"நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை
நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்த பொழுதை"
"எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?"
"உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்க்கவில்லை
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை"
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை"
"அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை"
"காதல் என்ற சொல்லில் காமம் கொஞ்சம் உண்டு
இடையில் சின்ன கோடு அட அதுதான் ரொம்பப்பாடு"(பெரும்பாடு)
"ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே"
"காதல்வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை"
"அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்து
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்"
"பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா"
"உன்னை செய்த பிரம்மனே
உன்னை பார்த்து ஏங்குவான்".
இப்போதைக்கு இந்த பத்து பாடல்கள் போதும்,அடுத்தடுத பதிவுகளில் இன்னும் நிறைய வரிகளை பார்க்கலாம்.
கொசுறு:காதல் பாடல்கள் கொஞ்சம் அதிகமா இருக்குல்ல அது நம்மை அறியாம வர்ர விஷயம்.
:)
விடைகள்:
1.அந்த உச்சிமலை
காட்டக்கேளு பிச்சுமணி
பேரச்சொல்லும் -- எங்க தம்பி
2.சாதிமல்லி பூச்சரமே --- அழகன் --புலமைபித்தன்
3.ஒரு காதல் என்பது
என் நெஞ்சில் உள்ளது -- சின்னதம்பி பெரிய தம்பி
4.வானமழை போலே
புது பாடல்கள் -- இது நம்ம பூமி -- வாலி
5.காதல் இல்லாதது
ஒரு வாழ்க்கையாகுமா -- மணிரத்னம்
6.வா வா வா கண்ணா வா --- வேலைக்காரன் -- மு.மேத்தா
7.முத்தமிழே முத்தமிழே -- ராமன் அப்துல்லா -- அறிவுமதி
8.இளநெஞ்சே வா -- வண்ண வண்ண பூக்கள் -- வாலி
9.நினைத்து நினைத்து
பார்த்தேன் - - 7G ரெயின்போ காலனி - - ந.முத்துக்குமார்
10.அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
பாடலாசிரியர் பெயர்கள் நினைவில் இருந்ததை மட்டும் எழுதியிருக்கேன், விடுபட்ட பாடல்களின் பாடலாசிரியர் தெரிந்தால் சொல்லிட்டு போங்க.
No comments:
Post a Comment