியன்
செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்
அந்தியில வானம் - சின்னவர்
வீரபாண்டி கோட்டையிலே - திருடா திருடா
முக்காலா முக்காப்புலா-காதலன்
அழகிய லைலா- உள்ளத்தை அள்ளித்தா
தில்லானா தில்லானா- முத்து
ஓ பிரியா பிரியா- இதயத்தை திருடாதே
அதோ மேக ஊர்வலம்-ஈரமான ரோஜாவே

இவர்கள் தவிர ராசா மகன் படத்தில் இடம்பெற்ற 'காத்திருந்தேன் தனியே' பாடலை பாடிய சந்திரசேகர்(இவர் இளையராஜாவின் குழுவில் டிராக் பாடுபவர்),'தாமர பூவுக்கும் தண்ணிக்கும்' மற்றும் 'மானா மதுர குண்டு மல்லிகை' ஆகிய பாடல்கள் பாடிய பாடகர் பெயர் சரியாக நினைவில்லை ஏதோ கிருஷ்ணாவில் ஆரம்பிக்கும்(கிருஷ்ண சந்தரோ?),'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' புகழ் கிருஷ்ணராஜ்(இவர் சமீபத்தில் பருத்தி வீரனில் ஐயய்யோ பாடலை பாடியிருக்கிறார்) ஆகியோரின் குரலும் வித்யாசமாய் இருக்கும்.

கொசுறு:ரொம்ப சீனியர் பாடகர்களான எஸ்.பி.பி, கே.ஜே.ஏசுதாஸ், மலேசியா வாசுதேவன் என பெரும் சாதனையாளர்களை இந்த பட்டியலில் சேர்க்கக் கூடாது.

ஐந்து வழி மூன்று வாசல்................!

இலக்கியம் குறித்து பெரிதாக (சுத்தமாக) பரிச்சயம் இல்லாத எனக்கு,எது இலக்கியம் என்பது பற்றியும்,எந்த கட்டமைப்புக்குள் எழுதுவது இலக்கியகக் கட்டுரைகளாக பார்க்கப்படுகின்றன என்பது பற்றியும் சரியான புரிதல் இன்றுவரை இல்லை,இதற்கு சரியான வாசிப்பனுபவம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

சில படைப்புகளில் கையாளப்படும் சொற்கள் ஒரு புரியாத புதிராகவே உள்ளது,குறிப்பாக புனைவு,கயமை,பின்நவீனத்துவம்,படிமம் இப்படி,இவற்றில் சில சொற்களுக்கு பொருள் புரிவது போலவும், சமயங்களில் புரியாதமாதிரியும் இருக்கிறது.


கல்யாண்ஜி, வண்ணதாசன், பிரமிள், ஜி.நாகராஜன், அசோகமித்ரன், பிரபஞ்சன், நீல பத்மநாபன் இப்படியாக நீளும் இலக்கியவாதிகளின் பெயர்களை கேட்க நேரிடும்போது அவர்களின் படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.ஆனால் வெகு சாமாண்ய நடையில் எழுதப்படும் சில கவிதைகளையும், கட்டுரைகளையும் படிக்கும் போதே பாதி புரிவதில்லை அப்படியிருக்க இவர்களின் படைப்பு எனக்கு புரிந்துகொள்ள முடியுமா என கூடவே மற்றொரு எண்ணமும் தோன்றும்.

இலக்கியத்தைப் பற்றி அறிய ஆவலாக இருக்கும் எனக்கு யாரின் படைப்பிலிருந்து ஆரம்பித்தால் எளிதாக இருக்கும் என உங்களுக்கு தெரிந்த படைப்புகளை எனக்கு பரிந்துரை செய்வீர்களாக.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன்,இலக்கியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத காலத்தில் நான் வாசித்த புத்தகம்தான் "ஐந்து வழி மூன்று வாசல்" ஒரு சரித்திர நிகழ்வையும்,நிகழ்கால நிகழ்வு ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான த்ரில்லர் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி இறுதியில் இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி அற்புதமாக கதையை முடித்திருப்பார், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன். இந்த நாவலில் இடம்பெற்ற ராஜேந்திரன்,மீனாட்சி, ஜம்னாலால் ஆகிய காதாபாத்திரங்கள் படித்து பல வருடங்கள் ஆனபின்பும் இன்னும் மனதைவிட்டு அகலாதவை.

இந்த புத்தகம் படித்த ஆர்வத்தால் அடுத்து நான் படித்தது கல்கியின் "பொன்னியின் செல்வன்",வைரமுத்துவின் "கள்ளிக்காட்டு இதிகாசம்" மற்றும் "கி.ராஜநாராயனின் கதைகள்" என சொற்ப எண்ணிக்கையிலேயே அடக்கிவிடலாம்.

டிஸ்கி:ரொம்ப ஆர்வக் கோளாரில் இருக்கும் எனக்கு நல்ல படைப்புகளை அறிமுகப் படுத்துங்கள் என்பதற்காகவே இந்த பதிவு.

Monday, November 24, 2008

கொஞ்சம் அந்த மாதிரியான கவிதைகள்.....!

சொப்பன சங்கமம்:
பூவாச கூந்தலின் கிறக்கத்தில்
விழித்துக்கொண்ட ஆண்மை,
உச்சிமுகர்ந்து காதுமடல் வருடி,
உதிரமதிர அதரங்கள் சுவைத்து,
சில வளைவு நெளிவுகள் கடந்து
எல்லாம் முடித்(ந்)து களைத்து,
உறங்கி விழிக்கையில்,
எஞ்சியிருக்கும் கலவிச் சோம்பல்
மெல்ல விளங்கவைக்கும்
நேற்றிரவின் சொப்பன சங்கமத்தை,
அனைத்தும் புரிந்த கணத்தில்
அங்கதமாய் கைக்கொட்டிச் சிரிக்கும்
வேறுவழியில்லாத பிரம்மச்சரியம்..!

மோகம் :
வைகறை பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்..!

ஒரு கணிப்பொறியாளனின் கனவு:

ஒரு விடுமுறை நாளின்
மதியநேர தூக்கத்தில்,
செண்ணிற புரவியில்
வெண்ணிற ஆடையணிந்த
தேவதையொருத்தி வந்தாள்,
மெல்ல என் கரம் பற்றி,
எங்கோ மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி அமைத்த
ஒரு மஞ்சத்தில் இருத்தினாள்,
அப்போதுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதமென்று
தாவி அணைக்க முயல்கையில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்தால்,
நண்பனின் ஜாவா சந்தேகம்,
சந்தேகம் தீர்த்து
மீண்டும் கனவை
தொடர முயற்சித்தேன்,
முடியவில்லை-
ன் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது..!
(சென்ற ஆண்டு ஆகஸ்ட் பூங்கா இதழில் தேர்வாகியிருந்த கவிதை.)
முன்னாடி ரொம்ப பெருசா இருந்த இந்த கவிதையை முடிஞ்ச மட்டும் சுருக்கிட்டேன்,சுருக்கினதே இவ்வளோ பெருசா இருக்கு :)
டிஸ்கி : இவை ஏற்கனவே எழுதிய கவிதைகள்தான்,ஒரு மீள் பார்வைக்காக.

அம்மா..................!

அம்மா
எனக்காகத் துடிக்கும்
இன்னொரு இதயம்..!


அண்ணனுக்கு பதினாறு
வயதிருக்கும்போது
என்னை அடித்தான்,
அம்மா சொன்னாள்,
"அடிக்காதே அவன் சிறுபிள்ளையென்று"
இன்றும் என்னை அடிக்க வருகிறான்
இப்போதும் சொல்கிறாள் அதே வார்த்தைகளை,
இன்று எனக்கு வயது பதினாறு...!


டிஸ்கி:இது நான் பள்ளி நாட்களில் எழுதியது...

Sunday, November 23, 2008

காணாமல் போன பின்னணி பாடகிகள்:

கொஞ்ச காலங்களுக்கு முன் பல மறக்க முடியாத பாடல்களை பாடி,இன்று வாய்ப்புகள் குறைந்தோ அல்லது இல்லாமலோ போன பின்னணி பாடகியரை பற்றிய ஒரு சிறு நினைவூட்டலே இந்த பதிவு.

ஜென்ஸி:

1980 களின் ஆரம்பத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான ஒருசில படங்களில் நிறைய அசத்தலான பாடல்களை பாடிய தேன் குரலுக்கு சொந்தக்காரர். பாடிய அனைத்துப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டானது வேறெந்த பாடகிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு. கேரளாவில் அரசு வேலை கிடைத்ததும் அங்கேயே சென்று நிரந்தரமாக செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில் வெளியான இவரின் பேட்டியில் மீண்டும் பாடுவதற்கு ஆவலாக இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் "சரவெடி" படத்தில் பாடப்போகிறார் என்ற செய்தி வெளியாகிருக்கிறது.வந்து கலக்குங்க மேடம்.

இவர் பாடிய பாடல்கள் சில:

தெய்வீக ராகம் -உல்லாச பறவைகள்
என் வானிலே - ஜானி
என் உயிர் நீதானே-ப்ரியா
காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை
ஆயிரம் மலர்களே,இரு பறவைகள் - நிறம் மாறாத பூக்கள்.

உமா ரமணன்:
இசைப்பிரியர்கள் பலருக்கு விருப்பமான பாடலாக இருக்கும் 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலை பாடியவர். இவர் பாடும்போது வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் அத்தனை தெளிவாக இருக்கும். ஹைபிட்ச் பாடல்களை இவர் பாடும் விதம் அருமையாக இருக்கும்.ஏனோ இவர் பெரிதாக அங்கீகரிக்கப் படவில்லை என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகர் இசையில் புதையல் படத்தில் 'பூத்திருக்கும் மனமே' பாடலை பாடினார்.இவர் கடைசியாக திருப்பாச்சி படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு' பாடலை பாடியிருக்கிறார்.

இவர் பாடிய பாடல்கள் சில:

பூங்கதவே தாழ்திறவாய் - நிழல்கள்
ஆனந்த ராகம்-பன்னீர் புஷ்பங்கள்
பொன்மானே கோபம் ஏனோ-ஒரு கைதியின் டைரி
கஸ்தூரி மானே கல்யாண தேனே-புதுமைப் பெண்
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு- மெல்ல பேசுங்கள்
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - தென்றலே என்னை தொடு
ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை
நீ பாதி நான் பாதி கண்ணா - கேளடி கண்மணி

பி.எஸ்.சசிரேகா:
மெல்லிசை மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரின் திறமைக்கு, இளையராஜாவின் இசையில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இவர் பாடிய 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' பாடல் ஒரு சோறு பதம்.ஒரு காலத்தில் இசையமைப்பாளர்கள் மனோஜ் கியான் இசையில் வெளிவந்த படங்களில் தொடர்ச்சியாக பல பாடல்களை பாடிய இவர் கடைசியாக திரையில் பாடியது கிழக்குச் சீமை படத்தில். சிறிது நாட்களுக்கு முன் எஸ்.பி.பியுடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றபோது எஸ்.பி.பி இவரிடம் இப்போ உள்ள சில பாடகிகளை ஒப்பிடும்போது உன்னோட திறமைக்கு உனக்கு இன்னும் குறைந்தது 500 பாடல்களாவது பாடும் வாய்ப்பு வந்திருக்கணும் என்றதைக் கேட்டதும் மெலிதாக சிரித்தார் இருந்தாலும் அந்த சிரிப்பில் உரிய அங்கிகாரம் கிடைக்காத வேதனையே தெரிந்தது.இன்னும் அதே குரல்வளத்தோடு பாடுகிறார்.தற்போது மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருக்கிறார்.

இவரின் பாடல்கள் சில:

செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்தவா - செந்தூரப் பூவே
மாமரத்து பூவெடுத்து,ராத்திரி நேரத்து பூஜையில் - ஊமை விழிகள்
இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி - உயிருள்ளவரை உஷா
வரகு சம்பா முளைக்கலே - உழவன் மகன்

எஸ்.பி.ஷைலஜா:
எஸ்.பி.பியின் தங்கையான இவர் எண்பதுகளின் மத்தியில் இளையராஜாவின் இசையில் பல வெற்றி பாடல்களை பாடியவர். மெலடி மற்றும் குத்து இரண்டுக்குமே மிகப் பிரமாதமாக பொருந்தக் கூடிய வளமான குரலுக்குச் சொந்தக்காரர்.இவர் தனது அண்ணனோடு இணைந்து நிறைய டூயட் பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மாநகரக் காவல் படத்தில் வரும் 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர' பாடலைச் சொல்லலாம்.

இவரின் பாடல்கள் சில:

சோலைக் குயிலே - பொண்ணு ஊருக்கு புதுசு
ராசாவே உன்னத்தான் எண்ணித்தான் - தனிக்காட்டு ராஜா
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி
மாமன் மச்சான் - முரட்டுக் காளை
கட்ட வண்டி கட்ட வண்டி - சகலகலா வல்லவன்
சுனந்தா:

இந்த பதிவை பற்றிய சிந்தனைக்கு காரணமாய் இருந்தவர்.ரொம்ப பிரபலமான பாடல்களை பாடியிருந்தும் அதிகமாய் அறியப்படாத பாடகி. இவரது குரல் மெலடி பாடல்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும், குறிப்பாக தாலாட்டுப் பாடல்கள்.இவர் பாடிய பெரும்பாலான டூயட் பாடல்கள் ஜெயச்சந்திரன் அவர்களோடுதான். இளையராஜாவைத் தொடர்ந்து தேவா இசையிலும் பல தாலாட்டுப் பாடல்களை பாடியிருக்கிறார்.

இவரின் பாடல்கள் சில:

காதல் மயக்கம் - புதுமைப் பெண்
பூ முடித்து பொட்டு வைத்த - என் புருஷன்தான் எ.மட்டும்தான்.
ஆனந்தம் பொங்கிட பொங்கிட-சிறைப் பறவை
வெள்ள மனம் உள்ள மச்சான் - சின்ன வீடு
செண்பகமே செண்பகமே- எ.ஊ.பாட்டுக்காரன்
செம்மீனே செம்மீனே - செவ்வந்தி
மன்னவா மன்னவா - வால்டர் வெற்றிவேல்
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே - உழைப்பாளி


மின்மினி:

ஒரே நேரத்தில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொடர்ந்து பல படங்களுக்கு பாடல் பாடும் வாய்ப்பை பெற்றவர்.ரோஜாவில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை'க்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகி விருதைப் பெற்றவர்.ரொம்பவும் பிஸியாக இருந்த நேரத்தில் குரலில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பேசக்கூட முடியாத நிலையில் இசைத்துறையைவிட்டு எதிர்பாராமல் விலக நேர்ந்தது சோகம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் மீண்டும் பாடும் வாய்ப்பை பெற்றார்.அந்த பாடல் படத்தில் இருக்கிறதா என தெரியவில்லை.


இவர் பாடிய சில பாடல்கள்:

லவ்வுன்னா லவ்வு - மீரா
காற்றுப் பூவை பார்த்து - ஐ லவ் இண்டியா
மெதுவா தந்தியடிச்சானே - தாலாட்டு
மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி
பச்சை கிளி பாடும் ஊரு - கருத்தம்மா
பார்க்காதே பார்க்காதே - ஜென்டில் மேன்
சித்திரை நிலவு சேலையில் வந்தது - வண்டிச் சோலை சின்ராசு
சம்போ சம்போ - புதிய முகம்


அடுத்த பதிவில் பின்னணி பாடகர்களான தீபன் சக்கரவர்த்தி, எஸ்.என்.சுரேந்தர்,மனோ(??!!) இவர்களை பற்றி பார்ப்போம்.

Saturday, November 22, 2008

காணாமல் போன இசையமைப்பாளர்கள்:

ரொம்ப நாளைக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.இவ்வளவு அற்புதமான பாடல்களை தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன் ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இந்த பதிவு.

"கண்ணுக்குள் நூறு நிலவா","புத்தம் புது ஓலை வரும்"(வேதம் புதிது),
"பொங்கியதே காதல் வெள்ளம்"(மண்ணுக்குள் வைரம்) போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன் அவர்களின் இசையில் எனக்கு தெரிந்து இறுதியாக வெளிவந்த திரைப்படம் 90 களின் ஆரம்பத்தில் வெளியான புதிய தென்றல்.இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் கூட மிக நன்றாக இருக்கும்,குறிப்பாக எஸ்.பி.பி மற்றும் சித்ரா ஆகியோர் இணைந்து பாடியிருக்கும் "தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க" பாடலைச் சொல்லலாம்.

சௌந்தர்யன், நல்ல திறமையிருந்தும் ஏனோ இவரால் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.இவரது இசையமைப்பில் முதலில் வெளிவந்த திரைப்படம் சேரன் பாண்டியன்.
அந்த படத்தில் இடம்பெற்ற "சின்னத் தங்கம் ", "வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே" போன்ற அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட்டானவை.இந்த படத்தின் பாடல்களில் ஒன்றான
"காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" பாடலை எழுதியதும் இவரே.இவர் இசையமைத்த அடுத்த படம் சிந்து நதி பூ.இந்த படத்தின் பாடல்களும் கூட மிகப் பெரிய வெற்றி பெற்றவையே.இந்த படத்தில் இடம் பெற்ற
"மத்தாளம் கொட்டுதடி மனசு" இன்றும் கூட கிராமப்புறங்களில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடலாகும்.

"உன்னை தொட்ட தென்றல் இன்று என்னை தொட்டு சொன்னதொரு சேதி" என்ற அற்புதமான மெலடியோடு தலைவாசலைத் திறந்த பால பாரதி அமராவதியில் "தாஜ்மஹால் தேவையில்லை","புத்தம் புது மலரே", "உடலென்ன உயிரென்ன" என்ற எளிதில் மறக்க முடியாத பாடல்களை தந்து,"யாருப்பா இந்த இசையமைப்பாளர்" என்று இசைப்பிரியர்களின் புருவங்களை உயர்த்தவைத்து அத்தோடு காணாமல் போனவர்தான்.சமீபத்தில் ஏதோ ஒரு படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.

வி.எஸ்.நரசிம்மன்,ஒரு காலத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் இரண்டு மூன்று படங்களுக்கு தொடர்ச்சியாய் இசையமைத்தவர்.
இவர் இசையமைத்த அச்சமில்லை அச்சமில்லை படத்தில் இடம் பெற்ற "ஆவாரம் பூவு","ஓடுகிற தண்ணியிலே" ஆகிய பாடல்கள் இன்றும்கூட தொலைக்காட்சி நேயர்களால் விரும்பி கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்த பாடல்களை முதன் முதலில் கேட்டபோது இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.வி.எஸ்.நரசிம்மன் அவர்களின் இசையில் சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தில் இடம்பெற்ற
" செண்பகப் பூவைப் பார்த்து" பாடலும் அவரது இசைத்திறமையை எடுத்துக் காட்டிய ஹிட் பாடலே.

லவ் டுடே மூலம் "என்ன அழகு எத்தனை அழகு","ஏன் பெண்ணென்று பிறந்தாய்" என்று அசத்தலான பாடல்களோடு அறிமுகமாகி,"மலரே ஒரு வார்த்தை பேசு","சின்ன வெண்ணிலவே" என்று பூமகள் ஊர்வலத்திற்காக இசைவிருந்து படைத்த ஷிவா, சக்தி ("அச்சு வெல்லமே அச்சு வெல்லமே"), அரிச்சந்திரா("முந்தானச்சேலை முட்டுதா ஆளை") படங்களுக்கு இசையமைத்த ஆகோஷ்(ஆனந்த்,கோபால் சர்மா,ஷ்யாம்), வி.ஐ.பி மூலம் அறிமுகமாகி "மின்னல் ஒரு கோடி" பாடலைத் தந்த ரஞ்சித் பரோட்(உற்சாகம் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்).கௌரி மனோகரியில் "அருவிகூட ஜதி இல்லாமல் ஸ்வரங்கள் பாடுது" என்ற மிக அருமையான பாடலைத் தந்த இனியவன் போன்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமான படங்களிலே எல்லோரது கவனத்தையும் கவர்ந்து,பிறகு ஒரு சிலருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலும்,சிலருக்கு வாய்ப்பு கிடைத்தும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமலும் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர இன்னும் இரண்டு இசையமைப்பாளர்களின் கதை சற்று வித்யாசமாய் இருக்கும்.இவர்களை காணாமல் போனவர்கள் லிஸ்டிலும் சேர்க்க முடியாது, பிசியானவர்களின் வரிசையிலும் சேர்க்க முடியாது. திடீரென காணாமல் போவார்கள்,திடீரென நான்கைந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார்கள்.ஒருவர் "ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்"(மனசுக்குள் மத்தாப்பு),"சின்னப் பூவே மெல்ல பேசு" (சின்னப் பூவே மெல்ல பேசு) என்று ஆரம்பத்தில் அசத்தலான பாடல்களை தந்து பிறகு விக்ரமன் படத்தில் ஒரே டியூனை வைத்து ஏகப்பட்ட படங்களுக்கு "லாலாலாஆஆஆஆஆஆஆஆ" போட்ட எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றொருவர் அன்னை வயல் மூலம் "மல்லிகை பூவழகில்" என்று நல்ல பாடலோடு ஆரம்பித்து "செவ்வந்தி பூவெடுத்தேன்" என்று கோகுலத்தில் தனது திறமையை நிறுபித்து,உள்ளத்தை அள்ளித்தா என்று மிகப் பெரிய ஹிட்டெல்லாம் கொடுத்து பிறகு சில காப்பி&பேஸ்டெல்லாம் போட்டுவிட்டு இப்போது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டி நடுவராக இருக்கும் சிற்பி.

இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் இசையமைப்பாளர்கள் அறிமுகமான காலத்தில் இளையராஜா என்ற மிகப்பெரிய இசை சாம்ராஜ்யத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமலும் அல்லது தனக்கான தனி இசை அடையாளம் இலாமல் இளைராஜாவின் இசைப்பாணியை அப்படியே தொடர முயன்றதாலும்கூட அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் போயிருக்கலாம்.முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல்.

"ஏதோ நடக்கிறது","தோடிராகம் பாடவா","மல்லிகைப் பூ பூத்திருக்கு" போன்ற அழகான மெலடிகளையும், ரஜினி படங்கள்(மனிதன்,ராஜா சின்ன ரோஜா) உட்பட சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் பல படங்களுக்கு இசையமைத்த திரு.சந்திரபோஸ்,பாலைவனச் சோலை("மேகமே மேகமே"), பெண்மணி அவள் கண்மணி("மூங்கிலிலை காடுகளே"), சம்சாரம் அது மின்சாரம்("சம்சாரம் அது மின்சாரம்","ஜானகி தேவி") என்று எண்பதுகளின் மத்தியில் நிறைய படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ் மற்றும் செந்தூரப் பூவே,ஊமை விழிகள்,உரிமை கீதம்(மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்),வெளிச்சம்("துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே") போன்ற வசீகரிக்கும் பாடல்களைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்த மனோஜ் கியான் போன்ற ஒரு காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த இவர்களும் கூட காணாமல் போன லிஸ்ட்டில் இடம்பிடித்தது ஏனோ தெரியவில்லை.

அழகன்,வானமே எல்லை,ஜாதி மல்லி போன்ற படங்களுக்கு இசையமைத்த மரகதமணி(கீரவாணி),கொடிபறக்குது,கேப்டன் மகள் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹம்சலேகா, ரசிகன் ஒரு ரசிகை படத்திற்கு இசையமைத்த அமரர் ரவீந்திரன் மற்றும் பூவுக்குள் பூகம்பம்("அன்பே ஒரு ஆசை கீதம்") படத்திற்கு இசையமைத்த சங்கீத ராஜன் ஆகியோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது,காரணம் அவர்கள் தெலுங்கு மற்றும் மளையாளத்தின் முண்ணனி இசையமைப்பாளர்கள்.தமிழுக்கு அவ்வப்போது விருந்தாளிகளாய் வந்த இசையமைத்தவர்கள்.

கங்கை அமரன்,எஸ்.பி.பி மற்றும் டீ.ராஜேந்தர் ஆகியோர் இசையமைப்பதை முதன்மையான தொழிலாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

டிஸ்கி:உங்களுக்கு தெரிந்த காணாமல் போன இசையமைப்பாளர்களை பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க.
(அப்பாடா எவ்ளோ பெரிய பதிவு...)

Friday, November 21, 2008

காதல் சொன்ன கணங்கள்...2

எங்கள் வீட்டிற்கு
வழக்கமாய் வந்துபோகும் நீ,
இப்போது வரும்போதெல்லாம்,
யாரும் கேளாமலே
எதையாவது காரணம்
சொல்ல ஆரம்பித்தபோதும்..,

"சிறுவயதிலிருந்தே
ஒன்றாகவேதானே
சுற்றித் திரிவோம்.
இப்போது மட்டும்
ஏன் எல்லோரும் நம்மை
ஒரு மாதிரி பார்க்கிறாங்க?"என்று
இயல்பாய் பார்ப்பவர்கள் மீது
நீ சந்தேகபட்டபோதும்..,

"உங்க அண்ணன் படிக்கிற காலேஜ்ல
பொண்ணுங்களும் படிக்கிறாங்களா?"
என்று என் தங்கையிடம்
நீ கேட்டபோதும்.,

வழக்கம்போல்
சிறுபிள்ளைகளோடு
விளையாடிக் கொண்டிருக்கையில்,
எதிர்பட்ட என்னை பார்த்தததும்
முதன் முதலாய் வெட்கப்பட்டு
வீட்டுக்குள் ஓடிய போதும்..,

என் தங்கையிடம்,
நான் சொன்ன அறிவுரைகளை
அவள் கேட்டாளோ இல்லையோ
அனால் நீ அதன்படி
நடந்து கொண்டபோதும்..,
அறிந்து கொண்டேன்

என்மீதான உன் காதலை...!

Thursday, November 20, 2008

அவியல்-1

சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தபொழுது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி.சுமார் 25 லிருந்து 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் பட்டாளமும் அவர்களுடன் சில பெருசுகளும் நான் அமர்ந்திருந்த பகுதியில் அமர்ந்திருந்தனர்."ஏ மச்சான்,மாப்ள" என்று ஒருவருக்கொருவர் ஏக சத்தமாய் பேசிக்கொண்டே வந்தனர்.அவர்களின் பேச்சிலிருந்து நான் கவனித்தவரை அவர்கள் அனைவரும் குருவிகள்.அதில் ஒரு இளைஞர் பணிப்பெண் ஒருவரிடம் எதாவது சாப்பிட இருந்தா கொடுங்க என்று கேட்டார்,அந்த பெண்ணுக்கு புரியாமல் தமிழ் பேசும் மற்றொரு பணிப்பெண்ணை அவரிடத்தில் அனுப்பிவைத்தார்,அந்த பெண்ணும் இவரிடம் ஆங்கிலத்திலேயே கேட்க,நம்ம ஆளு அருகில் அமர்ந்திருந்த அவரின் நண்பரிடம் ,"மாப்ள, பசிக்குதுடா எதாவது இந்த புள்ளைக்கிட்ட கேளுடா ,என்னா பேசுதுன்னே புரியல" என்றதும் ,அந்த பணிப்பெண் சுதாரித்துக்கொண்டு அவரிடம் ,"உங்களுக்கு என்ன சார் வேண்டும்" என்று தமிழில் கேட்டதும், பார்ட்டி ஜெர்க்காகி அசடு வழிஞ்சிகிட்டே,"இத முன்னாடியே கேட்டிருக்கலாமே"என்று தனக்கு வேண்டியதை கூறிவிட்டு அந்த பெண் சென்றதும் "நல்லா கிளப்புறாளுங்கடா பீதிய" என்று வடிவேல் பாணியில் கூற ,அருகில் அமர்ந்திருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

****************************************

90களில் வந்த சில திரைப்பட பாடல்களின் வீடியோவை youtube தளத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.என்னுடைய அறை நணபர்,எப்போதுமே பழைய பாட்டையே கேட்டுகிட்டு இருக்கீங்க,ஏன் புது பாட்டெல்லாம் புடிக்காதா என்று கேட்டார்.அவருக்கு ஒரு சின்ன புன்னகையை மட்டும்தான் பதிலாக தரமுடிந்தது.அது என்னவோ தெரியலீங்க இப்போ வரும் பாட்டுகளிள் தொழில்நுட்ப ரீதியாய் எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் என்னுடைய பதின்ம வயதில் வெளிவந்த திரைப்பாடல்களை கேட்பதில் ஒரு அலாதி சுகம்,அந்த பாட்டுகளை கேட்கும் பொழுது அந்த பாடலை முதன் முதலாக கேட்டது தொடங்கி அப்போது நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் மனத்திரையில் ஓட ஆரம்பித்துவிடும்.ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.
(வயசாயிட்டு இருக்குள்ள.....)
****************************************

எனது நட்பு வட்டத்தில் ஒவ்வொருத்தராய் திருமண பந்தத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடன் 12-ம் வகுப்பு படித்த நண்பர் ஒருவரின் திருமணம் சென்ற வாரம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது.கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைத்திருக்கிறது,ஆனால் பள்ளி நண்பர்களை ஒரு சிலரைத்தவிர பலரை நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு சந்திக்கும் வாய்ப்பு அமையவேயில்லை.பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிறைய நண்பர்களை நண்பரின் திருமணத்தில் சந்தித்தது அருமையான தருணம்.நிறைய பேருக்கு ஒருவரை ஒருவர் அடையாளமே தெரியவில்லை.நண்பர்களில் சிலர் புதுமணத்தம்பதியராயும்,சிலர் குழந்தையோடு தொந்தியும் தொப்பையுமாக வந்திருக்க சில நன்பர்கள் இன்னும் கல்லூரி மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் அதே 12ம் வகுப்பு தோற்றத்திலேயே இருந்தது ஆச்சர்யம்.அனைவரும் ஒருவருக்கொருவர் கைபேசி எண்ணையும்,மின்னஞ்சல் முகவரியும் பரிமாறிக்கொண்டு ஆனந்த சோகத்தோடு பிரிந்தது நெகிழ்ச்சியான தருணம்.
****************************************

சமீபத்தில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திரைப்படங்கள் காணும் வாய்ப்பு அமைந்தது.முதல் படம் காதலில் விழுந்தேன், நாக்க முக்க புகழால் பார்க்க போனேன். பாட்டெல்லாம் நல்லா இருக்கு அதுவும் தோழியா என் காதலியா மற்றும் உன் தலைமுடி இரண்டு பாடல்களும் நல்ல மெலடிகள்.படம் பார்த்துவிட்டு குணா,காதலில் விழுந்தேன் மாதிரியே இருந்ததை பார்த்து செம்ம கடுப்பா வந்தது.அடுத்தது சக்கரக்கட்டி, இதுவும் டாக்ஸி டாக்ஸி பாடலால் கவர்ந்திழுக்கப்பட்டு போனதுதான்.இந்த படத்தை பற்றி என்ன சொல்றது,நிழலின் அருமை வெயில் தெரியிற மாதிரி முதல் நாள் பார்த்த காதலில் விழுந்தேனோட அருமை இந்த படத்தை பார்த்தபோதுதான் தெரிந்தது.

****************************************

நண்பர் ஒருவர் ,வீடு மற்றும் கடைகளுக்கு மார்பிள்ஸ்,டைல்ஸ் ஒட்டித்தரும் வியாபாரம் செய்து வருகிறார்.அவரிடத்தில் வேலைக்கு இருக்கும் நண்பர்கள் செய்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.சில நாட்களுக்கு முன்பு ஒருவரின் வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டுவதற்காக வேலையாட்களிடம் முகவரி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.வேலையாட்களும் சரியான விலாசத்திற்கு சென்று வீட்டு உரிமையாளரிடம் எங்கு டைல்ஸ் ஒட்ட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்கு வீட்டு உரிமையாளர்,இப்படியே நேரா போயி பார்த்தீங்கன்னா கோணி(சாக்கு) இருக்கிற அறை தெரியும் அதில் முதலில் ஒட்டுங்கள் என்றுகூறி வெளியில் சென்று விட்டாராம்.பிறகு எனது நண்பர் வேலை எப்படி நடக்கிறது என்பதை பார்ப்பதற்கு அங்கே சென்று பார்க்கும் பொழுது வேலையாட்கள் எல்லொரும் ஒரு இடத்தில் வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.என்னடா என்னாச்சு ஏன் வேலை செய்யாம இப்படி உட்கார்ந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு,"அட போங்கண்ணே அந்த ஆளு(வீட்டு உரிமையாளர்) கோணி இருக்கிற அறையில் முதலில் ஒட்டச் சொன்னார்.நாங்களும் எல்லா அறையையும் பார்த்துட்டோம் எல்லாமே நேராத்தான் இருக்கு ஒரு அறையும் கோணி(கோணலாக) இல்ல?" என்று சொல்லியிருக்கின்றனர்.இவனுங்கள வச்சுகிட்டு நான் என்னத்த செய்யுறதுன்னு புலம்பினார்.எனக்கு சிரிப்புதான் வந்தது.

Monday, November 17, 2008

என்னை மௌனமாக்கியவள் நீ..!

தன் பிம்பம்
தானென அறியாது,
கண்ணாடியை கொத்தும்
அடைக்கலங் குருவியாய்
உன் பிம்பம்
நானென அறியாது,
என்மேல் கோபப் படுகிறாய்..!


பாலில் கலந்த நீரை
பிரித்தறிந்த அன்னத்திடம்,
காதலில் கலந்த நம்மை
எது நீ,எது நானென
பிரித்தறிய சொல் பார்ப்போம்...!

என்னுள் எங்கோ
புதைந்திருந்த காதலுணர்வின்
மௌனத்தை கலைத்து ,
என்னை மௌனமாக்கியவள் நீ..!

மாறாத உண்மைகள் சில கூறு?
வேகமாய் சொல்கிறாய்,
"சூரியன் உதிப்பது கிழக்கு",
"வானின் நிறம் நீலம்",
"தேனின் சுவை இனிப்பு",
இப்படியாக
நீண்ட உன் பட்டியலில்,
நம் காதலும்
சேரும் என்பது
உனக்கேன் தோன்றவில்லை...!