Friday, November 21, 2008

காதல் சொன்ன கணங்கள்...2

எங்கள் வீட்டிற்கு
வழக்கமாய் வந்துபோகும் நீ,
இப்போது வரும்போதெல்லாம்,
யாரும் கேளாமலே
எதையாவது காரணம்
சொல்ல ஆரம்பித்தபோதும்..,

"சிறுவயதிலிருந்தே
ஒன்றாகவேதானே
சுற்றித் திரிவோம்.
இப்போது மட்டும்
ஏன் எல்லோரும் நம்மை
ஒரு மாதிரி பார்க்கிறாங்க?"என்று
இயல்பாய் பார்ப்பவர்கள் மீது
நீ சந்தேகபட்டபோதும்..,

"உங்க அண்ணன் படிக்கிற காலேஜ்ல
பொண்ணுங்களும் படிக்கிறாங்களா?"
என்று என் தங்கையிடம்
நீ கேட்டபோதும்.,

வழக்கம்போல்
சிறுபிள்ளைகளோடு
விளையாடிக் கொண்டிருக்கையில்,
எதிர்பட்ட என்னை பார்த்தததும்
முதன் முதலாய் வெட்கப்பட்டு
வீட்டுக்குள் ஓடிய போதும்..,

என் தங்கையிடம்,
நான் சொன்ன அறிவுரைகளை
அவள் கேட்டாளோ இல்லையோ
அனால் நீ அதன்படி
நடந்து கொண்டபோதும்..,
அறிந்து கொண்டேன்

என்மீதான உன் காதலை...!

No comments: