Friday, June 5, 2009
உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பிற்கான எனது சிறுகதை :
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பிற்கான எனது சிறுகதை இங்கே.நேற்றே எழுதிவிட்டேன்,ஆனால் நேரங்கெட்ட நேரத்தில் வலையேற்றியதால் யாருமே கண்டுகொள்ளாமல் போனதால் மறுக்கா ஒருமுறை தமிழ்மணத்துல உலவவிட இந்த மொக்கை. இந்த மாசக் கடைசிவரை அவகாசம் இருப்பதால் சிறுகதை என்னும் பெயரில் இன்னும் நிறைய மொக்கைகள் என்னால் எழுதும் அபாயம் இருப்பதால் மேலே குறிப்பிட்டிருக்கும் எனது சிறுகதையை போட்டிக்கு அனுப்பலாமா இல்ல மறுக்கா விட்டத்தைவெறிச்சு வேற எதுனா எழுதனுமான்னு சொல்லுங்க மக்கா. வருகைக்கு நன்றி நன்றி நன்றி...!
Thursday, June 4, 2009
சின்னு
"இப்புடியே தூணுக்குத் தொணையா குந்திக்க,ஒரு ரெண்டாயிர்ருவா பொறட்டரதுக்குத் துப்பு இல்ல,நீயும் ஒரு ஆம்பள" என்று தனது கணவன் சங்கரனை காலையிலேயே அர்ச்சனை செய்துகொண்டிருந்தாள் விஜயா.
"நிறுத்துடி,காலையிலேயே ஒ ராமாயணத்தை ஆரம்பிக்காத நா என்ன சும்மாவா இருக்கே நாலு இடத்திலே சொல்லிவச்சிருக்கேன் பாப்போம்"
"ஆமா கிழிச்ச இன்னேரம் ஒ அக்கா தங்கச்சி வூட்டு தேவைன்னா என்னா பறபறப்ப, இன்னும் நாலு நாளுதா கெடக்கு ஏ அண்ண புள்ளய காதுகுத்து அதுக்குள்ள எதுனா தோது பண்ணல அப்பற நா மனுஷியாவே இருக்க மாட்டே"
ஒரு வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிகிட்டு இருக்கு, சங்கரனும் பட்டாளத்தார்வீடு, காரவீட்டு அய்யாத்தொரன்னு பலபேருகிட்ட கேட்டு பாத்துட்டான் ஒன்னும் வேலைக்காகல.
விஜயா இன்னும் ஏதோ திட்டிக்கிட்டே இருக்குறாங்றது வீட்டுக்குள்ள பாத்திரங்கள் உருளும் சத்தத்திலேயே தெரிந்தது, இனியும் இங்கே உட்கார்ந்திருந்தா இருக்கிற மானத்தையும் ஏலம் போடுவான்னு நினைத்து கொடியில் கிடந்த காசித்துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு வீட்டின் கூரையில் சொருகி வைத்த கணேஷ் பீடி கட்டில் பீடி ஒன்றை எடுத்து பத்த வைத்தபடியே கட்டிய லுங்கியோடு வெளியே கிளம்பினான் சங்கரன்.
சங்கரன் நல்ல பாட்டாளி விவசாய சம்பந்தமான அத்தனை வேலைகளையும் செய்வான். வேலையில் படுசுத்தம், வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாம உழைப்பான்.ஆனா சம்பாதிக்கிற காசுல பாதி சாராயத்துக்கும், பீடிக்குமே செலவழிச்சிடுவான். விஜயா அவனோட மாமன் மகள்தான் கல்யாணமாகி ஆறு வருஷம் முடியபோகுது, சங்கரன் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் பேரு மணிகண்டன் பஞ்சாயத்து பள்ளியில் ஒன்னாப்பு படிக்கிறான்.
சங்கரனுக்கு சொத்துன்னு பார்த்தா நாலு செண்ட் இடமும், ஒரு சின்ன குடிசையும், நாலு பசுமாடுகளும்தான்.மாடுகளை கவனித்துக் கொள்வது சங்கரனின் அம்மா சொர்ணம்.சொர்ணத்திற்கு அந்த மாடுகள்தான் உசுரு.
வீட்டிலிருந்து கிளம்பிய சங்கரன் கறம்பக்குடியான் டீக்கடையில் நுழைந்தான். எட்டுக்கு ஆறு அளவில் மூனுபக்கம் களிமண்ணால் எழுப்பப்பட்ட கட்டைசுவரும், அதோடு ஒட்டியபடி ரெண்டரையடி உயரத்தில் திண்ணையும், சிமெண்ட்டால் பூசப்பட்ட ஒரு அடுப்பு மேடையும், கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் "காதல் பரிசு" ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக இருப்பதுதான் கறம்பக்குடியான் டீக்கடை.
உள்ளூர் பெரியசாமி மக ஓடி போனதிலிருந்து உலக அரசியல்வரை கறம்பக்குடியானுக்கு அத்துப்படி. டீ குடிக்க வர்ற பெருசுங்க கறம்பக்குடியான் பேசுறத, கறம்பக்குடியான் பொண்டாட்டி சானம் போட்டு மெழுகி பச்சையா வச்சிருகிற வாசலை "பொளிச் பொளிச்"சுன்னு வெத்லாக்கு எச்சியைத் துப்பி சிவப்பாக்கிக்கிட்டே கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
"அண்ணே ஒரு டீ" என்ற சங்கரனிடம் டீயை நீட்டிய கறம்பக்குடியான், "சங்கரா, ஒன்னய பாத்தா வீட்டுக்கு வரச் சொல்லுன்னு பச்சத்துண்டுகாரு சொன்னாரப்பா" என்றார்.
ரெண்டு நாளைக்கு முன்னாடி பச்சத்துண்டுகாரிடம் பணம் கேட்டிருந்தது ஞாபகம்வர அவசர அவசரமாக கறம்பக்குடியானின் சக்கரத் தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு"கணக்குல வச்சுக்கண்ணே" என்று சொல்லியபடியே பச்சத்துண்டுகாரர் வீட்டிற்குச் சென்றான்.
பச்சத்துண்டுகாரர் எப்போதுமே தோளில் பச்சை கலர் சால்வைய அணிந்து இருப்பார். ஊரில் எல்லோரும் காசித்துண்டோடு இருக்கையில் குஞ்சமெல்லாம் வச்ச சால்வையை அணிந்து செல்வதை பெரிய கௌரவமாக நினைப்பார். மெட்ராஸ்ல வேல பாக்குற அவரு மகன் சுரேசு வந்தா அந்த துண்ட போட்டுக்க மாட்டாரு. அவனுக்கு அது புடிக்காது."யேம்ப்பா இத போட்டுகிட்டு எம் மானத்த வாங்குற ஃபிரண்ஸ்ல்லாம் கிண்டல் பண்றாங்க" என்பான். சுரேசுக்கு தெரியாது ஊருக்குள்ள நிறைய பேருக்கு பச்சத்துண்டுக்காரு மாதிரி நாமும் ஒரு சால்வ வாங்கணும்னு பெரிய லட்சியத்தோட இருக்கிறது.
"வாய்யா சங்கரா,காசு கேட்டிருந்தில்ல,ஒரு ஆயிர்ரூவா சாயங்காலமா வாங்கிக்க" என்ற பச்சத்துண்டுகாரர் கூடவே " கொஞ்சம் நெல்லு இருக்குது டி.என்.சியில போட்டுட்டு வந்திடு" என்றார். ஆத்திர அவசரத்திற்கு ஆயிரமோ ஐநூறோ பச்சத்துண்டுகாருதான் கொடுத்து உதவுவாரு அதனால இப்படி சின்ன சின்ன வேலைகளும் அவருக்கு அப்பப்போ ஓசியா செய்ய வேண்டியிருக்கும்.
ஆயிர்ரூவா பொறட்டியாச்சு இன்னும் ஆயிரந்தான் எப்படியாவது தேத்திடலான்னு மனதிலேயெ நினைத்தவன், சொன்ன வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.
"என்னாச்சு" என்றாள் விஜயா.
"ஆயிர்ருவா சாயங்காலமா பச்சத்துண்டுகார்ரு கொடுக்குரேன்னிருக்காரு"
"ஆயிரம் ஓவாயா,அத வச்சு என்னாத்த பண்றது. ஏற்கனவே ஏ அண்ணிக்காரி சாட பேசுறா, நீ சபையில ஏ மானத்த வாங்காமவிடமாட்ட போலிருக்கு" என்று மறுபடியும் ஆரம்பித்தவளிடம்,
"ஏண்டி எழவெடுத்தவளே, எந்தலய அடமான வச்சாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணிர்றேன்,செத்த நொய் நொய்யிங்காம வவுத்த பசிக்குது சோத்த போடுறியா" என்று சங்கரன் கோபமாய் சீறியபோது,
"ம்ம்மாமா..மா"அலறியது பசுமாடு.
"யம்மோவ்,சின்னு கத்துது பாரு அதுக்கு ரெண்டு எரயெடுத்து போடு"என்று தன் தாய் சொர்ணத்திடம் கூறினான் சங்கரன்.
"ம்ம்ம் சின்ன்ன்னு" என்று அழுத்தி இழுத்த விஜயா,"ஏய்யா இந்த கிழட்டு மாட்ட எதுக்கு இன்னமும் வச்சுக்கிட்டு இனிமேல் அது கன்னு ஈன போறதில்ல எதுக்கு தீனிக்குத் தெண்டமா கெடக்கு,பேசாம அத வித்துடலாம். நீயும் யார்கிட்டயும் போயி காசுக்காக கையகட்டி நிக்கவேண்டாம்"என்றாள். மேலும் "மாட்டுயாவாரி கோயிந்தன வரச்சொல்லி சட்டுபுட்டுன்னு தள்ளிவுட்ற வழிய பாரு" என்றாள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்குத் தூக்கிவாரி போட்டது. பெத்தப் புள்ளயாட்டமா வளத்த மாட்ட அடிமாட்டுக்கு விக்க சொல்றாளே என எண்ணிக்கொண்டே சங்கரன் என்ன சொல்ல போறானோன்னு ஏற்கனவே தட்டி முடித்த ராட்டிக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் மெதுவா தட்டியவாறே காதைத் தீட்டினாள்.
ஒரு வாரமா பணத்துக்காக கிடந்து அலைந்ததை நினைத்துப் பார்த்த சங்கரன் விஜயாவின் யோசனைக்கு சரியென்று தலையாட்டினான்.
அன்னிக்கி ராத்திரி முச்சூடும் சொர்ணத்தால தூங்க முடியல, பதினஞ்சு வருசத்துக்கு முந்தி சின்னுவை ஈன்ற மூனாவது நாளே அதன் தாய், பாம்பு கடித்து இறந்து போக, சொர்ணந்தான் புட்டி பால் கொடுத்து சின்னு என்று பேர் வைத்து புள்ள மாதிரி வளர்த்து வந்தாள். சொர்ணம் கிணற்றுக்கு தண்ணி எடுக்க போறப்பவெல்லாம் கூடவே சின்னுவும் ஒவ்வொரு நடைக்கும் சொர்ணத்தோடவே போய் வந்து கொண்டிருக்கும். தண்ணியெடுக்க வர்ற மற்ற பொம்பளைங்க "என்ன சொர்ணத்தக்கா ஒம்மவ ஒன்னிய விட்டு பிரியமாட்டாளா"என்று கிண்டலடிப்பார்கள். அப்போவெல்லாம்"ஆமாண்டி சொன்னாலும் சொல்லாட்டியும் எம்மவதான்" என்று கூறியபடியே சின்னுவின் முகத்தைத் வருடி திருஷ்டி முறிப்பாள்.
சின்னு முதல் கன்றை ஈன்றபோது நல்லபடியா கன்றை ஈன்றுவிட்டால் பாலத்தளி செல்லியம்மனுக்கு மொட்டை போடுறதா வேண்டிகிட்டு மொட்டை போட்டுக்கொண்டது, சின்னுவின் பால் காசில் தன் மகள் செல்வியை கட்டிக் கொடுத்தது, ஒரு முறை சங்கரன் குடித்துவிட்டு வந்தபோது சொர்ணம் அவனை ஏதோ திட்டிவிட,சங்கரன் கோபத்தில் சொர்ணத்தை கீழே தள்ளிவிட்டபோது பக்கத்தில் நின்ற சின்னு சங்கரனை ஒரே முட்டாக முட்டியது என ஒன்னு ஒன்னா நினைவுக்கு வந்து அவளை தூங்கவிடாமல் செய்தது. பாதி ராத்திரியில் எழுந்து கொட்டடியில் கட்டிகிடந்த சின்னுவின் அருகில் போய் அமர்ந்துகொண்டு சின்னுவின் தாடையை மெதுவாக தடவி கொண்டிருந்தாள், காவேரி வெள்ளத்தை கண்ணில் கொண்டபடியே.
காலையிலேயே மாட்டுயாவாரி கோயிந்தன் வந்து நின்னதை எதிர்பார்க்காத சங்கரன், "என்னய்யா கோயிந்தா,நானே ஒன்னய பாக்கனும்னுட்டு இருந்தேன்" என்றான்.
"மாடு நிக்குதாம்ல,அதா பார்த்துட்டு போலாம்னு வந்தேன்" என்ற கோவிந்தன் அதே ஊரச் சேர்ந்த மாட்டு வியாபாரி, கேரளாவிற்கு மாடுகளை வாங்கி அனுப்புவதுதான் அவனுக்குத் தொழில்.
"கொப்ப மவளே என்னா வேகமா வேல பாத்திருக்கா" என்று விஜயாவை மனசுக்குள்ளேயே திட்டிக்கொண்டு, சின்னு கட்டி கிடக்கும் கொட்டடிக்கு கோவிந்தனை அழைத்துச் சென்றான் சங்கரன்.
படுத்துக்கிடந்த சின்னுவின் முதுகில் கோவிந்தன் தட்டியதும்,சோம்பல் முறித்தபடி எழுந்து நின்ற சின்னுவை சுற்றிவந்து பார்த்த கோவிந்தன், "டங்கரா இத ரெண்டுவருடத்துக்கு முன்னாடியே வித்துருக்கணுமப்பா" என்றான். கோவிந்தனுக்கு "ச" வரிசை உச்சரிக்க வராது, 'ச'வுக்கு பதில 'ட' சவுன்ட்தான் வரும். இதில என்ன கொடுமைன்னா அவன் பொண்டாட்டி பேரு சரசு. கல்யாணமான புதுசுல இவன் "டரடு டரடு" சொன்னத கேட்டு மெரண்டுபோன சரசு தன் பேரையே இவனுக்காக ராணின்னு மாத்திக்கிட்டா.
"டங்கரா மாட்டுல வெறுந்தோலுதான் இருக்கு" என்று தன் யாவார புத்தியோட பேசிக்கிட்டே"என்ன வெல சொல்ற?" என்றான்.
"நீயே சொல்லுய்யா,என்ன கொடுக்கலாம்"
"இல்லப்பா ஒனக்கு ஒரு கணக்கு இருக்குமுல்ல"
"சரி ரெண்டாயிரத்தைனூறு கொடுத்துட்டு ஓட்டிக்க"
"என்னப்பா நக்கலா பண்ற, ஆயிரத்தைனூறுதான் எங்கணிப்பு. அதுக்கு மேல இதில ஒன்னுமில்ல"
"யோவ் ஒ மாட்டுயாவாரி புத்திய காட்டாம உள்ளூருகார மாதிரி பேசு, கொஞ்சம் பாத்து சொல்லுய்யா"
"டரி உனக்கு வேண்டா எனக்கு வேண்டா, ஆயிரத்தி எண்ணூறு இதுக்குமேல பிடிறாதே" என்று கூறிக்கொண்டே சங்கரன் கையில் நூறு ரூபாய் அட்வான்ஸையும் திணித்துவிட்டு இரண்டு நாள் கழித்து மாட்டை ஓட்டிக் கொள்வதாக சொல்லிவிட்டுச் சென்றான்.
சங்கரன் வாங்கிய அட்வான்ஸை பார்த்தும் விஜயாவும்,சொர்ணமும் எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்.இருவரின் கண்ணிலும் நீர்.
அடுத்த ரெண்டு நாளும் சொர்ணத்தால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இதற்கு முன் எத்தனையோ தடவை மாடுகளை விற்றிருக்கிறாள்,ஆனால் சின்னு விஷயத்தில் மட்டும் அவளால் ஏதோ மாடுதானேன்னு இருக்க முடியவில்லை. வழக்கம் போல் மாடு மேய்க்க போனவளின் அருகிலேயே நின்று மேய்ந்து கொண்டிருந்த சின்னு, சொர்ணத்தின் கையை வந்து முகர்ந்து பார்த்தது, எப்போதும் எதாவது தீணி கொறித்துக்கொண்டே இருக்கும் சொர்ணம் சின்னுவுக்கும் ஊட்டிவிடுவது வழக்கம். இன்றைக்கும் அந்த நினைப்பில் கையை முகர்ந்து பார்த்த சின்னுவை,"சனியன போ அங்கிட்டு " என்று கையில் வைத்திருந்த குச்சியால் அடித்து விரட்டி தன் ஆற்றாமையை சின்னுவிடம் காட்டினாள்.
இதை எதிர்பாராத சின்னு சற்று மிரண்டு சிறிது ஓடி திரும்பி சொர்ணத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது.
இரண்டு நாள் கழித்து அந்த ஏரியாவில் வாங்கிய நிறைய மாடுகளை லாரியில் ஏற்றியபடியே வந்து இறங்கிய கோவிந்தனையும், லாரியில் விழிபிதுங்கி நிற்கும் மாடுகளையும் பார்த்த சொர்ணத்திற்கு சின்னுவை நினைத்து துக்கம் தொண்டையை அடைத்தது.
லாரியைவிட்டு இறங்கிவந்த கோவிந்தன் சங்கரனிடம்,"இந்தாப்பா மீதி பணம் டரியா இருக்கான்னு பாத்துக்க, அப்படியே மாட்டையும் கயிறு மாத்தி புடிட்டுக்கொடு" என்றான்.
"கோயிந்தா, ரெண்டு நாளா மனசே சரியில்லப்பா, இந்த மாட்ட பெத்த புள்ளயாட்டமா வளத்துட்டோம் அதப் போயி அறுப்புக்கு கொடுக்க மனசு ஒப்பல, சாகரவரைக்கும் அது இங்கனயே கெடந்துட்டு போகட்டும், எம் பொண்டாட்டிதான் ஏதுனா திட்டுவா அவ என்ன புதுசாவா திட்டப்போறா. இந்தா நீ கொடுத்த அட்வான்ஸ், கோச்சுக்காதப்பா" என்றபடியே சங்கரன் அட்வான்ஸ்ஸைத் திருப்பிக் கொடுத்ததைப் பார்த்த சொர்ணம் சின்னுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு " எம் மக்க்க்க்...கா" என்று விம்மி வெடித்து அழத்தொடங்கினாள்.
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
"நிறுத்துடி,காலையிலேயே ஒ ராமாயணத்தை ஆரம்பிக்காத நா என்ன சும்மாவா இருக்கே நாலு இடத்திலே சொல்லிவச்சிருக்கேன் பாப்போம்"
"ஆமா கிழிச்ச இன்னேரம் ஒ அக்கா தங்கச்சி வூட்டு தேவைன்னா என்னா பறபறப்ப, இன்னும் நாலு நாளுதா கெடக்கு ஏ அண்ண புள்ளய காதுகுத்து அதுக்குள்ள எதுனா தோது பண்ணல அப்பற நா மனுஷியாவே இருக்க மாட்டே"
ஒரு வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிகிட்டு இருக்கு, சங்கரனும் பட்டாளத்தார்வீடு, காரவீட்டு அய்யாத்தொரன்னு பலபேருகிட்ட கேட்டு பாத்துட்டான் ஒன்னும் வேலைக்காகல.
விஜயா இன்னும் ஏதோ திட்டிக்கிட்டே இருக்குறாங்றது வீட்டுக்குள்ள பாத்திரங்கள் உருளும் சத்தத்திலேயே தெரிந்தது, இனியும் இங்கே உட்கார்ந்திருந்தா இருக்கிற மானத்தையும் ஏலம் போடுவான்னு நினைத்து கொடியில் கிடந்த காசித்துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு வீட்டின் கூரையில் சொருகி வைத்த கணேஷ் பீடி கட்டில் பீடி ஒன்றை எடுத்து பத்த வைத்தபடியே கட்டிய லுங்கியோடு வெளியே கிளம்பினான் சங்கரன்.
சங்கரன் நல்ல பாட்டாளி விவசாய சம்பந்தமான அத்தனை வேலைகளையும் செய்வான். வேலையில் படுசுத்தம், வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாம உழைப்பான்.ஆனா சம்பாதிக்கிற காசுல பாதி சாராயத்துக்கும், பீடிக்குமே செலவழிச்சிடுவான். விஜயா அவனோட மாமன் மகள்தான் கல்யாணமாகி ஆறு வருஷம் முடியபோகுது, சங்கரன் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் பேரு மணிகண்டன் பஞ்சாயத்து பள்ளியில் ஒன்னாப்பு படிக்கிறான்.
சங்கரனுக்கு சொத்துன்னு பார்த்தா நாலு செண்ட் இடமும், ஒரு சின்ன குடிசையும், நாலு பசுமாடுகளும்தான்.மாடுகளை கவனித்துக் கொள்வது சங்கரனின் அம்மா சொர்ணம்.சொர்ணத்திற்கு அந்த மாடுகள்தான் உசுரு.
வீட்டிலிருந்து கிளம்பிய சங்கரன் கறம்பக்குடியான் டீக்கடையில் நுழைந்தான். எட்டுக்கு ஆறு அளவில் மூனுபக்கம் களிமண்ணால் எழுப்பப்பட்ட கட்டைசுவரும், அதோடு ஒட்டியபடி ரெண்டரையடி உயரத்தில் திண்ணையும், சிமெண்ட்டால் பூசப்பட்ட ஒரு அடுப்பு மேடையும், கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் "காதல் பரிசு" ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக இருப்பதுதான் கறம்பக்குடியான் டீக்கடை.
உள்ளூர் பெரியசாமி மக ஓடி போனதிலிருந்து உலக அரசியல்வரை கறம்பக்குடியானுக்கு அத்துப்படி. டீ குடிக்க வர்ற பெருசுங்க கறம்பக்குடியான் பேசுறத, கறம்பக்குடியான் பொண்டாட்டி சானம் போட்டு மெழுகி பச்சையா வச்சிருகிற வாசலை "பொளிச் பொளிச்"சுன்னு வெத்லாக்கு எச்சியைத் துப்பி சிவப்பாக்கிக்கிட்டே கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
"அண்ணே ஒரு டீ" என்ற சங்கரனிடம் டீயை நீட்டிய கறம்பக்குடியான், "சங்கரா, ஒன்னய பாத்தா வீட்டுக்கு வரச் சொல்லுன்னு பச்சத்துண்டுகாரு சொன்னாரப்பா" என்றார்.
ரெண்டு நாளைக்கு முன்னாடி பச்சத்துண்டுகாரிடம் பணம் கேட்டிருந்தது ஞாபகம்வர அவசர அவசரமாக கறம்பக்குடியானின் சக்கரத் தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு"கணக்குல வச்சுக்கண்ணே" என்று சொல்லியபடியே பச்சத்துண்டுகாரர் வீட்டிற்குச் சென்றான்.
பச்சத்துண்டுகாரர் எப்போதுமே தோளில் பச்சை கலர் சால்வைய அணிந்து இருப்பார். ஊரில் எல்லோரும் காசித்துண்டோடு இருக்கையில் குஞ்சமெல்லாம் வச்ச சால்வையை அணிந்து செல்வதை பெரிய கௌரவமாக நினைப்பார். மெட்ராஸ்ல வேல பாக்குற அவரு மகன் சுரேசு வந்தா அந்த துண்ட போட்டுக்க மாட்டாரு. அவனுக்கு அது புடிக்காது."யேம்ப்பா இத போட்டுகிட்டு எம் மானத்த வாங்குற ஃபிரண்ஸ்ல்லாம் கிண்டல் பண்றாங்க" என்பான். சுரேசுக்கு தெரியாது ஊருக்குள்ள நிறைய பேருக்கு பச்சத்துண்டுக்காரு மாதிரி நாமும் ஒரு சால்வ வாங்கணும்னு பெரிய லட்சியத்தோட இருக்கிறது.
"வாய்யா சங்கரா,காசு கேட்டிருந்தில்ல,ஒரு ஆயிர்ரூவா சாயங்காலமா வாங்கிக்க" என்ற பச்சத்துண்டுகாரர் கூடவே " கொஞ்சம் நெல்லு இருக்குது டி.என்.சியில போட்டுட்டு வந்திடு" என்றார். ஆத்திர அவசரத்திற்கு ஆயிரமோ ஐநூறோ பச்சத்துண்டுகாருதான் கொடுத்து உதவுவாரு அதனால இப்படி சின்ன சின்ன வேலைகளும் அவருக்கு அப்பப்போ ஓசியா செய்ய வேண்டியிருக்கும்.
ஆயிர்ரூவா பொறட்டியாச்சு இன்னும் ஆயிரந்தான் எப்படியாவது தேத்திடலான்னு மனதிலேயெ நினைத்தவன், சொன்ன வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.
"என்னாச்சு" என்றாள் விஜயா.
"ஆயிர்ருவா சாயங்காலமா பச்சத்துண்டுகார்ரு கொடுக்குரேன்னிருக்காரு"
"ஆயிரம் ஓவாயா,அத வச்சு என்னாத்த பண்றது. ஏற்கனவே ஏ அண்ணிக்காரி சாட பேசுறா, நீ சபையில ஏ மானத்த வாங்காமவிடமாட்ட போலிருக்கு" என்று மறுபடியும் ஆரம்பித்தவளிடம்,
"ஏண்டி எழவெடுத்தவளே, எந்தலய அடமான வச்சாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணிர்றேன்,செத்த நொய் நொய்யிங்காம வவுத்த பசிக்குது சோத்த போடுறியா" என்று சங்கரன் கோபமாய் சீறியபோது,
"ம்ம்மாமா..மா"அலறியது பசுமாடு.
"யம்மோவ்,சின்னு கத்துது பாரு அதுக்கு ரெண்டு எரயெடுத்து போடு"என்று தன் தாய் சொர்ணத்திடம் கூறினான் சங்கரன்.
"ம்ம்ம் சின்ன்ன்னு" என்று அழுத்தி இழுத்த விஜயா,"ஏய்யா இந்த கிழட்டு மாட்ட எதுக்கு இன்னமும் வச்சுக்கிட்டு இனிமேல் அது கன்னு ஈன போறதில்ல எதுக்கு தீனிக்குத் தெண்டமா கெடக்கு,பேசாம அத வித்துடலாம். நீயும் யார்கிட்டயும் போயி காசுக்காக கையகட்டி நிக்கவேண்டாம்"என்றாள். மேலும் "மாட்டுயாவாரி கோயிந்தன வரச்சொல்லி சட்டுபுட்டுன்னு தள்ளிவுட்ற வழிய பாரு" என்றாள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்குத் தூக்கிவாரி போட்டது. பெத்தப் புள்ளயாட்டமா வளத்த மாட்ட அடிமாட்டுக்கு விக்க சொல்றாளே என எண்ணிக்கொண்டே சங்கரன் என்ன சொல்ல போறானோன்னு ஏற்கனவே தட்டி முடித்த ராட்டிக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் மெதுவா தட்டியவாறே காதைத் தீட்டினாள்.
ஒரு வாரமா பணத்துக்காக கிடந்து அலைந்ததை நினைத்துப் பார்த்த சங்கரன் விஜயாவின் யோசனைக்கு சரியென்று தலையாட்டினான்.
அன்னிக்கி ராத்திரி முச்சூடும் சொர்ணத்தால தூங்க முடியல, பதினஞ்சு வருசத்துக்கு முந்தி சின்னுவை ஈன்ற மூனாவது நாளே அதன் தாய், பாம்பு கடித்து இறந்து போக, சொர்ணந்தான் புட்டி பால் கொடுத்து சின்னு என்று பேர் வைத்து புள்ள மாதிரி வளர்த்து வந்தாள். சொர்ணம் கிணற்றுக்கு தண்ணி எடுக்க போறப்பவெல்லாம் கூடவே சின்னுவும் ஒவ்வொரு நடைக்கும் சொர்ணத்தோடவே போய் வந்து கொண்டிருக்கும். தண்ணியெடுக்க வர்ற மற்ற பொம்பளைங்க "என்ன சொர்ணத்தக்கா ஒம்மவ ஒன்னிய விட்டு பிரியமாட்டாளா"என்று கிண்டலடிப்பார்கள். அப்போவெல்லாம்"ஆமாண்டி சொன்னாலும் சொல்லாட்டியும் எம்மவதான்" என்று கூறியபடியே சின்னுவின் முகத்தைத் வருடி திருஷ்டி முறிப்பாள்.
சின்னு முதல் கன்றை ஈன்றபோது நல்லபடியா கன்றை ஈன்றுவிட்டால் பாலத்தளி செல்லியம்மனுக்கு மொட்டை போடுறதா வேண்டிகிட்டு மொட்டை போட்டுக்கொண்டது, சின்னுவின் பால் காசில் தன் மகள் செல்வியை கட்டிக் கொடுத்தது, ஒரு முறை சங்கரன் குடித்துவிட்டு வந்தபோது சொர்ணம் அவனை ஏதோ திட்டிவிட,சங்கரன் கோபத்தில் சொர்ணத்தை கீழே தள்ளிவிட்டபோது பக்கத்தில் நின்ற சின்னு சங்கரனை ஒரே முட்டாக முட்டியது என ஒன்னு ஒன்னா நினைவுக்கு வந்து அவளை தூங்கவிடாமல் செய்தது. பாதி ராத்திரியில் எழுந்து கொட்டடியில் கட்டிகிடந்த சின்னுவின் அருகில் போய் அமர்ந்துகொண்டு சின்னுவின் தாடையை மெதுவாக தடவி கொண்டிருந்தாள், காவேரி வெள்ளத்தை கண்ணில் கொண்டபடியே.
காலையிலேயே மாட்டுயாவாரி கோயிந்தன் வந்து நின்னதை எதிர்பார்க்காத சங்கரன், "என்னய்யா கோயிந்தா,நானே ஒன்னய பாக்கனும்னுட்டு இருந்தேன்" என்றான்.
"மாடு நிக்குதாம்ல,அதா பார்த்துட்டு போலாம்னு வந்தேன்" என்ற கோவிந்தன் அதே ஊரச் சேர்ந்த மாட்டு வியாபாரி, கேரளாவிற்கு மாடுகளை வாங்கி அனுப்புவதுதான் அவனுக்குத் தொழில்.
"கொப்ப மவளே என்னா வேகமா வேல பாத்திருக்கா" என்று விஜயாவை மனசுக்குள்ளேயே திட்டிக்கொண்டு, சின்னு கட்டி கிடக்கும் கொட்டடிக்கு கோவிந்தனை அழைத்துச் சென்றான் சங்கரன்.
படுத்துக்கிடந்த சின்னுவின் முதுகில் கோவிந்தன் தட்டியதும்,சோம்பல் முறித்தபடி எழுந்து நின்ற சின்னுவை சுற்றிவந்து பார்த்த கோவிந்தன், "டங்கரா இத ரெண்டுவருடத்துக்கு முன்னாடியே வித்துருக்கணுமப்பா" என்றான். கோவிந்தனுக்கு "ச" வரிசை உச்சரிக்க வராது, 'ச'வுக்கு பதில 'ட' சவுன்ட்தான் வரும். இதில என்ன கொடுமைன்னா அவன் பொண்டாட்டி பேரு சரசு. கல்யாணமான புதுசுல இவன் "டரடு டரடு" சொன்னத கேட்டு மெரண்டுபோன சரசு தன் பேரையே இவனுக்காக ராணின்னு மாத்திக்கிட்டா.
"டங்கரா மாட்டுல வெறுந்தோலுதான் இருக்கு" என்று தன் யாவார புத்தியோட பேசிக்கிட்டே"என்ன வெல சொல்ற?" என்றான்.
"நீயே சொல்லுய்யா,என்ன கொடுக்கலாம்"
"இல்லப்பா ஒனக்கு ஒரு கணக்கு இருக்குமுல்ல"
"சரி ரெண்டாயிரத்தைனூறு கொடுத்துட்டு ஓட்டிக்க"
"என்னப்பா நக்கலா பண்ற, ஆயிரத்தைனூறுதான் எங்கணிப்பு. அதுக்கு மேல இதில ஒன்னுமில்ல"
"யோவ் ஒ மாட்டுயாவாரி புத்திய காட்டாம உள்ளூருகார மாதிரி பேசு, கொஞ்சம் பாத்து சொல்லுய்யா"
"டரி உனக்கு வேண்டா எனக்கு வேண்டா, ஆயிரத்தி எண்ணூறு இதுக்குமேல பிடிறாதே" என்று கூறிக்கொண்டே சங்கரன் கையில் நூறு ரூபாய் அட்வான்ஸையும் திணித்துவிட்டு இரண்டு நாள் கழித்து மாட்டை ஓட்டிக் கொள்வதாக சொல்லிவிட்டுச் சென்றான்.
சங்கரன் வாங்கிய அட்வான்ஸை பார்த்தும் விஜயாவும்,சொர்ணமும் எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்.இருவரின் கண்ணிலும் நீர்.
அடுத்த ரெண்டு நாளும் சொர்ணத்தால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இதற்கு முன் எத்தனையோ தடவை மாடுகளை விற்றிருக்கிறாள்,ஆனால் சின்னு விஷயத்தில் மட்டும் அவளால் ஏதோ மாடுதானேன்னு இருக்க முடியவில்லை. வழக்கம் போல் மாடு மேய்க்க போனவளின் அருகிலேயே நின்று மேய்ந்து கொண்டிருந்த சின்னு, சொர்ணத்தின் கையை வந்து முகர்ந்து பார்த்தது, எப்போதும் எதாவது தீணி கொறித்துக்கொண்டே இருக்கும் சொர்ணம் சின்னுவுக்கும் ஊட்டிவிடுவது வழக்கம். இன்றைக்கும் அந்த நினைப்பில் கையை முகர்ந்து பார்த்த சின்னுவை,"சனியன போ அங்கிட்டு " என்று கையில் வைத்திருந்த குச்சியால் அடித்து விரட்டி தன் ஆற்றாமையை சின்னுவிடம் காட்டினாள்.
இதை எதிர்பாராத சின்னு சற்று மிரண்டு சிறிது ஓடி திரும்பி சொர்ணத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது.
இரண்டு நாள் கழித்து அந்த ஏரியாவில் வாங்கிய நிறைய மாடுகளை லாரியில் ஏற்றியபடியே வந்து இறங்கிய கோவிந்தனையும், லாரியில் விழிபிதுங்கி நிற்கும் மாடுகளையும் பார்த்த சொர்ணத்திற்கு சின்னுவை நினைத்து துக்கம் தொண்டையை அடைத்தது.
லாரியைவிட்டு இறங்கிவந்த கோவிந்தன் சங்கரனிடம்,"இந்தாப்பா மீதி பணம் டரியா இருக்கான்னு பாத்துக்க, அப்படியே மாட்டையும் கயிறு மாத்தி புடிட்டுக்கொடு" என்றான்.
"கோயிந்தா, ரெண்டு நாளா மனசே சரியில்லப்பா, இந்த மாட்ட பெத்த புள்ளயாட்டமா வளத்துட்டோம் அதப் போயி அறுப்புக்கு கொடுக்க மனசு ஒப்பல, சாகரவரைக்கும் அது இங்கனயே கெடந்துட்டு போகட்டும், எம் பொண்டாட்டிதான் ஏதுனா திட்டுவா அவ என்ன புதுசாவா திட்டப்போறா. இந்தா நீ கொடுத்த அட்வான்ஸ், கோச்சுக்காதப்பா" என்றபடியே சங்கரன் அட்வான்ஸ்ஸைத் திருப்பிக் கொடுத்ததைப் பார்த்த சொர்ணம் சின்னுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு " எம் மக்க்க்க்...கா" என்று விம்மி வெடித்து அழத்தொடங்கினாள்.
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
Monday, June 1, 2009
எங்க ஊரில் கிளிக்கியவை...........
மாங்கா மாங்கா கொத்து மாங்கா மார்க்கெட் போகின்ற குண்டு மாங்கா.கமெண்ட் பார்த்து கண்ணை கட்டுதா இதில ஒரு லெமெனை புழிஞ்சிக்கோங்க.
Sunday, May 10, 2009
சூரியனுக்கு டார்ச் அடிக்கிறேன்.
பொதுவாக பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை பெரும்பாலும் வாசிப்பதில்லை.விகடனில் வெளியான கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் கொஞ்ச வாரங்கள் தொடர்ந்து வாசித்துவிட்டு பிறகு புத்தகம் வந்த பிறகே முழுமூச்சாய் வாசித்து முடித்தேன்.ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் பொறுமை இருப்பதில்லை.
அதே போன்றே வலைப்பூக்களிலும் சிலர் எழுதும் தொடர் புனைவுகள் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன ஆனாலும் அவற்றையும் தொடர்ந்து வாசிப்பதில்லை.முழுதாக எழுதி முடிக்கட்டும் என்று காத்திருக்கிறேன்.(உ.ம்:நர்சிம் அவ்ர்கள் எழுதிவரும் மாறவர்மன்).இப்படி தொடர் கதைகளை வாரா வாரம் காத்திருந்து வாசிக்கும் பொறுமையில்லாத எனக்கு என்னையுமறியாமல் ஒரு தொடர்கதையை தொடந்து ஏழு வாரமாக வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு பிரபலத்தின் எழுத்து.
பொதுவாக வர்ணனை என்றாலே தாண்டி போய்விடும் என்னை இவரின் வர்ணனைகள்,"எங்கே இதை படிக்காமல் தாண்டி சென்றுவிடு பார்ப்போம்? என்று சவால் விடக்கூடிய வகையில் ரசனையாக இருக்கிறது. வாசித்த பின் அந்த காட்சியை ஒட்டிய கற்பனைகளில் ஒரு சில நிமிடங்களாவது வாசிப்போரை சஞ்சரிக்க வைத்துவிடுகிறார்.
அவரின் கதாபாத்திரங்கள் என்னென்ன உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறதோ அதே உணர்ச்சிகளை வாசகனுக்கும் துள்ளியமாக கடத்துகிறது அவரின் எழுத்தின் ஆழுமை.
"விலை உயர்ந்த ஷேம்பேன் நுரையைப் போல மூச்சுக் காற்றுப் பட்டாலே கரைந்து விடுவாளோ என்பதைப் போல மெல்லிய சதை அவளுக்கு. "
"இன்னும் பிறக்காத ஆண்கள் கூட அவளது உதட்டுச் சிவப்பின் முத்தத்துக்கு ஆசைப் படுவார்கள்"
"போதை மருந்துத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டிய அவளது மார்புகள்"
"அருகருகே இரண்டு ராமேஸ்வரம் கடல்களைக் கண்டாற் போல் இருந்தது அவளது கண்கள்."
"மீண்டும் ஒரு வாய் பீர் குடித்தவுடன்தான் நான் இந்த உலகத்து போதைக்கு வந்து நார்மலானேன்"
"மதர்த்த பெண்ணிடம் வரும் தீராத ஆசையும்,பெற்ற தாயிடம் வரும் கனிந்த பாசமும் என்னுள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் பிரவிகித்தன"
"இரண்டு அழகான பெண்களை ஒரே நேரத்தில் பார்ப்பது இரண்டு நாசிகளாலும் ஒரே நேரத்தில் மூச்சு விடுவதைப் போல சிரமமாக இருந்ததால் நான் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டேன்"
"அவளது உள்ளங்கையில் இருந்தால் எந்த மலரும் ஒரு வாரத்துக்கு வாடாது.அவ்வளவு குளுமையான,மிருதுவான கைகள்."
மேலே குறிப்பிட்டிருப்பது அக்கதையில் வரும் ஒரு சில வர்ணனைகள்,ஒரு சிலருக்கு இப்போதே புரிந்திருக்கும் எந்த கதையை பற்றி சொல்கிறேனென்று. ஆம் இயக்குனர் திரு.ஷண்முகப்ரியன் அவர்கள் தனது வலைப்பூவான படித்துறையில் எழுதிவரும் "கன்னிகா"வை(வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்) இன்னமும் நிறைய பேருக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற ஒரு ஆர்வத்தில்தான் சூரியனுக்கு டார்ச் அடிக்கும் வேலையாக இந்த பதிவு. மேலும் தொடர் கதை மட்டுமல்லாமல் பல்வேறு சுவாரஸ்யமான பதிவுகளை மிக ஆழமான கருத்துக்களோடும் எழுதிவருகிறார்.அவரின் வலைபூவிற்கு இந்த வழியாக போங்க.
அதே போன்றே வலைப்பூக்களிலும் சிலர் எழுதும் தொடர் புனைவுகள் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன ஆனாலும் அவற்றையும் தொடர்ந்து வாசிப்பதில்லை.முழுதாக எழுதி முடிக்கட்டும் என்று காத்திருக்கிறேன்.(உ.ம்:நர்சிம் அவ்ர்கள் எழுதிவரும் மாறவர்மன்).இப்படி தொடர் கதைகளை வாரா வாரம் காத்திருந்து வாசிக்கும் பொறுமையில்லாத எனக்கு என்னையுமறியாமல் ஒரு தொடர்கதையை தொடந்து ஏழு வாரமாக வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு பிரபலத்தின் எழுத்து.
பொதுவாக வர்ணனை என்றாலே தாண்டி போய்விடும் என்னை இவரின் வர்ணனைகள்,"எங்கே இதை படிக்காமல் தாண்டி சென்றுவிடு பார்ப்போம்? என்று சவால் விடக்கூடிய வகையில் ரசனையாக இருக்கிறது. வாசித்த பின் அந்த காட்சியை ஒட்டிய கற்பனைகளில் ஒரு சில நிமிடங்களாவது வாசிப்போரை சஞ்சரிக்க வைத்துவிடுகிறார்.
அவரின் கதாபாத்திரங்கள் என்னென்ன உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறதோ அதே உணர்ச்சிகளை வாசகனுக்கும் துள்ளியமாக கடத்துகிறது அவரின் எழுத்தின் ஆழுமை.
"விலை உயர்ந்த ஷேம்பேன் நுரையைப் போல மூச்சுக் காற்றுப் பட்டாலே கரைந்து விடுவாளோ என்பதைப் போல மெல்லிய சதை அவளுக்கு. "
"இன்னும் பிறக்காத ஆண்கள் கூட அவளது உதட்டுச் சிவப்பின் முத்தத்துக்கு ஆசைப் படுவார்கள்"
"போதை மருந்துத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டிய அவளது மார்புகள்"
"அருகருகே இரண்டு ராமேஸ்வரம் கடல்களைக் கண்டாற் போல் இருந்தது அவளது கண்கள்."
"மீண்டும் ஒரு வாய் பீர் குடித்தவுடன்தான் நான் இந்த உலகத்து போதைக்கு வந்து நார்மலானேன்"
"மதர்த்த பெண்ணிடம் வரும் தீராத ஆசையும்,பெற்ற தாயிடம் வரும் கனிந்த பாசமும் என்னுள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் பிரவிகித்தன"
"இரண்டு அழகான பெண்களை ஒரே நேரத்தில் பார்ப்பது இரண்டு நாசிகளாலும் ஒரே நேரத்தில் மூச்சு விடுவதைப் போல சிரமமாக இருந்ததால் நான் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டேன்"
"அவளது உள்ளங்கையில் இருந்தால் எந்த மலரும் ஒரு வாரத்துக்கு வாடாது.அவ்வளவு குளுமையான,மிருதுவான கைகள்."
மேலே குறிப்பிட்டிருப்பது அக்கதையில் வரும் ஒரு சில வர்ணனைகள்,ஒரு சிலருக்கு இப்போதே புரிந்திருக்கும் எந்த கதையை பற்றி சொல்கிறேனென்று. ஆம் இயக்குனர் திரு.ஷண்முகப்ரியன் அவர்கள் தனது வலைப்பூவான படித்துறையில் எழுதிவரும் "கன்னிகா"வை(வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்) இன்னமும் நிறைய பேருக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற ஒரு ஆர்வத்தில்தான் சூரியனுக்கு டார்ச் அடிக்கும் வேலையாக இந்த பதிவு. மேலும் தொடர் கதை மட்டுமல்லாமல் பல்வேறு சுவாரஸ்யமான பதிவுகளை மிக ஆழமான கருத்துக்களோடும் எழுதிவருகிறார்.அவரின் வலைபூவிற்கு இந்த வழியாக போங்க.
Friday, May 8, 2009
இரண்டு கவிதைகளும்,ஒரு தத்துவமும்.
மௌனங்களில்...
மனிதம் கருதி
மௌனிக்கிறேன்,
எனது மௌனங்களின்
மொழிபெயர்ப்புகளில்
இருப்பதில்லை மனிதம்..!
ரகசியங்களின் ரகசியம்:
"யாரிடமும் சொல்லாதே" என்றே
என்னிலிருந்து
வெளிப்படும் ரகசியங்கள்
என்னிடமே வருகிறது
"யாரிடமும் சொல்லாதே" என்று..!
"உன்னைச் சுற்றி பொய்களிருக்க,
நீ பேசும் உண்மை உன்னை பொய்யனாக்கும்".
மேலே இருப்பது இரண்டும் கவிதை (அதான் மடக்கி மடக்கி எழுதி ஆச்சர்யக்குறி போட்டிருக்கோம்ல).
மூன்றாவதாக இருப்பது தத்துவம் :))
மனிதம் கருதி
மௌனிக்கிறேன்,
எனது மௌனங்களின்
மொழிபெயர்ப்புகளில்
இருப்பதில்லை மனிதம்..!
ரகசியங்களின் ரகசியம்:
"யாரிடமும் சொல்லாதே" என்றே
என்னிலிருந்து
வெளிப்படும் ரகசியங்கள்
என்னிடமே வருகிறது
"யாரிடமும் சொல்லாதே" என்று..!
"உன்னைச் சுற்றி பொய்களிருக்க,
நீ பேசும் உண்மை உன்னை பொய்யனாக்கும்".
மேலே இருப்பது இரண்டும் கவிதை (அதான் மடக்கி மடக்கி எழுதி ஆச்சர்யக்குறி போட்டிருக்கோம்ல).
மூன்றாவதாக இருப்பது தத்துவம் :))
Thursday, May 7, 2009
இளைய திலகம் பிரபு....
பர்ஸனலா எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக்(இப்போ அவர் காமடி பண்ணிட்டு இருக்காரு).இவரைப் பற்றி ஒரு பதிவு எழுதி வேறு யாரேனும் எழுதியிருக்கிறார்களா என வலையில் தேடிய போது அருண்மொழிவர்மனின் இந்த பதிவும்,முரளி கண்ணனின் இந்த பதிவும் நான் எழுதி வைத்திருந்தது ஒன்றுமே இல்லையென்று நினைக்க வைத்ததால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்.
1982-ல் சங்கிலியில் சிவாஜியுடன் அறிமுகமாகி தொடர்ந்து நீதிபதி, நேர்மை, சாதனை,வெள்ளை ரோஜா என மேலும் சில படங்களிளும் சிவாஜியுடன் நடித்துக்கொண்டிருந்த பிரபு பிறகு கோழிக்கூவுது,சூரக்கோட்டை சிங்கக்குட்டி போன்ற படங்களின் மூலம் தனிக் கதாநாயகன் ஆனார்.(ரெண்டிலுமே சில்க் ஸ்மிதாதான் ஜோடி).
இந்த படங்களின் வெற்றியால்(வெற்றி படங்கள்தானே முரளி கண்ணன்) அன்றைய நயந்தாரா,திரிஷாக்களான அம்பிகா,ராதா போன்ற பெரிய நடிகைகளுடன் ஜோடிசேர்ந்து முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.
1987 ல் வெளியான ஆனந்த் படம் இவரை ஒரு நல்ல நடிகராகவும்,அதே படத்தில் இடம்பெற்ற "ஓல ஓலக் குடிசையிலே" பாடல் பிரபுவை ஒரு சிறந்த டான்ஸராகவும் அடையாளப்படுத்தியது."எப்படி இந்த உடம்பை தூக்கிட்டு அசத்தலா ஆடுறான் பாரு" என அப்போதைய சினிமா ரசிகர்களை ஆச்சர்ய படுத்தினார்.ஆனந்த் படத்திற்கு பிறகுதான் இளம் ரசிக,ரசிகைகள் அவருக்கு கிடைத்தார்கள் என்றால் மிகையில்லை.
முன்னணி நாயகனாக வலம் வந்த போதே எந்தவித ஈகோவும் இல்லாமல் அறிமுக நாயகர்கள் முதல் பெரிய நடிகர்கள்வரை எல்லோருடனும் இரண்டு நாயகர்களில் ஒருவராக சேர்ந்து நடித்த பெருமை தமிழ் திரையுலகில் இவரை மட்டுமே சாரும்.அதுவும் குறிப்பாக அப்போதிருந்த முன்னணி நடிகர்களான ரஜினி(குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,சந்திரமுகி),கமல்(வெற்றி விழா,வசூல்ராஜா),விஜயகாந்த்(காலையும் நீயே மாலையும் நீயே),சத்யராஜ்(சின்னத்தம்பி பெரியதம்பி,பாலைவன ரோஜாக்கள்,சிவசக்தி), கார்த்திக்(அக்னி நட்சத்திரம்,உரிமை கீதம்,தை பொறந்தாச்சு,குஸ்தி) ஆகிய எல்லோருடனும் இணைந்து நடித்திருக்கிறார்.
1986ம் வருடம் வெளிவந்த அறுவடை நாளில் பிரபுவும் அவரது அண்ணன் ராம்குமாரும் நடிப்பில் அசத்திருப்பார்கள்.இந்த படம்தான் பின்னாளில் பல படங்களில் அவர் ஏற்று நடித்த வெகுளித்தனமான கதாநாயக பாணிக்கு பிள்ளையார்சுழி போட்டது எனலாம்."சின்னப் பூவே மெல்ல பேசு","ஒருவர் வாழும் ஆலயம்" போன்ற படங்களில் இவர் கதாநாயகன் இல்லையென்றாலும் அப்படங்களில் இவர் எற்று நடித்த கதாபாத்திரங்களாலேயே அந்த படங்கள் பேசப்பட்டன.
எனக்கு பிடித்த இன்னொரு நடிகர் இளைய திலகம் பிரபு,நேற்று டீ.வியில் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் பார்த்தபோது திடிரென அவரைப் பற்றி ஒரு பதிவு போடலாம்னு தோணியதன் உடனடி விளைவு இப்பதிவு.
1982-ல் சங்கிலியில் சிவாஜியுடன் அறிமுகமாகி தொடர்ந்து நீதிபதி, நேர்மை, சாதனை,வெள்ளை ரோஜா என மேலும் சில படங்களிளும் சிவாஜியுடன் நடித்துக்கொண்டிருந்த பிரபு பிறகு கோழிக்கூவுது,சூரக்கோட்டை சிங்கக்குட்டி போன்ற படங்களின் மூலம் தனிக் கதாநாயகன் ஆனார்.(ரெண்டிலுமே சில்க் ஸ்மிதாதான் ஜோடி).
இந்த படங்களின் வெற்றியால்(வெற்றி படங்கள்தானே முரளி கண்ணன்) அன்றைய நயந்தாரா,திரிஷாக்களான அம்பிகா,ராதா போன்ற பெரிய நடிகைகளுடன் ஜோடிசேர்ந்து முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.
1987 ல் வெளியான ஆனந்த் படம் இவரை ஒரு நல்ல நடிகராகவும்,அதே படத்தில் இடம்பெற்ற "ஓல ஓலக் குடிசையிலே" பாடல் பிரபுவை ஒரு சிறந்த டான்ஸராகவும் அடையாளப்படுத்தியது."எப்படி இந்த உடம்பை தூக்கிட்டு அசத்தலா ஆடுறான் பாரு" என அப்போதைய சினிமா ரசிகர்களை ஆச்சர்ய படுத்தினார்.ஆனந்த் படத்திற்கு பிறகுதான் இளம் ரசிக,ரசிகைகள் அவருக்கு கிடைத்தார்கள் என்றால் மிகையில்லை.
முன்னணி நாயகனாக வலம் வந்த போதே எந்தவித ஈகோவும் இல்லாமல் அறிமுக நாயகர்கள் முதல் பெரிய நடிகர்கள்வரை எல்லோருடனும் இரண்டு நாயகர்களில் ஒருவராக சேர்ந்து நடித்த பெருமை தமிழ் திரையுலகில் இவரை மட்டுமே சாரும்.அதுவும் குறிப்பாக அப்போதிருந்த முன்னணி நடிகர்களான ரஜினி(குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,சந்திரமுகி),கமல்(வெற்றி விழா,வசூல்ராஜா),விஜயகாந்த்(காலையும் நீயே மாலையும் நீயே),சத்யராஜ்(சின்னத்தம்பி பெரியதம்பி,பாலைவன ரோஜாக்கள்,சிவசக்தி), கார்த்திக்(அக்னி நட்சத்திரம்,உரிமை கீதம்,தை பொறந்தாச்சு,குஸ்தி) ஆகிய எல்லோருடனும் இணைந்து நடித்திருக்கிறார்.
1986ம் வருடம் வெளிவந்த அறுவடை நாளில் பிரபுவும் அவரது அண்ணன் ராம்குமாரும் நடிப்பில் அசத்திருப்பார்கள்.இந்த படம்தான் பின்னாளில் பல படங்களில் அவர் ஏற்று நடித்த வெகுளித்தனமான கதாநாயக பாணிக்கு பிள்ளையார்சுழி போட்டது எனலாம்."சின்னப் பூவே மெல்ல பேசு","ஒருவர் வாழும் ஆலயம்" போன்ற படங்களில் இவர் கதாநாயகன் இல்லையென்றாலும் அப்படங்களில் இவர் எற்று நடித்த கதாபாத்திரங்களாலேயே அந்த படங்கள் பேசப்பட்டன. பிறகு 90களில் பிரபு,குஷ்பு,பி.வாசு கூட்டணி "சின்னத்தம்பி"யில் ஆரம்பித்து பல வெற்றிபடங்களை கொடுத்தனர். பி.வாசுவின் படங்களில்தான் பிரபுவின் கண்ணக்குழி சிரிப்பு,திரு திரு முழிப்பு போன்ற பிரபுவின் மேனரிஸங்கள் பிரபலமாகியது எனலாம். மற்ற முன்னணி நடிகர்களைப் போன்றே இவரின் 100வது படமான ராஜகுமாரனும் ஊத்திக்கொண்டது இதே 90களின் நடுவில்தான்.(விதி விலக்கு விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்).
"சின்னத்தம்பி பெரியதம்பி""அரங்கேற்ற வேளை","சின்ன மாப்ளே","வியட்னாம் காலனி" போன்ற படங்களில் இவரின் காமடி கலாட்டாக்கள் நினைத்தாலே சிரிப்பை வரவைக்கக் கூடியவை.அந்த அளவிற்கு காமெடியிலும் தனது திறமையை நிறுபித்தவர்.கெஸ்ட் ரோலில் இவர் நடித்த "அஞ்சலி","பிரியங்கா" ஆகிய படங்களிலும் சிறிது நேரமே வந்தாலும் அந்த படங்களை நினைக்கும்போது இவரின் நினைவு வருவது இவரின் நடிப்பின் திறமைக்குச் சான்று.

"சின்னத்தம்பி பெரியதம்பி""அரங்கேற்ற வேளை","சின்ன மாப்ளே","வியட்னாம் காலனி" போன்ற படங்களில் இவரின் காமடி கலாட்டாக்கள் நினைத்தாலே சிரிப்பை வரவைக்கக் கூடியவை.அந்த அளவிற்கு காமெடியிலும் தனது திறமையை நிறுபித்தவர்.கெஸ்ட் ரோலில் இவர் நடித்த "அஞ்சலி","பிரியங்கா" ஆகிய படங்களிலும் சிறிது நேரமே வந்தாலும் அந்த படங்களை நினைக்கும்போது இவரின் நினைவு வருவது இவரின் நடிப்பின் திறமைக்குச் சான்று.
1994 - 1995 வருடங்களில் விஜய், அஜித் போன்ற இளம் நடிகர்களின் அறிமுகமான சமயத்தில் இவர்காலத்து நடிகர்களுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய நேரத்தில்தான் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் "டூயட்" வாய்ப்பும்,இயக்குனர் இமயத்தின் "பசும்பொன்னும்" இவருக்கு கிடைத்தது.இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்த பெருமை அவருக்கு கிடைத்தற்காக பெருமைபட்டிருப்பார்.
பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியதும்,"திருப்பதி ஏழுமலை வெங்கடேசா","கந்தா கடம்பா கதிர்வேலா","பட்ஜெட் பத்மநாபன்","பந்தா பரமசிவம்" போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் ஃபீல்ட் அவுட்டான ரோஜா,ரம்பா போன்ற நாயகிகளுடன் சேர்ந்து நடித்தார்.இவற்றில் சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றன.
அதன் பிறகு கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் தன் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கத்தொடங்கி "சம்திங் சம்திங்", "தாமிரபரணி","பில்லா","அயன்" என்று பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் பிரபு விளம்பரங்களிலும் அசத்துகிறார்.
கார்த்திக்கும் பிரபு பாணியை கையாண்டிருந்தால் என்னை போன்ற கார்த்திக்கின் ரசிகர்களுக்கு நன்றாக இருந்திருக்கும்.(ச்சே என்ன மாதிரி நடிகன் இப்படி கோமாளி மாதிரி சித்திரிப்பட்டுவிட்டார் அரசியலில்). மணிரத்னத்தின் "ராவணா"வில் இருவரும் நடித்துவருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.பார்ப்போம் அக்னி நட்சத்திரங்கள் என்ன செய்திருக்கிறார்களென்று.
Wednesday, May 6, 2009
கேபிள் டீவியின் வருகையும் இயல்பை தொலைத்த கிராமங்களும்.
சின்ன பசங்க நாங்க என்னும் இந்த பதிவில் என்னுடைய சிறுபிராயத்தின் விளையாட்டுகளையும்,அந்த விளையாட்டுகளை கிரிக்கெட் எப்படி ஓரங்கட்டியது என்பதை எங்க ஊரு 20 - 20 என்னும் இந்த பதிவிலும் எழுதியதைத் தொடர்ந்து இன்று கேபிள் டீவியின் வருகையால் தன் சுயத்தை இழந்து கொண்டிருக்கிற எனது கிராமத்தின் இன்றைய நிலையை இப்பதிவில் காண்போம்.
2001ம் வருடம்தான் கேபிள் டீவி இணைப்பு எங்க ஊருக்கு வந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும், ஞாயிற்றுக்கிழமைக்கும் காத்திருந்து ஒளியும் ஒலியும் மற்றும் கருப்பு வெள்ளை திரைப்படமுமே பார்த்தவர்களுக்கு,இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன படங்களும்,புதுப் புது பாட்டுகளும் மொத்தமாய் சிறுசுங்க முதல் பெருசுங்கவரை டீ.வியின் முன் கட்டிப்போட்டது.
குழந்தைகள் அடுத்தவங்க வீட்டில் டீ.வி பார்க்கபோறத விரும்பாத அம்மாக்கள்(சீரியல் பார்க்க குழந்தைகளை சாக்காக வைத்து) உடனேயே தங்கள் வீட்டிற்கும் டீ.வி வாங்க ஆரம்பித்து டீ.வியின் எண்ணிக்கை பெருக பெருக சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.
வழக்கம்போல் சாயங்காலம் கிரிக்கெட் விளையாட கிளம்பினால் "பங்காளி இன்னைக்கு தலைவர் படம் போடுறான், நாளைக்கு விளையாடுவோண்டா" என ஆரம்பித்து வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தனின் தலைவர் படங்களுக்கும் ஒவ்வொருத்தனும் இப்படியே சொல்ல தினமும் கிரிக்கெட் விளையாடியது போக வாரத்திற்கு ஒரு நாள் , இரண்டு நாட்கள் என விளையாடுவது குறைந்தது. நாங்களாவது இன்றைக்கும் அப்பப்போ கிரிக்கெட் விளையாடுகிறோம் ஆனால் எங்களின் ஜூனியர்கள் முற்றிலும் WWE வில்(ரெஸ்லிங்) ஐக்கியமாகியும்,அவர்களின் ஜூனியர்ஸ் ஜெடிக்ஸ் போன்ற சேனல்களில் வரும் சாகச வீரர்களிடமும் ஒன்றிப்போய்கிடக்கிறார்கள்.
ஆற்காட்டார் புண்ணியத்தில் அப்பப்போ வீட்டைவிட்டு வெளியே வரும்போதும்கூட இவர்கள் விளையாடுவது டீவியில் பார்த்த அதே காட்சிகளின் சாகச நாயகர்களாக தங்களை பாவித்துக் கொண்டு "ஆ ஊ" என கத்தியும்,குத்தியும் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கிராமபுறத்து இளைஞர்கள் எப்போதும் உடல் வலிமைமிக்கவர்களாக இயல்பிலேயே இருப்பார்கள்.காரணம் உடல்வலிமையை மறைமுகமாக தந்துகொண்டிருந்த விளையாட்டுகள் கிராமங்களில் நிறைய இருந்ததுதான். இனிவரும் தலைமுறை அப்படியிருக்க வாய்ப்பில்லை,இந்த டீ.வி அவர்களை முழுச் சோம்பேறிகளாக்கி வைத்திருக்கிறது. உட்கார்ந்துகூட பார்ப்பதில்லை, படுத்து கொண்டேதான் டீவி பார்க்கிறார்கள்,விளைவு கொஞ்ச நேரம் நின்னாலே இடுப்புக்கு கையை முட்டுகொடுக்க வேண்டியிருக்கிறது.
நாங்க சின்ன பசங்களா இருந்தபோது இப்படி வீட்டிற்குள்ளே உட்கார்ந்திருந்தால் பெற்றோர்கள் "ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்க வெளிலபோயி கைய கால உதறி நாலுபேரோட சேர்ந்து விளையாடு"என்று கூறுவார்கள்.ஆனால் இப்போ வெயிலில் கிடந்து அலையாதே கருத்து போயிடுவ(விளம்பர குழந்தைகளின் சிவப்பு படுத்தும்பாடு), ஊர்பயலுவலோட சேராம இங்கேயே டீவிய பாரு" என்று பசங்களின் தாய்குலங்களே சொல்கிறார்கள்.இப்படிதான் நகர்கிறது இன்றைய எங்க ஊர்ப் பசங்களின் கோடைவிடுமுறை.
பசங்களின் நிலை இப்படியென்றால் ஒட்டுமொத்த கிராமத்தின் நிலை இன்னும் பரிதாபம்.முன்னெல்லாம் இரவு பத்து மணிவரை ஆள்நடமாட்டம் வீதிகளிள் தெரியும், இப்போது ஆறு மணியாகிவிட்டால் "மேகலா" விற்காகவும், " கஸ்தூரி"க்காகவும் கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள் தங்கமணிகள். தங்கமணிகள் மட்டுமல்ல ரங்கமணிகளும் இப்போது சீரியல் வலையில் சிக்கியிருக்கிறார்கள்.கிராமத்தில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஊரே திரண்டுவிடும்.இப்போது வீட்டிற்கு பக்கத்திலேயே எதாவது அசம்பாவிதம் நடந்தாலும்கூட எதுவுமே தெரியாமல் "என் கடன் டீ.வி பார்ப்பதே" என்றிருக்கிறார்கள்.
இப்போது வீட்டிற்கு வீடு கலைஞர் டீ.வி.வேறு(இது சேனல் இல்லை தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சியைத்தான் இப்படி சொல்றாங்க).கூலி வேலை செய்யும் இடத்தில் எப்போதும் அடுத்தவங்க வீட்டு கதை பேசும் பெண்கள் இப்போது அபியின் கல்யாண பேச்சில் இருக்கிறார்கள்(இது ஒன்னுதான் நல்ல விஷயம்னு நினைக்கிறேன்). எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென்றால்கூட அன்றைய சீரியலின் சூழல்தான் இவர்களின் பயணத்தை போகலாமா? வேண்டாமா என்று நிர்ணயிக்கின்ற அளவு சீரியல் பைத்தியம் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது.இது இப்படியே தொடர்ந்தால் "யாருக்கு எது நடந்தா நமக்கென்ன" என்றிருக்கும் நகரபாணி வாழ்க்கை கிராமங்களிலும் வந்துவிடக்கூடிய சூழல் ரொம்ப தூரத்தில் இல்லை.
எப்படி கிரிக்கெட் எங்க ஊரின் பாரம்பரிய விளையாட்டுகளை மறக்கடிக்கச் செய்ததோ,அதே மாதிரியே இந்த டீ.வியின் மோகம் கிராமங்களின் தனித்துவத்தையும், இயல்பு நிலையையும் தொலையச் செய்து கொண்டிருக்கிறது. பாரதி இப்போதிருந்தால் "என்று தணியும் இந்த டீ.வியின் மோகம்" என்று பாடியிருப்பார்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு எனது கிராமத்தில் சில நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்த மாதிரியான மாற்றங்களைக் கண்டு வேதனையாக இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருப்பது ஒரே ஆறுதலான விஷயம்.
2001ம் வருடம்தான் கேபிள் டீவி இணைப்பு எங்க ஊருக்கு வந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும், ஞாயிற்றுக்கிழமைக்கும் காத்திருந்து ஒளியும் ஒலியும் மற்றும் கருப்பு வெள்ளை திரைப்படமுமே பார்த்தவர்களுக்கு,இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன படங்களும்,புதுப் புது பாட்டுகளும் மொத்தமாய் சிறுசுங்க முதல் பெருசுங்கவரை டீ.வியின் முன் கட்டிப்போட்டது.
குழந்தைகள் அடுத்தவங்க வீட்டில் டீ.வி பார்க்கபோறத விரும்பாத அம்மாக்கள்(சீரியல் பார்க்க குழந்தைகளை சாக்காக வைத்து) உடனேயே தங்கள் வீட்டிற்கும் டீ.வி வாங்க ஆரம்பித்து டீ.வியின் எண்ணிக்கை பெருக பெருக சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.
வழக்கம்போல் சாயங்காலம் கிரிக்கெட் விளையாட கிளம்பினால் "பங்காளி இன்னைக்கு தலைவர் படம் போடுறான், நாளைக்கு விளையாடுவோண்டா" என ஆரம்பித்து வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தனின் தலைவர் படங்களுக்கும் ஒவ்வொருத்தனும் இப்படியே சொல்ல தினமும் கிரிக்கெட் விளையாடியது போக வாரத்திற்கு ஒரு நாள் , இரண்டு நாட்கள் என விளையாடுவது குறைந்தது. நாங்களாவது இன்றைக்கும் அப்பப்போ கிரிக்கெட் விளையாடுகிறோம் ஆனால் எங்களின் ஜூனியர்கள் முற்றிலும் WWE வில்(ரெஸ்லிங்) ஐக்கியமாகியும்,அவர்களின் ஜூனியர்ஸ் ஜெடிக்ஸ் போன்ற சேனல்களில் வரும் சாகச வீரர்களிடமும் ஒன்றிப்போய்கிடக்கிறார்கள்.
ஆற்காட்டார் புண்ணியத்தில் அப்பப்போ வீட்டைவிட்டு வெளியே வரும்போதும்கூட இவர்கள் விளையாடுவது டீவியில் பார்த்த அதே காட்சிகளின் சாகச நாயகர்களாக தங்களை பாவித்துக் கொண்டு "ஆ ஊ" என கத்தியும்,குத்தியும் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கிராமபுறத்து இளைஞர்கள் எப்போதும் உடல் வலிமைமிக்கவர்களாக இயல்பிலேயே இருப்பார்கள்.காரணம் உடல்வலிமையை மறைமுகமாக தந்துகொண்டிருந்த விளையாட்டுகள் கிராமங்களில் நிறைய இருந்ததுதான். இனிவரும் தலைமுறை அப்படியிருக்க வாய்ப்பில்லை,இந்த டீ.வி அவர்களை முழுச் சோம்பேறிகளாக்கி வைத்திருக்கிறது. உட்கார்ந்துகூட பார்ப்பதில்லை, படுத்து கொண்டேதான் டீவி பார்க்கிறார்கள்,விளைவு கொஞ்ச நேரம் நின்னாலே இடுப்புக்கு கையை முட்டுகொடுக்க வேண்டியிருக்கிறது.
நாங்க சின்ன பசங்களா இருந்தபோது இப்படி வீட்டிற்குள்ளே உட்கார்ந்திருந்தால் பெற்றோர்கள் "ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்க வெளிலபோயி கைய கால உதறி நாலுபேரோட சேர்ந்து விளையாடு"என்று கூறுவார்கள்.ஆனால் இப்போ வெயிலில் கிடந்து அலையாதே கருத்து போயிடுவ(விளம்பர குழந்தைகளின் சிவப்பு படுத்தும்பாடு), ஊர்பயலுவலோட சேராம இங்கேயே டீவிய பாரு" என்று பசங்களின் தாய்குலங்களே சொல்கிறார்கள்.இப்படிதான் நகர்கிறது இன்றைய எங்க ஊர்ப் பசங்களின் கோடைவிடுமுறை.
பசங்களின் நிலை இப்படியென்றால் ஒட்டுமொத்த கிராமத்தின் நிலை இன்னும் பரிதாபம்.முன்னெல்லாம் இரவு பத்து மணிவரை ஆள்நடமாட்டம் வீதிகளிள் தெரியும், இப்போது ஆறு மணியாகிவிட்டால் "மேகலா" விற்காகவும், " கஸ்தூரி"க்காகவும் கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள் தங்கமணிகள். தங்கமணிகள் மட்டுமல்ல ரங்கமணிகளும் இப்போது சீரியல் வலையில் சிக்கியிருக்கிறார்கள்.கிராமத்தில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஊரே திரண்டுவிடும்.இப்போது வீட்டிற்கு பக்கத்திலேயே எதாவது அசம்பாவிதம் நடந்தாலும்கூட எதுவுமே தெரியாமல் "என் கடன் டீ.வி பார்ப்பதே" என்றிருக்கிறார்கள்.
இப்போது வீட்டிற்கு வீடு கலைஞர் டீ.வி.வேறு(இது சேனல் இல்லை தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சியைத்தான் இப்படி சொல்றாங்க).கூலி வேலை செய்யும் இடத்தில் எப்போதும் அடுத்தவங்க வீட்டு கதை பேசும் பெண்கள் இப்போது அபியின் கல்யாண பேச்சில் இருக்கிறார்கள்(இது ஒன்னுதான் நல்ல விஷயம்னு நினைக்கிறேன்). எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென்றால்கூட அன்றைய சீரியலின் சூழல்தான் இவர்களின் பயணத்தை போகலாமா? வேண்டாமா என்று நிர்ணயிக்கின்ற அளவு சீரியல் பைத்தியம் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது.இது இப்படியே தொடர்ந்தால் "யாருக்கு எது நடந்தா நமக்கென்ன" என்றிருக்கும் நகரபாணி வாழ்க்கை கிராமங்களிலும் வந்துவிடக்கூடிய சூழல் ரொம்ப தூரத்தில் இல்லை.
எப்படி கிரிக்கெட் எங்க ஊரின் பாரம்பரிய விளையாட்டுகளை மறக்கடிக்கச் செய்ததோ,அதே மாதிரியே இந்த டீ.வியின் மோகம் கிராமங்களின் தனித்துவத்தையும், இயல்பு நிலையையும் தொலையச் செய்து கொண்டிருக்கிறது. பாரதி இப்போதிருந்தால் "என்று தணியும் இந்த டீ.வியின் மோகம்" என்று பாடியிருப்பார்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு எனது கிராமத்தில் சில நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்த மாதிரியான மாற்றங்களைக் கண்டு வேதனையாக இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருப்பது ஒரே ஆறுதலான விஷயம்.
Tuesday, May 5, 2009
எங்க ஊரு 20 - 20
90களின் முதல் பகுதி,அப்போதுதான் எங்கள் ஊரிலிருந்து ஓரிருவர் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்(அதற்கு முன்பு பத்தாவது தாண்டுவதே தம்பிரான் செயல்).ஓரிரு வருடங்களில் கல்லூரி செல்வோரின் எண்ணிக்கை கூடியது.அது B.E ஆக இருந்தாலும் B.A ஆக இருந்தாலும் எங்க கணக்குப்படி காலேஜ் படிப்பு பெரிய படிப்பு. வெளியூருக்கு ரொம்பதூரம் சென்று (25 கிலோமீட்டர் தூரமே உள்ள தஞ்சாவூரில்தான்) படிக்க போண காலேஜ்கார அண்ணன்மாருங்கதான் எங்க ஊருக்கு கிரிக்கெட்டை அறிமுகப் படுத்தினவங்க.
ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாத சிறுவர் கூட்டம் தொடர்ந்து கிட்டி புல்லு,பம்பரம் என்றே விளையாடிக் கொண்டிருந்தோம்.ஆள் பற்றாக் குறையின் காரணமாக அண்ணன்மாருங்க எங்களையும் தங்கள் டீமில் ஐக்கியமாக்கிக் கொண்டார்கள்.எங்களுக்கு ஒன்லி ஃபீல்டிங் மட்டும்தான். ரொம்ப காலமாக பேட்டிங் எங்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருந்தது(பட்டுன்னு சொன்னா எங்கள பந்து பொறுக்கி போட மட்டும் வச்சிருந்தாங்க).
கிரவுண்ட் பக்கமா எதாவது ஃபிகருங்க கிராஸ் பண்ணா(இப்போதான் ஃபிகரு அப்போ அக்காங்க) என்னைய மாதிரி ஒரு சின்ன பையன்கிட்ட பௌலிங் போடச் சொல்லி சிக்ஸ் அடித்து ஹிரோயிசம் காட்டுவார்கள். இதிலென்ன வேடிக்கையின்னா பலதடவை இப்படி சீன் போடும்போது கிளீன் போல்டாகிவிட்டு "பால்போட சொன்னா என்னடா மாங்கா அடிக்கிறியா, இப்படியெல்லாம் போடக்கூடாது இது 'நோ'பால்" என்று அவர்கள் சிக்ஸ் அடிக்கும்வரை எங்கள் பௌலிங்கை தொடரச் செய்வார்கள். சில சமயம் நாங்க பௌலிங் போடும்போது ஒய்டு ஆகிவிட்டால் இரண்டு ரன்கள் சேர்த்துக் கொள்வார்கள்,ஏன்னு கேட்டால் இது பெரிய ஒய்டுடா அதனாலதான்னு சொல்லுவாங்க. நாங்களும் அது நெஜம்னு நம்பி இனி ஒய்டு போட்டாலும் சின்ன ஒய்டா போடுங்கடான்னு சொல்லிகிட்டு விளையாடியிருக்கோம்.
இப்படியாக பந்து பொறுக்கி போடப்போயி கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட் எங்களை சில மாதங்களிலேயே முழுவதும் ஆக்ரமித்தது.அப்புறம் சின்ன பசங்க எல்லோரும் சேர்ந்து தனி டீம் ஃபார்ம் பண்ணி தென்னை மட்டையில் பேட்டும்,தேங்காய் நாரை சுருட்டி பேப்பரில் வைத்து டைட்டாக கட்டி பந்தும் செய்து (இதில் முத்துகுமாருதான் எக்ஸ்பர்ட், மத்தவய்ங்க செய்யும் பந்து ஒரு ஓவர்கூட தாங்காது,ஆனால் அவன் ஒரிஜினல் பந்து ஷேப்பில் அசத்தலாக செய்துவிடுவான்)வயல்வெளிகளில் தனியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய டீமில் பேட்டிங் புடிக்கிற அளவிற்கு முன்னேறினோம்(எப்போதாவது கடைசி ஓவர் முடிய ஒன்னு ரெண்டு பந்து இருக்கும்போது கொடுப்பாங்க).
எங்க ஊரைத் தொடர்ந்து ஆதனக்கோட்டை, கருக்காடிப்பட்டி, வெட்டிக்காடு, சில்லத்தூர் என அருகில் உள்ள எல்லா கிராமத்திலும் கிரிக்கெட் டீம் உருவாகி ஒவ்வொரு சனி ஞாயிறுகளிலும் கருக்காடிப்பட்டி பள்ளி மைதானத்தில் ஃபிரண்ட்லி மேட்ச் விளையாட ஆரம்பித்து அப்படியே ஒவ்வொரு ஊரிலும் டோர்ணமெண்ட் வைக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து கில்லி,பம்பரம்,கோலி குண்டு போன்ற விளையாட்டுகளுக்கு ஆப்பு வைத்தது கிரிக்கெட்.
டோர்ணமெண்டுகள் பெரும்பாலும் கோடைவிடுமுறையில்தான் நடக்கும், இப்படி பக்கத்து ஊரில் நடக்கும் டோர்ணமெண்ட்டுக்கு செல்ல எல்லோர் வீட்டிலும் பெர்மிஷனெல்லாம் கிடைக்காது பிளேயர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் தேங்காய் பறிப்பு, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்,வாழைக்கு கீங்கட்டை வெட்டுதல்,ஆடு மாடு மேய்த்தல் என ஏதாவது ஒரு வேலை இருக்கும்.இந்த மாதிரி வேலை இருக்கும் நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு டேக்கா கொடுத்துவிட்டு விளையாட கிளம்புவது ஒரு சிறுகதைக்குண்டான அத்தனை சுவராஸ்யம் அடங்கியது.
உள்ளூர் போட்டியின்போது லுங்கி கட்டி விளையாடிடுவோம், ஆனால் டோர்ணமெண்ட் செல்லும்போது கண்டிப்பாக பேண்ட்,டீசேர்ட் அணிந்துதான் விளையாட வேண்டும்(நோட்டீஸ்லயே பெரிதாக அச்சடித்துவிடுவார்கள் கண்டிப்பாக லுங்கி அணிந்து விளையாடக் கூடாதென்று).ஒவ்வொருத்தரும் வீட்டிலிருந்து பேண்ட்டை லுங்கிக்குள் ஒளித்து வைத்து மெல்ல வீட்டிலிருந்து வெளியேறி,ஊரிலிருந்து ஒவ்வொருவராக தனித் தனியாக கிளம்பி ஊரின் வெளிப்புறத்தில்தான் ஒன்றுசேர்ந்து செல்வோம்.பிறகு அப்பா பாக்கெட்டிலும், அம்மாவின் அரிசிப்பானை சேகரிப்பிலும் சுட்ட காசுகளை ஒன்று சேர்த்து எண்ட்ரென்ஸ் ஃபீஸ் ரெடியாகிவிடும்.(சில வீட்டில் பாட்டியின் சுருக்கு பைகளிலும் கைவைக்கப்படும்).
சின்ன பசங்களாகிய எங்களை, டீமில் இருந்தாலும் இல்லாவிடிலும் பௌண்டரி, சிக்ஸர்,விக்கெட் எடுக்கும் நேரங்களில் கைதட்டுவதற்காக கூடவே அழைத்து செல்வார்கள். சில அண்ணன்மார்கள் வீட்டு வேலைகளில் மாட்டிக்கொண்டு வரமுடியாத சந்தர்ப்பங்களில் சின்ன பசங்களுக்கு அடிக்கும் பெரிய டீமில் விளையாடும் யோகம். பெரும்பாலும் எங்க டீம்தான் முதல் பரிசை தட்டி வருவார்கள்.முதல் பரிசாக சுழற்கோப்பையுடன் வாங்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களை வைத்தே டீமிற்கு தேவையான பேட், கிளவுஸ், ஸ்டம்ப் போன்ற பொருட்களை வாங்கிவிடுவோம்(சரக்கு பார்ட்டியெல்லாம் இப்போதான், அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் பெரும்பாலான பசங்க குடிக்க மாட்டாங்க தவிரவும் ஒயின்ஸ் வசதி அப்போது எங்க ஏரியாவில் இல்லை ).
நமக்கு அப்புறமா கிரிக்கெட் டீம் ஃபார்ம் பண்ணவங்கெல்லாம் டோர்ணமெண்ட் வைத்துக் கொண்டிருக்க, நாம் வைக்காமல் இருந்தால் மத்த டீமிடம் மரியாதை இருக்காது என்றெண்ணி எங்க ஊரிலும் டோர்ணமெண்ட் வைப்பதற்காக இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒன்றுகூடி எப்படி செய்யலாம் என விவாதித்தபோது எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது மைதானம், டோர்ணமென்ட் வைக்கும் அளவிற்கு பெரிய மைதானம் எங்க ஊரில் இல்லை,எங்கே வைக்கலாம் என்று பல இடங்களை தேர்வு செய்து இறுதியில் ஏரியின் உள்ளே(கோடையில்தாங்க) வைக்கலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளிலும் துரிதமாக செயல்பட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் டோர்ணமெண்டுக்கான நாளும் குறிக்கப்பட்டது.
பஞ்சாயத்துத் தலைவர்,வாத்தியார் மற்றும் பெரும் மிராசுதார் முறையே முதல் மூன்று பரிசுகளுக்கும் ஸ்பான்சர் எளிதாக கிடைத்த போதும் நோட்டீஸ் அடிப்பதற்கு யாரை கேட்பது என புரியாமல் நின்றபோது வெளிநாடு சென்று வந்த அண்ணாச்சி ஆபத்பாந்தவனாக வந்து நோட்டீஸ் அடிக்க உதவினார்.(நோட்டீஸில் அவர் பெயரை கொட்டை எழுத்தில் போடவேண்டுமென்ற கண்டிஷனோடு).ஒலி ஒளி அமைப்பு ஏவிஎம் மணிமாறன் அண்ணன்கிட்ட கடன் சொல்லி ரெண்டு ஸ்பீக்கர்,ரெண்டு மைக்,ஐந்து ட்யூப் லைட் வாங்கி கட்டியாகிவிட்டது. இது ஆஃபிஸ் ரூம் யூசுக்கு(நான்கு மூங்கில் கால் ஊன்றி,பத்து கீற்று போட்டு சுற்றிலும் படுதாவால்(தார்ப்பாய்) சூழப்பட்டதுதான் ஆஃபிஸ் ரூம்)
டோர்ணமெண்ட் அன்று பௌண்டரி லைனில் குச்சி ஊன்றுவது,பிட்ச்சில் சுண்ணாம்பு கோடு போடுவது,வெளியூர் டீமிற்கு தண்ணீர் சப்ளை ஆகிய பொறுப்புகள் சின்ன டீமிற்கு வழங்கப்பட்டது.ரொம்ப சந்தோஷமா எல்லா வேலைகளையும் செய்தோம் காரணம் உள்ளூர் டோர்ணமெண்ட் என்பதால் சின்ன டீமையும் தனியா விளையாட அனுமதி கொடுத்ததுதான்.(அனுமதி கொடுக்காமல் இருந்திருந்தால் சீறும் சிங்கங்கள் 11 என்ற பெயரில் புது டீமை உருவாக்குவதாகத் திட்டம் இருந்தது).
வெளியூர் டீம் ஒவ்வொன்றாக வந்து டோர்ணமெண்ட் களைகட்டத் தொடங்கியது.நேர்முக வர்ணனை சுடர் அண்ணாச்சிதான்(வர்ணனையில் பின்னி பெடலெடுப்பார்). "சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருக்கை சரவணன், பூஜ்ஜியத்திலேயே தனது ராஜ்ஜியத்தை முடித்துக்கொண்டு பெவிலியன் திரும்புகிறார்" என்ற ரேஞ்சில் பட்டையை கிளப்புவார் வர்ணனையில்.
இப்படியாக ஆரம்பித்த உள்ளூர் டோர்ணமெண்ட் வருடா வருடம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் சீனியர் பிளேயர்ஸ் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருவராக சென்றுவிட சின்ன பசங்களாக இருந்த நாங்க மெயின் பிளேயர்ஸ் ஆனபோது எங்களுக்கு பந்து பொறுக்கிபோட வேண்டிய எங்களது ஜூனியர்ஸை அப்போது எங்க ஊருக்குள் நுழைந்த கேபிள் டீ.வியின் வருகை எப்படி அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கியது என்பதனை நாளைய பதிவில் பார்ப்போம்.
சின்ன பசங்க நாங்க என்ற தலைப்பில் நேற்று எழுதிய இந்த பதிவின் முதல் பகுதி யூத்ஃபுல் விகடனில் முகப்பு பக்கத்தில் வந்தது எதிர்பாரா இன்ப அதிர்ச்சி.இத்தகவலை பின்னூட்டத்தில் தெரிவித்த நண்பர் KRICONSக்கு நன்றி.
ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாத சிறுவர் கூட்டம் தொடர்ந்து கிட்டி புல்லு,பம்பரம் என்றே விளையாடிக் கொண்டிருந்தோம்.ஆள் பற்றாக் குறையின் காரணமாக அண்ணன்மாருங்க எங்களையும் தங்கள் டீமில் ஐக்கியமாக்கிக் கொண்டார்கள்.எங்களுக்கு ஒன்லி ஃபீல்டிங் மட்டும்தான். ரொம்ப காலமாக பேட்டிங் எங்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருந்தது(பட்டுன்னு சொன்னா எங்கள பந்து பொறுக்கி போட மட்டும் வச்சிருந்தாங்க).
கிரவுண்ட் பக்கமா எதாவது ஃபிகருங்க கிராஸ் பண்ணா(இப்போதான் ஃபிகரு அப்போ அக்காங்க) என்னைய மாதிரி ஒரு சின்ன பையன்கிட்ட பௌலிங் போடச் சொல்லி சிக்ஸ் அடித்து ஹிரோயிசம் காட்டுவார்கள். இதிலென்ன வேடிக்கையின்னா பலதடவை இப்படி சீன் போடும்போது கிளீன் போல்டாகிவிட்டு "பால்போட சொன்னா என்னடா மாங்கா அடிக்கிறியா, இப்படியெல்லாம் போடக்கூடாது இது 'நோ'பால்" என்று அவர்கள் சிக்ஸ் அடிக்கும்வரை எங்கள் பௌலிங்கை தொடரச் செய்வார்கள். சில சமயம் நாங்க பௌலிங் போடும்போது ஒய்டு ஆகிவிட்டால் இரண்டு ரன்கள் சேர்த்துக் கொள்வார்கள்,ஏன்னு கேட்டால் இது பெரிய ஒய்டுடா அதனாலதான்னு சொல்லுவாங்க. நாங்களும் அது நெஜம்னு நம்பி இனி ஒய்டு போட்டாலும் சின்ன ஒய்டா போடுங்கடான்னு சொல்லிகிட்டு விளையாடியிருக்கோம்.
இப்படியாக பந்து பொறுக்கி போடப்போயி கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட் எங்களை சில மாதங்களிலேயே முழுவதும் ஆக்ரமித்தது.அப்புறம் சின்ன பசங்க எல்லோரும் சேர்ந்து தனி டீம் ஃபார்ம் பண்ணி தென்னை மட்டையில் பேட்டும்,தேங்காய் நாரை சுருட்டி பேப்பரில் வைத்து டைட்டாக கட்டி பந்தும் செய்து (இதில் முத்துகுமாருதான் எக்ஸ்பர்ட், மத்தவய்ங்க செய்யும் பந்து ஒரு ஓவர்கூட தாங்காது,ஆனால் அவன் ஒரிஜினல் பந்து ஷேப்பில் அசத்தலாக செய்துவிடுவான்)வயல்வெளிகளில் தனியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய டீமில் பேட்டிங் புடிக்கிற அளவிற்கு முன்னேறினோம்(எப்போதாவது கடைசி ஓவர் முடிய ஒன்னு ரெண்டு பந்து இருக்கும்போது கொடுப்பாங்க).
எங்க ஊரைத் தொடர்ந்து ஆதனக்கோட்டை, கருக்காடிப்பட்டி, வெட்டிக்காடு, சில்லத்தூர் என அருகில் உள்ள எல்லா கிராமத்திலும் கிரிக்கெட் டீம் உருவாகி ஒவ்வொரு சனி ஞாயிறுகளிலும் கருக்காடிப்பட்டி பள்ளி மைதானத்தில் ஃபிரண்ட்லி மேட்ச் விளையாட ஆரம்பித்து அப்படியே ஒவ்வொரு ஊரிலும் டோர்ணமெண்ட் வைக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து கில்லி,பம்பரம்,கோலி குண்டு போன்ற விளையாட்டுகளுக்கு ஆப்பு வைத்தது கிரிக்கெட்.
டோர்ணமெண்டுகள் பெரும்பாலும் கோடைவிடுமுறையில்தான் நடக்கும், இப்படி பக்கத்து ஊரில் நடக்கும் டோர்ணமெண்ட்டுக்கு செல்ல எல்லோர் வீட்டிலும் பெர்மிஷனெல்லாம் கிடைக்காது பிளேயர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் தேங்காய் பறிப்பு, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்,வாழைக்கு கீங்கட்டை வெட்டுதல்,ஆடு மாடு மேய்த்தல் என ஏதாவது ஒரு வேலை இருக்கும்.இந்த மாதிரி வேலை இருக்கும் நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு டேக்கா கொடுத்துவிட்டு விளையாட கிளம்புவது ஒரு சிறுகதைக்குண்டான அத்தனை சுவராஸ்யம் அடங்கியது.
உள்ளூர் போட்டியின்போது லுங்கி கட்டி விளையாடிடுவோம், ஆனால் டோர்ணமெண்ட் செல்லும்போது கண்டிப்பாக பேண்ட்,டீசேர்ட் அணிந்துதான் விளையாட வேண்டும்(நோட்டீஸ்லயே பெரிதாக அச்சடித்துவிடுவார்கள் கண்டிப்பாக லுங்கி அணிந்து விளையாடக் கூடாதென்று).ஒவ்வொருத்தரும் வீட்டிலிருந்து பேண்ட்டை லுங்கிக்குள் ஒளித்து வைத்து மெல்ல வீட்டிலிருந்து வெளியேறி,ஊரிலிருந்து ஒவ்வொருவராக தனித் தனியாக கிளம்பி ஊரின் வெளிப்புறத்தில்தான் ஒன்றுசேர்ந்து செல்வோம்.பிறகு அப்பா பாக்கெட்டிலும், அம்மாவின் அரிசிப்பானை சேகரிப்பிலும் சுட்ட காசுகளை ஒன்று சேர்த்து எண்ட்ரென்ஸ் ஃபீஸ் ரெடியாகிவிடும்.(சில வீட்டில் பாட்டியின் சுருக்கு பைகளிலும் கைவைக்கப்படும்).
சின்ன பசங்களாகிய எங்களை, டீமில் இருந்தாலும் இல்லாவிடிலும் பௌண்டரி, சிக்ஸர்,விக்கெட் எடுக்கும் நேரங்களில் கைதட்டுவதற்காக கூடவே அழைத்து செல்வார்கள். சில அண்ணன்மார்கள் வீட்டு வேலைகளில் மாட்டிக்கொண்டு வரமுடியாத சந்தர்ப்பங்களில் சின்ன பசங்களுக்கு அடிக்கும் பெரிய டீமில் விளையாடும் யோகம். பெரும்பாலும் எங்க டீம்தான் முதல் பரிசை தட்டி வருவார்கள்.முதல் பரிசாக சுழற்கோப்பையுடன் வாங்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களை வைத்தே டீமிற்கு தேவையான பேட், கிளவுஸ், ஸ்டம்ப் போன்ற பொருட்களை வாங்கிவிடுவோம்(சரக்கு பார்ட்டியெல்லாம் இப்போதான், அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் பெரும்பாலான பசங்க குடிக்க மாட்டாங்க தவிரவும் ஒயின்ஸ் வசதி அப்போது எங்க ஏரியாவில் இல்லை ).
நமக்கு அப்புறமா கிரிக்கெட் டீம் ஃபார்ம் பண்ணவங்கெல்லாம் டோர்ணமெண்ட் வைத்துக் கொண்டிருக்க, நாம் வைக்காமல் இருந்தால் மத்த டீமிடம் மரியாதை இருக்காது என்றெண்ணி எங்க ஊரிலும் டோர்ணமெண்ட் வைப்பதற்காக இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒன்றுகூடி எப்படி செய்யலாம் என விவாதித்தபோது எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது மைதானம், டோர்ணமென்ட் வைக்கும் அளவிற்கு பெரிய மைதானம் எங்க ஊரில் இல்லை,எங்கே வைக்கலாம் என்று பல இடங்களை தேர்வு செய்து இறுதியில் ஏரியின் உள்ளே(கோடையில்தாங்க) வைக்கலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளிலும் துரிதமாக செயல்பட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் டோர்ணமெண்டுக்கான நாளும் குறிக்கப்பட்டது.
பஞ்சாயத்துத் தலைவர்,வாத்தியார் மற்றும் பெரும் மிராசுதார் முறையே முதல் மூன்று பரிசுகளுக்கும் ஸ்பான்சர் எளிதாக கிடைத்த போதும் நோட்டீஸ் அடிப்பதற்கு யாரை கேட்பது என புரியாமல் நின்றபோது வெளிநாடு சென்று வந்த அண்ணாச்சி ஆபத்பாந்தவனாக வந்து நோட்டீஸ் அடிக்க உதவினார்.(நோட்டீஸில் அவர் பெயரை கொட்டை எழுத்தில் போடவேண்டுமென்ற கண்டிஷனோடு).ஒலி ஒளி அமைப்பு ஏவிஎம் மணிமாறன் அண்ணன்கிட்ட கடன் சொல்லி ரெண்டு ஸ்பீக்கர்,ரெண்டு மைக்,ஐந்து ட்யூப் லைட் வாங்கி கட்டியாகிவிட்டது. இது ஆஃபிஸ் ரூம் யூசுக்கு(நான்கு மூங்கில் கால் ஊன்றி,பத்து கீற்று போட்டு சுற்றிலும் படுதாவால்(தார்ப்பாய்) சூழப்பட்டதுதான் ஆஃபிஸ் ரூம்)
டோர்ணமெண்ட் அன்று பௌண்டரி லைனில் குச்சி ஊன்றுவது,பிட்ச்சில் சுண்ணாம்பு கோடு போடுவது,வெளியூர் டீமிற்கு தண்ணீர் சப்ளை ஆகிய பொறுப்புகள் சின்ன டீமிற்கு வழங்கப்பட்டது.ரொம்ப சந்தோஷமா எல்லா வேலைகளையும் செய்தோம் காரணம் உள்ளூர் டோர்ணமெண்ட் என்பதால் சின்ன டீமையும் தனியா விளையாட அனுமதி கொடுத்ததுதான்.(அனுமதி கொடுக்காமல் இருந்திருந்தால் சீறும் சிங்கங்கள் 11 என்ற பெயரில் புது டீமை உருவாக்குவதாகத் திட்டம் இருந்தது).
வெளியூர் டீம் ஒவ்வொன்றாக வந்து டோர்ணமெண்ட் களைகட்டத் தொடங்கியது.நேர்முக வர்ணனை சுடர் அண்ணாச்சிதான்(வர்ணனையில் பின்னி பெடலெடுப்பார்). "சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருக்கை சரவணன், பூஜ்ஜியத்திலேயே தனது ராஜ்ஜியத்தை முடித்துக்கொண்டு பெவிலியன் திரும்புகிறார்" என்ற ரேஞ்சில் பட்டையை கிளப்புவார் வர்ணனையில்.
இப்படியாக ஆரம்பித்த உள்ளூர் டோர்ணமெண்ட் வருடா வருடம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் சீனியர் பிளேயர்ஸ் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருவராக சென்றுவிட சின்ன பசங்களாக இருந்த நாங்க மெயின் பிளேயர்ஸ் ஆனபோது எங்களுக்கு பந்து பொறுக்கிபோட வேண்டிய எங்களது ஜூனியர்ஸை அப்போது எங்க ஊருக்குள் நுழைந்த கேபிள் டீ.வியின் வருகை எப்படி அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கியது என்பதனை நாளைய பதிவில் பார்ப்போம்.
சின்ன பசங்க நாங்க என்ற தலைப்பில் நேற்று எழுதிய இந்த பதிவின் முதல் பகுதி யூத்ஃபுல் விகடனில் முகப்பு பக்கத்தில் வந்தது எதிர்பாரா இன்ப அதிர்ச்சி.இத்தகவலை பின்னூட்டத்தில் தெரிவித்த நண்பர் KRICONSக்கு நன்றி.
Monday, May 4, 2009
சின்ன பசங்க நாங்க..!
கோடைவிடுமுறை வந்துவிட்டாலே பாட்டு,டான்ஸ்,கராத்தே, கம்ப்யூட்டர் இப்படி எந்த ஒரு சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல வேண்டுமே என்ற பயமில்லாத காலம் எனது பால்யம்(வயசெல்லாம் கேட்கக்கூடாது).
விடுமுறையை விடாமல் முறையாக அனுபவித்த அந்த நாட்களின் நினைவுகள் ஆனந்தத்தை மட்டுமே குறையாது கொடுக்கும் ஒரு அட்சயபாத்திரம். அதுவும் எனது பால்யம் கிராமத்தில் அமைந்தது இன்னும் சிறப்பு.
விடுமுறை நாட்களில் மட்டும் ஏனோ ஆறுமணிக்கெல்லாம் முழிப்பு (முழிப்பா/விழிப்பா?)வந்துவிடும்,எழுந்ததும் முகத்தைக் கூட ஒழுங்காக கழுவாமல் நேராக பள்ளிக்கூடத்திற்கு எதிரே இருக்கும் வேப்பமரத்தின் கீழ் ஊரின் அனைத்து சிறுவர்களும் கூடிவிடுவோம்.
பிறகு சிறுசிறு குழுக்களாக பிரிந்து கிட்டிப்புல்(கில்லி),கோலிக்குண்டு (இதை வைத்து பேந்தாஸ், லாக்கு,மாண்டா இப்படி நிறைய விளையாட்டு இருக்கு), புட்டு(7 stone),பம்பரம்,பிள்ளையார் பந்து என பிரிந்து விளையாட ஆரம்பித்தால் வெயில்,பசி,தாகம் எதுவுமே தெரியாமல் நேரம் போய்க் கொண்டிருக்கும்.
அந்த வழியா போற பெருசுங்க "ஓரே அமாவாசையிலே போட்ட குட்டிங்க மாதிரி கிடந்துகிட்டு என்னா சத்தம் போடுறாய்ங்க,மறுபடியும் பள்ளிக்கொடம் தொறக்குற வரைக்கும் இவய்ங்க இம்சை பெரும் இம்சையால்ல இருக்கும்" என்று புலம்பியபடியே செல்வது ஒவ்வொரு கோடையிலும் நடக்கும்.
மதியம் பணிரெண்டு மணிக்குமேல் வெயிலின் உக்கிரத்தை தணித்துக்கொள்ள அப்படியே ஒரு பெரும்படையாக (ஒரு இருபது பேர் ) திரண்டு ஏரிக்கு செல்வோம், எங்க ஏரியாவிலேயே எங்க ஊரு ஏரி கொஞ்சம் பெருசு, கோடையில் பக்கத்து ஊர் குளத்திலெல்லாம் தண்ணீர் வற்றிவிட்டாலும் எங்க ஊர் ஏரியில் ஓர் ஒரத்தில் குட்டை மாதிரி ஒரு சின்ன ஏரியாவில் தண்ணீர் கிடக்கும். நன்கு தெளிந்து கிடக்கும் நீரில் திமுதிமுவென்று இறங்கியதும் முங்கு நீர் போட்டி,ஓந்தி,பேபே என்று நீர் விளையாட்டுகள் ஆரம்பமாகிவிடும்.
விளையாட்டில் ஆழ்ந்திருக்கும்போது எங்கிருந்துதான் வருவாரென்றே தெரியாது முருகையன்,முருகையன் சுருங்கச் சொன்னால் மீசையில்லா ஐயனார்.மனிதர் அப்படி ஒரு பிரமாண்ட உயரம்.அத்தனை பசங்களின் ட்ரௌசரையும் ஒரே அள்ளாக அள்ளி முட்டாக குவித்து கையில் ஒரு பெரிய பூவரசங்குச்சியோடு நின்று கொண்டு "எல்லா பயலும் அப்படியே வாயையும் ,........ பொத்திகிட்டு கரையேரி இங்கே வாங்க" என்று சிம்மக் குரலிடுவார்.(இதுவும் எல்லா கோடையிலும் நடக்கும்).ஒவ்வொருவராக பிறந்த(திறந்த)மேனியாக அவரின் முன் நடுங்கியயபடியே அணிவகுத்து நிற்போம். இரண்டிரண்டு பேராக ஒருத்தர் காதை இன்னொருத்தர் பிடித்துக் கொண்டு,இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என்று சொல்லிக்கொண்டே தோப்புகரணம் போடச் சொல்வார். பிறகு அப்படியே திரும்பி நீங்க குளிச்ச தண்ணிய பாருங்கடா என்பார்,சேச்சே இந்த தண்னியிலயா குளிச்சோங்கிற லெவெலில் சேறும்சகதியுமாக இருக்கும்."இப்படி பண்ணி வெச்சா எப்படிடா நாங்க குளிப்பது" என்று கூறிவிட்டு "ஐந்து நிமிசத்திலே எல்லோரும் ஓடிப்போகணும்" என்று விரட்டிவிடுவார்.
எல்லோரும் அவரவர் ட்ரௌசரையும்,சின்னக்கவுண்டர்(விஜயகாந்த் வித் பம்பரம்),எஜமான்,அமரன் பெயர்கள் அச்சிடப்பட்ட பனியன்களையும் எடுத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடிவந்து,"போய்யா முருகையா, எங்க இப்ப அடி பாக்கலாம்" என்று பின்பக்கத்தை அவருக்கு காட்டி ஒரு குத்து டான்ஸ் போட்டு அவரை வெறுப்பேத்தி தெறித்து ஓடுவோம். திரும்பவும் அடுத்த நாள் அதே நேரம், அதே குட்டை ,அதே சேறும் சகதியும் விடுமுறை முடியும்வரை தொடரும்.
பிறகு சாயங்காலம் கபடி, ஆறுபேர் சந்தன பேர்,ஐஸ் பாய்ஸ்,திருடன் போலீஸ் என மீண்டும் ஒரு பெரிய பட்டியல் விளையாட்டுகள் (இந்த விளையாட்டுகளை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவிடலாம்)இரவு பத்து மணிவரை நீளும்.இப்படியாக கழிந்த எனது பால்ய நாட்களின் உண்ணதம் அப்போது கடக்குபோது தெரியவில்லை,இப்போது நினைக்கும்போது இனிக்கிறது.
இப்படி கட்டுதறி இல்லாது பலவிதமான விளையாட்டுகளில் மூழ்கி சிறகடித்துப் பறந்த அந்த சமயத்தில் எப்படி கிரிக்கெட் எங்கள் ஊருக்குள் அதிரடியாய் நுழைந்து அத்தனை விளையாட்டுகளையும் கிளீன் போல்டாக்கி தனியாவர்த்தனம் செய்தது என்பதனையும்,எங்களுக்கு அடுத்த தலைமுறையை கேபிள் டீவி எப்படி ஆக்கிரமிப்பு செய்து எனது கிராமத்தின் இயல்புநிலை தொலைந்து போனதென்பதையும் அடுத்த பதிவில் காணலாம்.
விடுமுறையை விடாமல் முறையாக அனுபவித்த அந்த நாட்களின் நினைவுகள் ஆனந்தத்தை மட்டுமே குறையாது கொடுக்கும் ஒரு அட்சயபாத்திரம். அதுவும் எனது பால்யம் கிராமத்தில் அமைந்தது இன்னும் சிறப்பு.
விடுமுறை நாட்களில் மட்டும் ஏனோ ஆறுமணிக்கெல்லாம் முழிப்பு (முழிப்பா/விழிப்பா?)வந்துவிடும்,எழுந்ததும் முகத்தைக் கூட ஒழுங்காக கழுவாமல் நேராக பள்ளிக்கூடத்திற்கு எதிரே இருக்கும் வேப்பமரத்தின் கீழ் ஊரின் அனைத்து சிறுவர்களும் கூடிவிடுவோம்.
பிறகு சிறுசிறு குழுக்களாக பிரிந்து கிட்டிப்புல்(கில்லி),கோலிக்குண்டு (இதை வைத்து பேந்தாஸ், லாக்கு,மாண்டா இப்படி நிறைய விளையாட்டு இருக்கு), புட்டு(7 stone),பம்பரம்,பிள்ளையார் பந்து என பிரிந்து விளையாட ஆரம்பித்தால் வெயில்,பசி,தாகம் எதுவுமே தெரியாமல் நேரம் போய்க் கொண்டிருக்கும்.
அந்த வழியா போற பெருசுங்க "ஓரே அமாவாசையிலே போட்ட குட்டிங்க மாதிரி கிடந்துகிட்டு என்னா சத்தம் போடுறாய்ங்க,மறுபடியும் பள்ளிக்கொடம் தொறக்குற வரைக்கும் இவய்ங்க இம்சை பெரும் இம்சையால்ல இருக்கும்" என்று புலம்பியபடியே செல்வது ஒவ்வொரு கோடையிலும் நடக்கும்.
மதியம் பணிரெண்டு மணிக்குமேல் வெயிலின் உக்கிரத்தை தணித்துக்கொள்ள அப்படியே ஒரு பெரும்படையாக (ஒரு இருபது பேர் ) திரண்டு ஏரிக்கு செல்வோம், எங்க ஏரியாவிலேயே எங்க ஊரு ஏரி கொஞ்சம் பெருசு, கோடையில் பக்கத்து ஊர் குளத்திலெல்லாம் தண்ணீர் வற்றிவிட்டாலும் எங்க ஊர் ஏரியில் ஓர் ஒரத்தில் குட்டை மாதிரி ஒரு சின்ன ஏரியாவில் தண்ணீர் கிடக்கும். நன்கு தெளிந்து கிடக்கும் நீரில் திமுதிமுவென்று இறங்கியதும் முங்கு நீர் போட்டி,ஓந்தி,பேபே என்று நீர் விளையாட்டுகள் ஆரம்பமாகிவிடும்.
விளையாட்டில் ஆழ்ந்திருக்கும்போது எங்கிருந்துதான் வருவாரென்றே தெரியாது முருகையன்,முருகையன் சுருங்கச் சொன்னால் மீசையில்லா ஐயனார்.மனிதர் அப்படி ஒரு பிரமாண்ட உயரம்.அத்தனை பசங்களின் ட்ரௌசரையும் ஒரே அள்ளாக அள்ளி முட்டாக குவித்து கையில் ஒரு பெரிய பூவரசங்குச்சியோடு நின்று கொண்டு "எல்லா பயலும் அப்படியே வாயையும் ,........ பொத்திகிட்டு கரையேரி இங்கே வாங்க" என்று சிம்மக் குரலிடுவார்.(இதுவும் எல்லா கோடையிலும் நடக்கும்).ஒவ்வொருவராக பிறந்த(திறந்த)மேனியாக அவரின் முன் நடுங்கியயபடியே அணிவகுத்து நிற்போம். இரண்டிரண்டு பேராக ஒருத்தர் காதை இன்னொருத்தர் பிடித்துக் கொண்டு,இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என்று சொல்லிக்கொண்டே தோப்புகரணம் போடச் சொல்வார். பிறகு அப்படியே திரும்பி நீங்க குளிச்ச தண்ணிய பாருங்கடா என்பார்,சேச்சே இந்த தண்னியிலயா குளிச்சோங்கிற லெவெலில் சேறும்சகதியுமாக இருக்கும்."இப்படி பண்ணி வெச்சா எப்படிடா நாங்க குளிப்பது" என்று கூறிவிட்டு "ஐந்து நிமிசத்திலே எல்லோரும் ஓடிப்போகணும்" என்று விரட்டிவிடுவார்.
எல்லோரும் அவரவர் ட்ரௌசரையும்,சின்னக்கவுண்டர்(விஜயகாந்த் வித் பம்பரம்),எஜமான்,அமரன் பெயர்கள் அச்சிடப்பட்ட பனியன்களையும் எடுத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடிவந்து,"போய்யா முருகையா, எங்க இப்ப அடி பாக்கலாம்" என்று பின்பக்கத்தை அவருக்கு காட்டி ஒரு குத்து டான்ஸ் போட்டு அவரை வெறுப்பேத்தி தெறித்து ஓடுவோம். திரும்பவும் அடுத்த நாள் அதே நேரம், அதே குட்டை ,அதே சேறும் சகதியும் விடுமுறை முடியும்வரை தொடரும்.
பிறகு சாயங்காலம் கபடி, ஆறுபேர் சந்தன பேர்,ஐஸ் பாய்ஸ்,திருடன் போலீஸ் என மீண்டும் ஒரு பெரிய பட்டியல் விளையாட்டுகள் (இந்த விளையாட்டுகளை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவிடலாம்)இரவு பத்து மணிவரை நீளும்.இப்படியாக கழிந்த எனது பால்ய நாட்களின் உண்ணதம் அப்போது கடக்குபோது தெரியவில்லை,இப்போது நினைக்கும்போது இனிக்கிறது.
இப்படி கட்டுதறி இல்லாது பலவிதமான விளையாட்டுகளில் மூழ்கி சிறகடித்துப் பறந்த அந்த சமயத்தில் எப்படி கிரிக்கெட் எங்கள் ஊருக்குள் அதிரடியாய் நுழைந்து அத்தனை விளையாட்டுகளையும் கிளீன் போல்டாக்கி தனியாவர்த்தனம் செய்தது என்பதனையும்,எங்களுக்கு அடுத்த தலைமுறையை கேபிள் டீவி எப்படி ஆக்கிரமிப்பு செய்து எனது கிராமத்தின் இயல்புநிலை தொலைந்து போனதென்பதையும் அடுத்த பதிவில் காணலாம்.
Friday, May 1, 2009
கானக்குயில் - சுவர்ணலதா..!
1982 ல் வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் அறிமுகபடுத்தப்பட்டவர். முந்தைய தலைமுறை பாடகிகளில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு எப்படி ஒரு தனித்த அடையாளம் கிடைத்ததோ அது போன்றே கேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான சொர்ண குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ண லதா.எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 90-ல் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல்தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையில்லை.அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தின் "போவோமா ஊர்கோலத்திற்காக" தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்று தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பல படங்களுக்கு பாடும் வாய்ப்பை பெற்று 90களில் தமிழ் திரையுலகில் கோலாச்சினார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
இளையராஜாவின் அற்புதமான இசையில் இவர் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச","என்னுள்ளே என்னுள்ளே" போன்ற பாடல்களால் இசைப் பிரியர்கள் மட்டுமன்றி சக பின்னணி பாடகர்கள்,பாடகிகளையே தன் குரலால் மதிமயங்கவைத்தவர்.
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்த்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவரின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடியிருக்கிறார்.1996ம் ஆண்டு வெளியான "கருத்தம்மா" படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருது இவரைத் தேடிவந்தது. ரஹ்மானின் இசையில் சில ஹிந்தி படங்களிலும் பாடியிருக்கிறார்.
இவர் பாடிய மேலும் சில பாடல்கள்:
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட -உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்ம துரை
அடி ராக்கம்மா கையத் தட்டு - தளபதி
கண்ணில் ஆடும் ரோஜா -கேப்டன்
உன்னை எதிர் பார்த்தேன் - வனஜா கிரிஜா
அந்தியில வானம் - சின்னவர்
உசிலம்பட்டி பெண்குட்டி - ஜென்டில் மேன்
முக்காலா முக்காபுல்லா -காதலன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
புது ரோஜா பூத்திருக்கு -கோகுலம்
மல்லியே சின்ன முல்லையே -பாண்டித்துரை
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
அக்கடான்னு நாங்க -இந்தியன்
குச்சி குச்சி ராக்கம்மா - பம்பாய்
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் - பாட்டு வாத்தியார்
(ரொம்ப நீளமான பட்டியல் இருக்கு)
இசையமைப்பாளர்கள் தேவா,சிற்பி,பரத்வாஜ்,வித்யாசாகர்,ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட்பாடல்களை பாடியிருக்கும் இவரின் குரலை இப்போது வரும் பாடல்களில் கேட்க முடிவதில்லை,சுவர்ணலதாவின் காந்த குரலை மீண்டும் நிறைய பாடல்களில் கேட்க வேண்டும் என்ற ஒரு சாதாரண ரசிகனின் வேண்டுகோளாய் இந்த பதிவு.
மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்ம துரை
அடி ராக்கம்மா கையத் தட்டு - தளபதி
கண்ணில் ஆடும் ரோஜா -கேப்டன்
உன்னை எதிர் பார்த்தேன் - வனஜா கிரிஜா
அந்தியில வானம் - சின்னவர்
உசிலம்பட்டி பெண்குட்டி - ஜென்டில் மேன்
முக்காலா முக்காபுல்லா -காதலன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
புது ரோஜா பூத்திருக்கு -கோகுலம்
மல்லியே சின்ன முல்லையே -பாண்டித்துரை
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
அக்கடான்னு நாங்க -இந்தியன்
குச்சி குச்சி ராக்கம்மா - பம்பாய்
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் - பாட்டு வாத்தியார்
(ரொம்ப நீளமான பட்டியல் இருக்கு)
இசையமைப்பாளர்கள் தேவா,சிற்பி,பரத்வாஜ்,வித்யாசாகர்,ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட்பாடல்களை பாடியிருக்கும் இவரின் குரலை இப்போது வரும் பாடல்களில் கேட்க முடிவதில்லை,சுவர்ணலதாவின் காந்த குரலை மீண்டும் நிறைய பாடல்களில் கேட்க வேண்டும் என்ற ஒரு சாதாரண ரசிகனின் வேண்டுகோளாய் இந்த பதிவு.
Thursday, April 30, 2009
சும்மா கொறிக்க......!
சமீபத்தில் திருப்பதிக்கு சென்றிருந்தேன்,எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்,எல்லாவற்றிற்கும் நீண்ட க்யூ அதுவும் குறிப்பாக ஸ்வாமி தரிசனத்திற்கு நிற்கும் மிக நீண்ட க்யூவில் ஆமை நகர்வதுபோல் நகர்ந்து சென்று மூச்சு விடுவதற்கே சிரமமான நிலையிலிருக்கும் சிறு சிறு அறைகள் போன்ற ஒரு அமைப்பில் நான்கு மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு,பின்பு ஒரு வழியாக ஏழுமலையானை தரிசித்துவிட்டு வருவதற்குள் ஏன்டா வந்தோமென்று ஆகிவிட்டது.காலை கீழே ஊன்ற முடியாத அளவிற்கு இருக்கும் கூட்ட நெரிசலிலும் வெவ்வெறு மாநில கண்ணகிகள் சிலர் "இடிக்காம நில்லுங்க" என்று சில அப்பாவி இளைஞர்களை அங்கேயும் அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இவ்வளவு கூட்டம் வந்து போகும் திருப்பதியின் ஆச்சர்யமான விஷயம் சுத்தம்.பொது கழிப்பறை கூட படுசுத்தமாக இருக்கிறது.இலவச பஸ் வசதி,இலவச உணவு,ஐம்பது ரூபாயில் நல்ல வசதியுன் தங்கும் விடுதிகள் என பலவும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.அறிவிப்பு பலகைகள் உள்ள எல்லா இடங்களிலும் தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆனாலும் முழுவதும் சந்தோஷ படமுடியவில்லை அந்த அளவிற்கு எழுத்துப்பிழைகள்.ஓரிரு இடங்கள் என்றால் பரவாயில்லை கிட்ட தட்ட எல்லா அறிவிப்பிலுமே ஏக பிழைகளுடன் எழுதப்பட்டிருக்கிறது.
***********************************************
சென்ற மாதத்தில் எங்கள் ஊர்ப்பகுதியில் ஒரு குட்டி வளர்ப்பு மகன் திருமணம் போல் ஒரு திருமணம் நடந்தது.பாதி ஊரை அடைத்து பந்தல்,மதுரை தொகுதிக்குள் இருக்கின்றோமோ என்று எண்ணுமளவிற்கு பிரியாணி விருந்து,ஊரின் பல இடங்களில் குவிந்து கிடந்த சரக்கு பாட்டில்கள் என படு அமர்க்களமாக நடந்தேறியது.இவ்வளவுக்கும் அந்த வி.ஐ.பி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.இப்பொழுது அவர் ஒரு மாவட்ட ஊராட்சி குழு தலைவர்(சேர்மன்). அப்போ எம்.பி,எம்.எல்.ஏ லெவலுக்கு ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை கொடுப்பது பத்தாயிரம் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
*************************************************
இது திருவிழாக் காலம்,முன்னெல்லாம் இரவு நிகழ்ச்சிகளாக ஆர்கெஸ்ட்ரா என்ற பெயரில் ஓரளவிற்கு தரமான இசைக் கச்சேரிகள் நடைபெறும்,இப்போதோ ஆடலுடன் பாடல் என்ற பெயரில் படுமோசமாக உடையணிந்தும்,வல்கர் மூவ்மெண்ஸுமாக திருவிழாக்கள் கிராமங்களில் ஆண்களுக்கு மட்டும் என்கிற மாதிரி ஆகிவிட்டது.நேரம் ஆக ஆக உடையின் அளவும் குறைந்து கிட்டத்தட்ட " ----- லைவ் ஷோ" மாதிரி காம கலியாட்டங்கள் நடக்கின்றன. முதலில் இதற்கு ஒரு தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும். இந்த கலாச்சாரம் ஆரம்பத்திலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.இதற்கு அந்தந்த ஊர்மக்களே நடவெடிக்கையெடுக்கலாம்,ஆனால் இப்படிபட்ட நிகழ்ச்சிகளால் விடலை பசங்கள் எந்த அளவிற்கு திசை திருப்பப் படுவார்கள் என்ற பிரஞ்ஞை பெரும்பாலான கிராமத்து பெருசுகளிடம் இருப்பதில்லை.
*************************************************
சமீபத்தில் நடந்த குரூப் ஒன் தேர்வில் கேட்கப்பட்ட பல சுவராஸ்யமான கேள்விகளில் ஒன்று கீழே:
பொருத்துக:
தி.மு.க ----மாம்பழம்
அ.தி.மு.க ---- பம்பரம்
பா.ம.க ---- இரட்டை இலை
ம.தி.மு.க ---- உதய சூரியன்
*************************************************
ஹோட்டல்களில் சாப்பிடுவதை பெரும்பாலும் அசுத்தத்தின் காரணமாக தவிர்த்துவிடுவேன், வேறு வழியின்றி எப்போதாவது செல்லும்போது கண்டிப்பாக எனக்கு வைக்கப்படும் தண்ணிரில் எதாவது மிதந்துகொண்டிருக்கும்,வெங்காய பச்சடியில் தலை முடி,இலையில் எதாவது அசிங்கம்,சாதத்தில் புழு,சாம்பாரில் சணல் இன்னும் நிறைய , கூட வரும் நண்பர்களிடம் இதை சொன்னால்,என்னைக்காவது எங்களுக்கு இப்படி நடந்திருக்கா? ஓவர் சுத்தம் பார்த்தா அப்படிதாண்டா ஆகும் என்று நக்கலடிப்பார்கள்.என் சந்தேகம் என்னவெனில் அது எப்படி எனக்கு மட்டும் இப்படி நடக்கும்,ஒரு வேளை நான் மட்டும் கவனிப்பேனாயிருக்கும். இது ஹைகிளாஸ் ஹோட்டலில் இருந்து கையேந்தி பவன் வரைக்கும் நான் கவனித்தது.இனிமேல் கொஞ்சம் கவனமாக பாருங்கள் உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கக் கூடும்.
இவ்வளவு கூட்டம் வந்து போகும் திருப்பதியின் ஆச்சர்யமான விஷயம் சுத்தம்.பொது கழிப்பறை கூட படுசுத்தமாக இருக்கிறது.இலவச பஸ் வசதி,இலவச உணவு,ஐம்பது ரூபாயில் நல்ல வசதியுன் தங்கும் விடுதிகள் என பலவும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.அறிவிப்பு பலகைகள் உள்ள எல்லா இடங்களிலும் தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆனாலும் முழுவதும் சந்தோஷ படமுடியவில்லை அந்த அளவிற்கு எழுத்துப்பிழைகள்.ஓரிரு இடங்கள் என்றால் பரவாயில்லை கிட்ட தட்ட எல்லா அறிவிப்பிலுமே ஏக பிழைகளுடன் எழுதப்பட்டிருக்கிறது.
***********************************************
சென்ற மாதத்தில் எங்கள் ஊர்ப்பகுதியில் ஒரு குட்டி வளர்ப்பு மகன் திருமணம் போல் ஒரு திருமணம் நடந்தது.பாதி ஊரை அடைத்து பந்தல்,மதுரை தொகுதிக்குள் இருக்கின்றோமோ என்று எண்ணுமளவிற்கு பிரியாணி விருந்து,ஊரின் பல இடங்களில் குவிந்து கிடந்த சரக்கு பாட்டில்கள் என படு அமர்க்களமாக நடந்தேறியது.இவ்வளவுக்கும் அந்த வி.ஐ.பி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.இப்பொழுது அவர் ஒரு மாவட்ட ஊராட்சி குழு தலைவர்(சேர்மன்). அப்போ எம்.பி,எம்.எல்.ஏ லெவலுக்கு ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை கொடுப்பது பத்தாயிரம் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
*************************************************
இது திருவிழாக் காலம்,முன்னெல்லாம் இரவு நிகழ்ச்சிகளாக ஆர்கெஸ்ட்ரா என்ற பெயரில் ஓரளவிற்கு தரமான இசைக் கச்சேரிகள் நடைபெறும்,இப்போதோ ஆடலுடன் பாடல் என்ற பெயரில் படுமோசமாக உடையணிந்தும்,வல்கர் மூவ்மெண்ஸுமாக திருவிழாக்கள் கிராமங்களில் ஆண்களுக்கு மட்டும் என்கிற மாதிரி ஆகிவிட்டது.நேரம் ஆக ஆக உடையின் அளவும் குறைந்து கிட்டத்தட்ட " ----- லைவ் ஷோ" மாதிரி காம கலியாட்டங்கள் நடக்கின்றன. முதலில் இதற்கு ஒரு தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும். இந்த கலாச்சாரம் ஆரம்பத்திலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.இதற்கு அந்தந்த ஊர்மக்களே நடவெடிக்கையெடுக்கலாம்,ஆனால் இப்படிபட்ட நிகழ்ச்சிகளால் விடலை பசங்கள் எந்த அளவிற்கு திசை திருப்பப் படுவார்கள் என்ற பிரஞ்ஞை பெரும்பாலான கிராமத்து பெருசுகளிடம் இருப்பதில்லை.
*************************************************
சமீபத்தில் நடந்த குரூப் ஒன் தேர்வில் கேட்கப்பட்ட பல சுவராஸ்யமான கேள்விகளில் ஒன்று கீழே:
பொருத்துக:
தி.மு.க ----மாம்பழம்
அ.தி.மு.க ---- பம்பரம்
பா.ம.க ---- இரட்டை இலை
ம.தி.மு.க ---- உதய சூரியன்
*************************************************
ஹோட்டல்களில் சாப்பிடுவதை பெரும்பாலும் அசுத்தத்தின் காரணமாக தவிர்த்துவிடுவேன், வேறு வழியின்றி எப்போதாவது செல்லும்போது கண்டிப்பாக எனக்கு வைக்கப்படும் தண்ணிரில் எதாவது மிதந்துகொண்டிருக்கும்,வெங்காய பச்சடியில் தலை முடி,இலையில் எதாவது அசிங்கம்,சாதத்தில் புழு,சாம்பாரில் சணல் இன்னும் நிறைய , கூட வரும் நண்பர்களிடம் இதை சொன்னால்,என்னைக்காவது எங்களுக்கு இப்படி நடந்திருக்கா? ஓவர் சுத்தம் பார்த்தா அப்படிதாண்டா ஆகும் என்று நக்கலடிப்பார்கள்.என் சந்தேகம் என்னவெனில் அது எப்படி எனக்கு மட்டும் இப்படி நடக்கும்,ஒரு வேளை நான் மட்டும் கவனிப்பேனாயிருக்கும். இது ஹைகிளாஸ் ஹோட்டலில் இருந்து கையேந்தி பவன் வரைக்கும் நான் கவனித்தது.இனிமேல் கொஞ்சம் கவனமாக பாருங்கள் உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கக் கூடும்.
Saturday, January 17, 2009
படிக்காதவன் என் பார்வையில்:
7G ரெயின்போ காலனி,பருத்திவீரன் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு எனது தூக்கத்தை கெடுத்த படம் படிக்காதவன்.தூக்கம் தொலைந்தது மட்டுமே ஒற்றுமை மற்றபடி காரணம் வேறு.இந்த படத்தை பற்றி எழுத எங்கேயிருந்து ஆரம்பிக்க ஒன்னுமே புரியல (படத்தோட ஸ்கிரீன்பிளே மாதிரி).
கதையென்று பார்த்தால் எல்லோரும் படித்தவர்களாக இருக்கும் குடும்பத்தில் படிக்காதவன் தனுஷ்.வழக்காமான தனுஷ் படத்தின் அப்பாக்கள் போலவே இதிலும் அப்பா(பிரதாப் போத்தன்) திட்டிக் கொண்டே இருக்கிறார்.இதனால் எப்படியாவது ஒரு டிகிரி வாங்கிவிட முயல்கிறார் தனுஷ்,முயற்சிகள் தோல்வியில் முடிய நண்பர்களின் தூண்டுதலில் படித்த பெண்ணான தமனாவை லவ் பண்ணுகிறார்.(இதுவரைக்கும் ஏதோ ஸ்டோரி இருக்கிற மாதிரியே இருக்கும் ஆனால் இல்லை).இதற்கிடையில் தனுஷ் ஒரு வில்லன் கும்பலோடு மோத நேரிடுகிறது,அதனால் அவர்கள் தனுஷை ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்க, தனுஷைத்தான் ஃபாலோ செய்கிறார்கள் என நாம் நினைக்கும் போது திடிரென தமனாவை துரத்துகிறார்கள்.அங்கே இன்னொரு புது வில்லன் குரூப் வந்து தமனாவை காப்பாற்றுகிறார்கள். அப்போது தமனாவின் அப்பாவாக வில்லன் சுமன் என்டராகி தமனாவை ஆந்திராவிற்கு அழைத்துச் செல்கிறார்.இங்கே நீங்க கவனிக்க வேண்டியது தனுஷை துரத்தியது வேறொரு வில்லன் குரூப்(என்ன மண்ட காயுதா).
பிறகு விவேக்கை(இவரும் ஒரு ரௌடி) அழைத்துக்கொண்டு தனுஷ் ஆந்திரா செல்கிறார். அதன் பின் பொல்லாதவன் படத்தை நினைவூட்டும் ஒரு பிளாஷ்பேக், அதுனுள் ஒரு வில்லன் குரூப்(ஜண்டுபாம் தடவிகிட்டு கண்டினியூ பண்ணுங்க) பிறகு ரன் படத்தின் கிளைமாக்ஸோடு அதே ரன் அதுல் குல்கர்னியோடு மோதி காதலில் வெற்றிபெறுகிறார்.
மேலே சொன்னது எதுவும் புரியவில்லையெனில் படத்தை பற்றிய சரியான விமர்சனத்தை நான் எழுதியிருக்கிறேன் என்றே அர்த்தம்.
தனுஷ் நன்றாகவே நடித்திருக்கிறார்.கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு தமனாவிடம்"எஸ்சுஸ்மி ஐ லவ் யூ " என்று ரொமான்ஸ் பண்ணும்போதும், வயது வித்யாசமின்றி இருக்கும் நட்பு வட்டத்தில் அடிக்கும் லூட்டிகளிலும் கலக்கியிருக்கிறார். தனுஷ் உங்க உடலமைப்பை பற்றி எழுதப்படும் வசனங்களும், காட்சிகளும் நிறைய படங்களில் பார்த்து போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு,கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்.
தமனா,அழகாக இருக்குது பாப்பா,படத்தின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது அவ்ளோதான்.
தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தின் இரண்டாம் பாகத்தை இந்த படத்தில் விவேக் செய்திருக்கிறார். பாடிலாங்வேஜ் உட்பட அப்படியே வடிவேலு மாதிரியே செய்திருக்கிறார்.(புதுசா ஏதும் அறிவுரை தோணலையா கருத்து கந்தசாமிக்கு).
மணிஷர்மாவின் இசையில் "காதலும் கடவுளும்" பாடல் நல்ல மெலடி, மற்ற பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கும்படி இல்லை.
அடியாட்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக இருக்கிறது வில்லன்களின் எண்ணிக்கை.யாருக்கு யாரோட என்ன பிரச்சினை ஒன்னும் புரியல.எல்லா அடியாட்களும் யூனிஃபார்ம் அணிந்து ஆளுக்கொரு கொக்கு சுடும் துப்பாக்கியோடு திரிகிறார்கள்(எங்கேயிருந்துதான் திங் பண்றா(னு)ங்களோ).
சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் தரத்தையும் ,தமிழனின் ரசனையையும் வேறு தளத்திற்கு நகர்த்தும் முயற்சியில் இருக்க இயக்குனர் சுராஜ் நம்ம ரசனையை பக்கத்து மாநிலத்திற்கு(ஆந்திரா) நகர்த்த செய்த முயற்சி இந்த படம்.
மொத்தத்தில் வில்லுவின் வெற்றியை உறுதி செய்ய வந்த படம் இந்த படிக்காதவன்.
டிஸ்கி:இந்த பதிவு எழுதி post செய்து நான்கு நாட்களாய் publish ஆகாமல் இருந்ததை இப்போதுதான் பார்த்து publish செய்கிறேன்.இன்நேரம் படம் பார்த்து நொந்து போயிருப்பீர்கள்.இருந்தாலும் எழுதியதை என்ன செய்யறது.
கதையென்று பார்த்தால் எல்லோரும் படித்தவர்களாக இருக்கும் குடும்பத்தில் படிக்காதவன் தனுஷ்.வழக்காமான தனுஷ் படத்தின் அப்பாக்கள் போலவே இதிலும் அப்பா(பிரதாப் போத்தன்) திட்டிக் கொண்டே இருக்கிறார்.இதனால் எப்படியாவது ஒரு டிகிரி வாங்கிவிட முயல்கிறார் தனுஷ்,முயற்சிகள் தோல்வியில் முடிய நண்பர்களின் தூண்டுதலில் படித்த பெண்ணான தமனாவை லவ் பண்ணுகிறார்.(இதுவரைக்கும் ஏதோ ஸ்டோரி இருக்கிற மாதிரியே இருக்கும் ஆனால் இல்லை).இதற்கிடையில் தனுஷ் ஒரு வில்லன் கும்பலோடு மோத நேரிடுகிறது,அதனால் அவர்கள் தனுஷை ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்க, தனுஷைத்தான் ஃபாலோ செய்கிறார்கள் என நாம் நினைக்கும் போது திடிரென தமனாவை துரத்துகிறார்கள்.அங்கே இன்னொரு புது வில்லன் குரூப் வந்து தமனாவை காப்பாற்றுகிறார்கள். அப்போது தமனாவின் அப்பாவாக வில்லன் சுமன் என்டராகி தமனாவை ஆந்திராவிற்கு அழைத்துச் செல்கிறார்.இங்கே நீங்க கவனிக்க வேண்டியது தனுஷை துரத்தியது வேறொரு வில்லன் குரூப்(என்ன மண்ட காயுதா).
பிறகு விவேக்கை(இவரும் ஒரு ரௌடி) அழைத்துக்கொண்டு தனுஷ் ஆந்திரா செல்கிறார். அதன் பின் பொல்லாதவன் படத்தை நினைவூட்டும் ஒரு பிளாஷ்பேக், அதுனுள் ஒரு வில்லன் குரூப்(ஜண்டுபாம் தடவிகிட்டு கண்டினியூ பண்ணுங்க) பிறகு ரன் படத்தின் கிளைமாக்ஸோடு அதே ரன் அதுல் குல்கர்னியோடு மோதி காதலில் வெற்றிபெறுகிறார்.
மேலே சொன்னது எதுவும் புரியவில்லையெனில் படத்தை பற்றிய சரியான விமர்சனத்தை நான் எழுதியிருக்கிறேன் என்றே அர்த்தம்.
தனுஷ் நன்றாகவே நடித்திருக்கிறார்.கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு தமனாவிடம்"எஸ்சுஸ்மி ஐ லவ் யூ " என்று ரொமான்ஸ் பண்ணும்போதும், வயது வித்யாசமின்றி இருக்கும் நட்பு வட்டத்தில் அடிக்கும் லூட்டிகளிலும் கலக்கியிருக்கிறார். தனுஷ் உங்க உடலமைப்பை பற்றி எழுதப்படும் வசனங்களும், காட்சிகளும் நிறைய படங்களில் பார்த்து போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு,கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்.
தமனா,அழகாக இருக்குது பாப்பா,படத்தின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது அவ்ளோதான்.
தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தின் இரண்டாம் பாகத்தை இந்த படத்தில் விவேக் செய்திருக்கிறார். பாடிலாங்வேஜ் உட்பட அப்படியே வடிவேலு மாதிரியே செய்திருக்கிறார்.(புதுசா ஏதும் அறிவுரை தோணலையா கருத்து கந்தசாமிக்கு).
மணிஷர்மாவின் இசையில் "காதலும் கடவுளும்" பாடல் நல்ல மெலடி, மற்ற பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கும்படி இல்லை.
அடியாட்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக இருக்கிறது வில்லன்களின் எண்ணிக்கை.யாருக்கு யாரோட என்ன பிரச்சினை ஒன்னும் புரியல.எல்லா அடியாட்களும் யூனிஃபார்ம் அணிந்து ஆளுக்கொரு கொக்கு சுடும் துப்பாக்கியோடு திரிகிறார்கள்(எங்கேயிருந்துதான் திங் பண்றா(னு)ங்களோ).
சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் தரத்தையும் ,தமிழனின் ரசனையையும் வேறு தளத்திற்கு நகர்த்தும் முயற்சியில் இருக்க இயக்குனர் சுராஜ் நம்ம ரசனையை பக்கத்து மாநிலத்திற்கு(ஆந்திரா) நகர்த்த செய்த முயற்சி இந்த படம்.
மொத்தத்தில் வில்லுவின் வெற்றியை உறுதி செய்ய வந்த படம் இந்த படிக்காதவன்.
டிஸ்கி:இந்த பதிவு எழுதி post செய்து நான்கு நாட்களாய் publish ஆகாமல் இருந்ததை இப்போதுதான் பார்த்து publish செய்கிறேன்.இன்நேரம் படம் பார்த்து நொந்து போயிருப்பீர்கள்.இருந்தாலும் எழுதியதை என்ன செய்யறது.
Tuesday, January 13, 2009
வில்லு என் பார்வையில்..
விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று பெரிதாய் எதிர்பார்ப்பின்றி சென்றதாலோ என்னவோ படத்தின் முதல் பாதி பரவாயில்லைங்கிற மாதிரி இருந்தது.பிரபுதேவாவை "கேசினோ ராயல்" படம் ரொம்ப கவர்ந்திருக்கும் போல இடைவேளைக்கு சற்று முன்னும்,பின்னும் வரக்கூடிய காட்சிகளில் ராயலின் சாயல் தெரிகிறது.
"கதை"- தந்தையை தேச துரோகி என்று வீண்பழி சுமத்தி கொன்றவர்களை மகன் பந்தாடும் மற்றுமொரு ரிவெண்ஜ் ஸ்டோரி,அதற்காக ஒரு தெலுங்குத் தனமான ஃபிளாஷ்பேக்.ஓரளவுக்கு ஓடக்கூடிய கமர்சியல் விஷயங்கள் இருக்கும் இப்படம் ஊத்திக்கொண்டால் அதற்கு இந்த பிளாஷ்பேக்கே காரணமாய் இருக்கும்.
விஜய் தன்னிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வழக்கமான டான்ஸ், காமெடி, சண்டை என தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்.காதல் காட்சிகளில் நயன்தாராவுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜை சந்திக்கும் இடங்களில் பட்டையை கிளப்பாவிட்டாலும் ஓரளவிற்கு ஏலக்காயையாவது கிளப்பும்படி சுவராஸ்யமாகவே செய்திருக்கிறார்.
நயன்தாரா, விஜய் படங்களில் நாயகிகள் செய்யும் அத்தனை லூஸ் தனங்களையும் செய்கிறார்.சரக்கடித்துவிட்டு ரகளை செய்யும் இடத்தில் உண்மையிலேயே நன்றாக நடித்திருக்கிறார்.பார்ப்பதற்கும் ஒரு சில காட்சிகளை தவிர்த்து அழகாகவே தெரிகிறார்.எப்போது அவிழ்ந்து விழும் என்கிற பயத்தையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது இவரின் மேல் மற்றும் கீழ் ஆடைகள்.
வடிவேலுக்கு இந்த படம் ஒரு பெரிய திருஷ்டி.மொக்கையின் உச்சம். ஆரம்பத்தில் வரும் ஓரிரு காட்சிகளில் கூட லேசாக சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தது.போகப் போக ம்ஹும் ஒன்னும் வேலைக்காகல. வடிவேலுவின் பாணியிலே சொன்னால் ஆரம்பத்திலேயே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சு.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பேக்ரவுண்ட் மியூசிக்கில் சில இடங்களில் பில்லாவை நினைவூட்டுகிறது,ஒரு வேளை படத்தின் சில காட்சிகளும் பில்லாவை போன்றே இருப்பதாலோ என்னவோ.(பில்லாவில் பென்டிரைவ் இங்கே டிஸ்க் தேடும் காட்சிகள்).
படத்தில் பிரகாஷ்ராஜ்,ஆனந்தராஜ் இன்னும் சில அல்லக்கைகளும் வில்லன்களாக நடமாடுகிறார்கள் மேலும் இவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
மகன் விஜயை உயிரோடு புதைக்கும் காட்சியில் அப்பா விஜய் புதையுண்ட இடத்திலிருந்து புறப்படும் புயல்,பிரபுதேவா நடனத்தில் மட்டுமே புயல் என்பதை காட்டுகிறது.குருவி ரயில்வே ட்ராக் ஜம்ப்பைவிட கொடுமை, கொன்னு கொலையில விடுரானுங்களேன்னு இருக்கு இந்த காட்சி.(பிரபு தேவா சார் நீங்க கதையை பற்றிதான் யோசிக்கல அட்லீஸ்ட் எடுக்க போறது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமான்னு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்).
ஃபிளாஷ்பேக்கில் வரும் விஜயின் கெட்-அப் "என்ன கொடுமை சார் இது" ரகம்.போக்கிரியின் இறுதில் வாட்ச்மேன் மாதிரி வருவாரே,இதில் ராணுவ உடையில் மற்றபடி படத்தில் காமெடி சீனில் வராத சிரிப்பு சத்தம் இந்த காட்சியில் தியேட்டரில் பரவலாக கேட்டது.
மொத்தத்தில் வில்லு குருவி அளவிற்கு மோசமில்லை.அப்போ பார்க்கலாமான்னு கேட்டால் எவ்வளவோ பார்துட்டோம்ங்கிற மாதிரி இருப்பீர்களேயானால்,"beware of flahback" என்ற எச்சரிக்கையோடு ஒரு முறை பார்க்கலாம் என்பேன்.
டிஸ்கி:பாக்ஸ் டீக்கெட் எடுத்துவிட்டு பஸ்ட் கிளாஸில் உட்கார்ந்து படம் பார்த்தோம்,கூட வந்தவரிடம் 40 ரூபாய் வேஸ்ட்டா கொடுத்திட்டோமேன்னு சொன்னேன்,அவரோ படம் முடிந்த பிறகு , இருனூறு ரூபாயும் வேஸ்டா போச்சேடான்னு சொன்னார்.
"கதை"- தந்தையை தேச துரோகி என்று வீண்பழி சுமத்தி கொன்றவர்களை மகன் பந்தாடும் மற்றுமொரு ரிவெண்ஜ் ஸ்டோரி,அதற்காக ஒரு தெலுங்குத் தனமான ஃபிளாஷ்பேக்.ஓரளவுக்கு ஓடக்கூடிய கமர்சியல் விஷயங்கள் இருக்கும் இப்படம் ஊத்திக்கொண்டால் அதற்கு இந்த பிளாஷ்பேக்கே காரணமாய் இருக்கும்.
விஜய் தன்னிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வழக்கமான டான்ஸ், காமெடி, சண்டை என தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்.காதல் காட்சிகளில் நயன்தாராவுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜை சந்திக்கும் இடங்களில் பட்டையை கிளப்பாவிட்டாலும் ஓரளவிற்கு ஏலக்காயையாவது கிளப்பும்படி சுவராஸ்யமாகவே செய்திருக்கிறார்.
நயன்தாரா, விஜய் படங்களில் நாயகிகள் செய்யும் அத்தனை லூஸ் தனங்களையும் செய்கிறார்.சரக்கடித்துவிட்டு ரகளை செய்யும் இடத்தில் உண்மையிலேயே நன்றாக நடித்திருக்கிறார்.பார்ப்பதற்கும் ஒரு சில காட்சிகளை தவிர்த்து அழகாகவே தெரிகிறார்.எப்போது அவிழ்ந்து விழும் என்கிற பயத்தையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது இவரின் மேல் மற்றும் கீழ் ஆடைகள்.
வடிவேலுக்கு இந்த படம் ஒரு பெரிய திருஷ்டி.மொக்கையின் உச்சம். ஆரம்பத்தில் வரும் ஓரிரு காட்சிகளில் கூட லேசாக சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தது.போகப் போக ம்ஹும் ஒன்னும் வேலைக்காகல. வடிவேலுவின் பாணியிலே சொன்னால் ஆரம்பத்திலேயே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சு.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பேக்ரவுண்ட் மியூசிக்கில் சில இடங்களில் பில்லாவை நினைவூட்டுகிறது,ஒரு வேளை படத்தின் சில காட்சிகளும் பில்லாவை போன்றே இருப்பதாலோ என்னவோ.(பில்லாவில் பென்டிரைவ் இங்கே டிஸ்க் தேடும் காட்சிகள்).
படத்தில் பிரகாஷ்ராஜ்,ஆனந்தராஜ் இன்னும் சில அல்லக்கைகளும் வில்லன்களாக நடமாடுகிறார்கள் மேலும் இவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
மகன் விஜயை உயிரோடு புதைக்கும் காட்சியில் அப்பா விஜய் புதையுண்ட இடத்திலிருந்து புறப்படும் புயல்,பிரபுதேவா நடனத்தில் மட்டுமே புயல் என்பதை காட்டுகிறது.குருவி ரயில்வே ட்ராக் ஜம்ப்பைவிட கொடுமை, கொன்னு கொலையில விடுரானுங்களேன்னு இருக்கு இந்த காட்சி.(பிரபு தேவா சார் நீங்க கதையை பற்றிதான் யோசிக்கல அட்லீஸ்ட் எடுக்க போறது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமான்னு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்).
ஃபிளாஷ்பேக்கில் வரும் விஜயின் கெட்-அப் "என்ன கொடுமை சார் இது" ரகம்.போக்கிரியின் இறுதில் வாட்ச்மேன் மாதிரி வருவாரே,இதில் ராணுவ உடையில் மற்றபடி படத்தில் காமெடி சீனில் வராத சிரிப்பு சத்தம் இந்த காட்சியில் தியேட்டரில் பரவலாக கேட்டது.
மொத்தத்தில் வில்லு குருவி அளவிற்கு மோசமில்லை.அப்போ பார்க்கலாமான்னு கேட்டால் எவ்வளவோ பார்துட்டோம்ங்கிற மாதிரி இருப்பீர்களேயானால்,"beware of flahback" என்ற எச்சரிக்கையோடு ஒரு முறை பார்க்கலாம் என்பேன்.
டிஸ்கி:பாக்ஸ் டீக்கெட் எடுத்துவிட்டு பஸ்ட் கிளாஸில் உட்கார்ந்து படம் பார்த்தோம்,கூட வந்தவரிடம் 40 ரூபாய் வேஸ்ட்டா கொடுத்திட்டோமேன்னு சொன்னேன்,அவரோ படம் முடிந்த பிறகு , இருனூறு ரூபாயும் வேஸ்டா போச்சேடான்னு சொன்னார்.
Thursday, January 8, 2009
தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள்:
கவிஞர் கண்ணதாசன்,வாலி,வைரமுத்து ஆகியாரை போன்று திரைப் படங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பாடல்களை எழுதாவிட்டாலும் பல மறக்க முடியாத பாடல்களை எழுதியிருக்கும் சில பாடலாசிரியர்கள் பற்றிய ஒரு சிறு நினைவூட்டல் இப்பதிவு.
புலவர் புலமைபித்தன்:
"முத்தமிழே முத்தமிழே","செம்பூவே பூவே உன் மேகம் நான்" என அசத்தல் பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி மற்றும் அவரின் வழித் தோன்றல்களான ந.முத்துகுமார்,பழனிபாரதி,பா.விஜய்,யுகபாரதி,சினேகன் என இன்றைய திரையுலகில் உலாவரும் சில கவிஞர்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
கவிஞர் மு.மேத்தா:
புதுக் கவிதைகள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வரக்கூடியவர் கவிஞர் மு.மேத்தா. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் மற்றும் திரைத்துறை என இரண்டு தளங்களில் தனது பங்களிப்பை செய்து வருபவர். இன்றைக்கும் திரை
இசை சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பலராலும் விரும்பி கேட்க/பாடப்படுகிற "ராஜ ராஜ சோழன் நான்" பாடலை எழுதியவர்.
இசை சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பலராலும் விரும்பி கேட்க/பாடப்படுகிற "ராஜ ராஜ சோழன் நான்" பாடலை எழுதியவர். ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தில் இவர் எழுதிய"வா வா வா கண்ணா வா" பாடலில் இந்த வரிதான் சிறப்பானது என்று சொல்லமுடியாத அளவிற்கு பாடலில் ஆரம்ப வரியில் இருந்து கடைசி வரிவரை கவிநயத்தோடு காதலைச் சொல்லி அதனுள் மதநல்லினக்கம் பற்றிய ஆழமான கருத்தையும் கூறியிருப்பார்.இவர் திரைப்படங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களையே எழுதியிருக்கிறார் அதற்கு என்ன காரணமென அவரே கூறியிருக்கார், இங்கே சொடுக்கவும்.
இவரின் சில பாடல்கள்:
கற்பூர பொம்மை ஒன்று-கேளடி கண்மணி
என் மன வானில் சிறகை விரிக்கும்-காசி
பெண்மானே சங்கீதம் பாடவா- நான் சிகப்பு மனிதன்
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ - இதயகோயில்
மயில் போல பொண்ணு ஒன்னு- பாரதி
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு: http://kavikkudil.wordpress.com/category/uncategorized/
http://groups.google.com.do/group/panbudan/browse_thread/thread/9d05867a4b43b027
http://groups.google.com.do/group/panbudan/browse_thread/thread/9d05867a4b43b027
புலவர் புலமைபித்தன்:
கம்யூனிஸ்ட் சிந்தனைவாதியான இவரின் திரைப்பாடல்களின் வரிகளில் இலக்கியத் தரமும்,புரட்சி சிந்தனைகளும் ஓங்கி நிற்கும்.உன்னால் முடி
யும் தம்பி படத்திற்காக இவர் எழுதிய
யும் தம்பி படத்திற்காக இவர் எழுதிய "புஞ்சையுண்டு நஞ்சையுண்டு" பாடலில்
"வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது"
என்ற வரிகளில் சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வை சாடியிருப்பார்.குழந்தை வளர்ப்பில் ஒரு தாயின் பங்கு எவ்வளவு முக்கியமென்பதை எடுத்துரைக்க இன்றளவும் மேற்கோள் காட்டப்படும் ."எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரும் இவரே.
இவரின் சில பாடல்கள்:
சாதிமல்லி பூச்சரமே -அழகன்
தத்திதோம் வித்தைகள் கற்றிட-அழகன்
அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடும்போது நான் தென்றல் காற்று-பல்லாண்டு வாழ்க.
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு :
கவிஞர் முத்துலிங்கம்:
சிறந்த திரையிசைப் பாடலுக்கான தமிழக அரசின் விருதை இருமுறை பெற்ற இவருக்கு அரசவை கவிஞராக இருந்த சிறப்பும் உண்டு.தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியான இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப் பாடல்களை எழுதியுள்ளார்.
இவரின் சில பாடல்கள்:
இதழில் கதை எழுதும் நேரமிது-உன்னால் முடியும் தம்பி
மாஞ்சோலை கிளிதானோ-கிழக்கே போகும் ரயில்
சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு
பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
மாஞ்சோலை கிளிதானோ-கிழக்கே போகும் ரயில்
சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு
பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
கூட்டத்திலே கோயில் புறா- இதய கோயில்
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு
கவிஞர் பிறைசூடன்:
எண்பதுகளின் இறுதியிலும்,தொன்னூறுகளின் ஆரம்பத்திலும் நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார்.இவரின் பிடிவாத குணமே அதிகம் வாய்ப்புகள் வராததற்
கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.சில மாதங்களுக்கு முன் குமுதம் இணைய பக்கத்தில் இவரது பேட்டி இடம் பெற்றிருந்தது.அதில் இவரின் பதில்களை பார்த்தால் வாய்ப்பின்றி இருப்பதற்கான காரணம் தெரியும்.நல்ல சிந்தனையாளர் கொஞ்சம் வளைந்து கொடுக்கும் தன்மை இருந்தால் இன்னும் சாதித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.சில மாதங்களுக்கு முன் குமுதம் இணைய பக்கத்தில் இவரது பேட்டி இடம் பெற்றிருந்தது.அதில் இவரின் பதில்களை பார்த்தால் வாய்ப்பின்றி இருப்பதற்கான காரணம் தெரியும்.நல்ல சிந்தனையாளர் கொஞ்சம் வளைந்து கொடுக்கும் தன்மை இருந்தால் இன்னும் சாதித்திருப்பார் என்று நினைக்கிறேன்.திங்கள்தான் தென்றல்தான் - கேளடி கண்மணி
சோலை பசுங்கிளியே-என் ராசாவின் மனசில
மணிக்குயில் இசைக்குதடி-தங்க மனசுக்காரன்
மீனம்மா மீனம்மா-ராஜாதி ராஜா
உயிரே உயிரே இது தெய்வீக-எல்லாமே என் காதலி
ரசிகா ரசிகா-ஸ்டார்
போர்க்களம் இங்கே-தெனாலி
நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
இவர்களை தவிர "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு","பாட்டு தலைவன் பாடினான்" போன்ற பாடல்களை எழுதிய ந.காமராசன்,"மலையோரம் மயிலே",
"எங்கிட்ட மோதாதே","குயில் பாட்டு ஓ வந்ததென்ன",போன்ற பாடல்களை எழுதிய கவிஞர் பொன்னடியான்,"கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு", "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்","எங்கெங்கு நீ சென்ற போதும்"போன்ற பாடல்களை எழுதிய கவிஞர் காமகோடியான்,பஞ்சு அருணாச்சலம் போன்ற இன்னும் சில கவிஞர்களும் பல மறக்க முடியாத பாடல்களை தந்திருக்கிறார்கள்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரின் படங்களுக்கு பெரும்பாலும் அவரே பாடல்களை எழுதியிருப்பார்.இயக்குனர் கங்கை அமரனும் "சிந்திய வெண்மணி", "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே" போன்ற நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார்.இயக்குனர் ஆபாவானனும் இணைந்த கைகள்,செந்தூர பூவே, ஊமை விழிகள் போன்ற தனது படங்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதியிருக்கிறார்.
"முத்தமிழே முத்தமிழே","செம்பூவே பூவே உன் மேகம் நான்" என அசத்தல் பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி மற்றும் அவரின் வழித் தோன்றல்களான ந.முத்துகுமார்,பழனிபாரதி,பா.விஜய்,யுகபாரதி,சினேகன் என இன்றைய திரையுலகில் உலாவரும் சில கவிஞர்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
இங்கே குறிப்பிட்டிருக்கும் கவிஞர்களை பற்றி எனக்குத் தெரிந்த/திரட்ட முடிந்த வரையில் தகவல்களை கொடுத்திருக்கிறேன்.இவர்களை பற்றிய உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
டிஸ்கி 1:
டி.ராஜேந்தரின் பாடல்களைப் பற்றி தனி பதிவிடயிருப்பதால் இங்கே குறிப்பிடவில்லை.
டிஸ்கி 2:
பொதுவாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் திரைப் பாடல்கள் ஒலிபரப்பப்படும் போது படத்தின் பெயரும்,இசையமைப்பாளர் மற்றும் பாடியவர்கள் பெயரை மட்டுமே அறிவித்துவிட்டு பாடலாசிரியரை குறிப்பிடுவதில்லை அதை மனதில் கொண்டே இப்பதிவை எழுதினேன்.
Thursday, January 1, 2009
குட்டி கதைகள்
1.Me.. the first (தலைப்பு உபயம்-கே.ரவிஷங்கர்)
ரொம்ப படபடப்போடு இருந்தான் அருண்.நேரம் நெருங்க நெருங்க இதயத் துடிப்பு தாறுமாறாய் எகிறியது.
இன்னும் ஒரு சில நொடிகளுக்குள் சிக்னல் கிடைத்ததும் கையில் உள்ள பொருளை ராகுலிடம் எவ்வளவு விரைவாக ஒப்படைக்க முடியுமோ அவ்வளவு வேகமாக கொடுக்க வேண்டும்.
"சிக்னல் கிடைத்ததும் தாமதிக்காம கிளம்பிடு அருண், உனக்காக ராகுல் ரெடியா இருப்பான் எந்த சந்தர்ப்பத்திலேயும் பின்னால யாரும் வறாங்களான்னு திரும்பி திரும்பி பார்க்காம போயிட்டே இரு,எதாவது சொதப்பின நாம இத்தனை வருட எடுத்த பயிற்சி,போட்ட திட்டம் எல்லாத்துக்கும் அர்த்தம் இல்லாம போயிடும்" என்று பாஸ் சொன்னதை மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தபோதே துப்பாக்கி சுடும் சத்தம்.
சத்தம் கேட்ட நொடியில் கையில் மரக்குழலோடு ராகுலை நோக்கி தனக்கான ட்ராக்கில் ஓடினான் அருண் அந்த மாநிலம் தழுவிய 4x100 ரலே ஓட்டத்தில்,நினைத்தது போலவே முதலிடம் பெற்ற தனது மாணவர்களை ஆரத்தழுவி கொண்டார் அவர்களுடைய கோச் பாஸ் என்கிற பாஸ்கர்.
2.வேலிதாண்டி விளையாடு:(தலைப்பு உபயம்-கே.ரவிஷங்கர்)
புறநகர் பகுதியில் இருக்கும் அந்த வீட்டின் வெளிப்புற கேட்டில் பெரிதாக பூட்டு தொங்கியது.காம்பவுன்ட் சுவர் அருகே நின்று சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான் மணி.ஆள் நடமாட்டம் இல்லை.
"டேய் சீக்கிரண்டா"சொன்னான் அவன் கூட்டாளியான கதிர்.
"கதிரு நல்லா தெரியுமாடா,உள்ள யாரும் இல்லைன்னு"
"தெரியுண்டா,மூனு நாளைக்கு முன்னால எல்லோரும் எங்கேயோ கிளம்பி போனத நான் பார்த்தேன்,இன்னும் வரல"
"வாட்ச்மேன்?"
"இந்த வீட்டுக்கு வாட்ச்மேனே இல்லடா,சும்மா பேசிட்டே இருக்காம யாராவது வரதுக்குள்ள சுவரேறி குதிடா"
"சரிடா"என்று சொன்னபடியே ஒரே ஜம்பில் காம்பவுண்டில் ஏறி உள்ளே குதித்து, பரபரப்பாய் தேடினான், அந்த காம்பவுண்டுக்குள் தவறி விழுந்த கிரிக்கெட் பந்தை.
3. லஞ்சம் வாங்காத போலீஸ் ( தலைப்பு உபயம்-சின்ன அம்மிணி)
வாகனங்கள் அடர்த்தியாய் செல்லும் அந்த ஹைவேயில் ஜான்சனின் பைக் அசுர வேகத்தில் போய்கொண்டிருந்தது,பைக் சிட்டி லிமிட்டுக்குள் நுழைந்தும் அதே வேகம்.
பாதசாரிகள், மின்னல் வேகத்தில் கடந்த ஜான்சனை மிரட்சியோடு பார்த்தனர்.
வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கமால் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடியே போய்க்கொண்டிருந்த ஜான்சன் அடுத்து எதிர்பட்ட சிக்னலில் எரிந்த சிவப்பு விளக்கையும் மதிக்காமல் போனதைக் கண்ட ட்ராபிக் போலிஸ் அவனை விரட்டத் தொடங்கினார்.
கொஞ்சமும் சட்டையே செய்யாமல் போய்கொண்டே இருந்த ஜான்சனை போலிஸ் மிகவும் நெருங்கிவிட, இனியும் தாமதம் வேண்டாமென அவசரமாய் அழுத்தினான் விசைப் பலகையில் உதைப்பதற்கான கட்டளை பொத்தானை, கம்ப்யூட்டரில் ரோட் ரேஸ் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஜான்சன்.
4.அ(ட)ப்பாவி ( தலைப்பு உபயம்-நிலோஃபர் அன்பரசு)
பொங்கல் சமயமென்பாதால் பஸ்ஸில் சரியான கூட்டம்.அனேக பயணிகளின் கையில் பர்சேஸ் செய்த பொருட்கள்.
"பையெல்லாம் பத்திரமா வெச்சுகோங்க" கண்டக்டர் அடிக்கடி எச்சரித்தபடியே இருந்தார்.
முத்து திருதிருவென முழித்துக்கொண்டே பஸ்ஸில் இருக்கும் எல்லோரையும் நோட்டமிட்டபடி இருந்தான்.
பஸ்ஸில் ஆங்காங்கே திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்துகொண்டே திரும்பியவன் அந்த இளம்பெண் தன்னை கவனிப்பதை பார்த்தான்.தன்னைத்தான் பார்க்கிறாளா என்பதை அறிய வேறுபக்கமாய் முகத்தைத் திருப்பி சிறிதுநேரம் கழித்து மீண்டும் அவளைப் பார்த்தான்,இப்போது அவள் அருகே அமர்ந்திருக்கும் அவளது கணவனிடம் இவனைக் காட்டி ஏதோ காதுக்குள் கிசுகிசுத்தாள்.
"மாட்டினா தனது நிலை என்னவாகும்"என நினைத்தவன் வேகமாக நகர்ந்து படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டான்.
இப்போது பஸ்ஸில் உள்ள மேலும் சிலர் இவனை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாய் உணர்ந்து அடுத்து வந்த ஸ்டாப்பில் பஸ் நிற்பதற்கு முன்னமே குதித்து"அப்பாடா" என பெரு மூச்சு விட்டான், பர்ஸை தொலைத்துவிட்டு டிக்கெட் வாங்க கூட காசு இல்லாமல் வித் அவுட்டில் வந்ததால் பயந்த முத்து.
கொசுறு:இங்கே இருக்கும் இந்த நான்கு குட்டி கதைகளுக்கும் என்ன தலைப்பு வைக்கலாமென்று சொல்லிட்டு போங்க நண்பர்களே.பொருத்தமான தலைப்பிற்கு பரிசெல்லாம் கிடையாது,ஆனால் நீங்கள் கொடுக்கும் தலைப்பையே சூட்டி அருகே தலைப்பு உபயம் என உங்கள் பெயரை வலைவெட்டில்(கல்லில் எழுதினா கல்வெட்டு,வலையில் எழுதினா வலைவெட்டுதானே ஹி ஹி) பொறித்துவிடுகிறேன்.அப்படியே கதையை பற்றிய உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க மக்கா.
கொசுறு புதுசு:தலைப்பு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ரொம்ப படபடப்போடு இருந்தான் அருண்.நேரம் நெருங்க நெருங்க இதயத் துடிப்பு தாறுமாறாய் எகிறியது.
இன்னும் ஒரு சில நொடிகளுக்குள் சிக்னல் கிடைத்ததும் கையில் உள்ள பொருளை ராகுலிடம் எவ்வளவு விரைவாக ஒப்படைக்க முடியுமோ அவ்வளவு வேகமாக கொடுக்க வேண்டும்.
"சிக்னல் கிடைத்ததும் தாமதிக்காம கிளம்பிடு அருண், உனக்காக ராகுல் ரெடியா இருப்பான் எந்த சந்தர்ப்பத்திலேயும் பின்னால யாரும் வறாங்களான்னு திரும்பி திரும்பி பார்க்காம போயிட்டே இரு,எதாவது சொதப்பின நாம இத்தனை வருட எடுத்த பயிற்சி,போட்ட திட்டம் எல்லாத்துக்கும் அர்த்தம் இல்லாம போயிடும்" என்று பாஸ் சொன்னதை மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தபோதே துப்பாக்கி சுடும் சத்தம்.
சத்தம் கேட்ட நொடியில் கையில் மரக்குழலோடு ராகுலை நோக்கி தனக்கான ட்ராக்கில் ஓடினான் அருண் அந்த மாநிலம் தழுவிய 4x100 ரலே ஓட்டத்தில்,நினைத்தது போலவே முதலிடம் பெற்ற தனது மாணவர்களை ஆரத்தழுவி கொண்டார் அவர்களுடைய கோச் பாஸ் என்கிற பாஸ்கர்.
2.வேலிதாண்டி விளையாடு:(தலைப்பு உபயம்-கே.ரவிஷங்கர்)
புறநகர் பகுதியில் இருக்கும் அந்த வீட்டின் வெளிப்புற கேட்டில் பெரிதாக பூட்டு தொங்கியது.காம்பவுன்ட் சுவர் அருகே நின்று சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான் மணி.ஆள் நடமாட்டம் இல்லை.
"டேய் சீக்கிரண்டா"சொன்னான் அவன் கூட்டாளியான கதிர்.
"கதிரு நல்லா தெரியுமாடா,உள்ள யாரும் இல்லைன்னு"
"தெரியுண்டா,மூனு நாளைக்கு முன்னால எல்லோரும் எங்கேயோ கிளம்பி போனத நான் பார்த்தேன்,இன்னும் வரல"
"வாட்ச்மேன்?"
"இந்த வீட்டுக்கு வாட்ச்மேனே இல்லடா,சும்மா பேசிட்டே இருக்காம யாராவது வரதுக்குள்ள சுவரேறி குதிடா"
"சரிடா"என்று சொன்னபடியே ஒரே ஜம்பில் காம்பவுண்டில் ஏறி உள்ளே குதித்து, பரபரப்பாய் தேடினான், அந்த காம்பவுண்டுக்குள் தவறி விழுந்த கிரிக்கெட் பந்தை.
3. லஞ்சம் வாங்காத போலீஸ் ( தலைப்பு உபயம்-சின்ன அம்மிணி)
வாகனங்கள் அடர்த்தியாய் செல்லும் அந்த ஹைவேயில் ஜான்சனின் பைக் அசுர வேகத்தில் போய்கொண்டிருந்தது,பைக் சிட்டி லிமிட்டுக்குள் நுழைந்தும் அதே வேகம்.
பாதசாரிகள், மின்னல் வேகத்தில் கடந்த ஜான்சனை மிரட்சியோடு பார்த்தனர்.
வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கமால் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடியே போய்க்கொண்டிருந்த ஜான்சன் அடுத்து எதிர்பட்ட சிக்னலில் எரிந்த சிவப்பு விளக்கையும் மதிக்காமல் போனதைக் கண்ட ட்ராபிக் போலிஸ் அவனை விரட்டத் தொடங்கினார்.
கொஞ்சமும் சட்டையே செய்யாமல் போய்கொண்டே இருந்த ஜான்சனை போலிஸ் மிகவும் நெருங்கிவிட, இனியும் தாமதம் வேண்டாமென அவசரமாய் அழுத்தினான் விசைப் பலகையில் உதைப்பதற்கான கட்டளை பொத்தானை, கம்ப்யூட்டரில் ரோட் ரேஸ் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஜான்சன்.
4.அ(ட)ப்பாவி ( தலைப்பு உபயம்-நிலோஃபர் அன்பரசு)
பொங்கல் சமயமென்பாதால் பஸ்ஸில் சரியான கூட்டம்.அனேக பயணிகளின் கையில் பர்சேஸ் செய்த பொருட்கள்.
"பையெல்லாம் பத்திரமா வெச்சுகோங்க" கண்டக்டர் அடிக்கடி எச்சரித்தபடியே இருந்தார்.
முத்து திருதிருவென முழித்துக்கொண்டே பஸ்ஸில் இருக்கும் எல்லோரையும் நோட்டமிட்டபடி இருந்தான்.
பஸ்ஸில் ஆங்காங்கே திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்துகொண்டே திரும்பியவன் அந்த இளம்பெண் தன்னை கவனிப்பதை பார்த்தான்.தன்னைத்தான் பார்க்கிறாளா என்பதை அறிய வேறுபக்கமாய் முகத்தைத் திருப்பி சிறிதுநேரம் கழித்து மீண்டும் அவளைப் பார்த்தான்,இப்போது அவள் அருகே அமர்ந்திருக்கும் அவளது கணவனிடம் இவனைக் காட்டி ஏதோ காதுக்குள் கிசுகிசுத்தாள்.
"மாட்டினா தனது நிலை என்னவாகும்"என நினைத்தவன் வேகமாக நகர்ந்து படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டான்.
இப்போது பஸ்ஸில் உள்ள மேலும் சிலர் இவனை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாய் உணர்ந்து அடுத்து வந்த ஸ்டாப்பில் பஸ் நிற்பதற்கு முன்னமே குதித்து"அப்பாடா" என பெரு மூச்சு விட்டான், பர்ஸை தொலைத்துவிட்டு டிக்கெட் வாங்க கூட காசு இல்லாமல் வித் அவுட்டில் வந்ததால் பயந்த முத்து.
கொசுறு:இங்கே இருக்கும் இந்த நான்கு குட்டி கதைகளுக்கும் என்ன தலைப்பு வைக்கலாமென்று சொல்லிட்டு போங்க நண்பர்களே.பொருத்தமான தலைப்பிற்கு பரிசெல்லாம் கிடையாது,ஆனால் நீங்கள் கொடுக்கும் தலைப்பையே சூட்டி அருகே தலைப்பு உபயம் என உங்கள் பெயரை வலைவெட்டில்(கல்லில் எழுதினா கல்வெட்டு,வலையில் எழுதினா வலைவெட்டுதானே ஹி ஹி) பொறித்துவிடுகிறேன்.அப்படியே கதையை பற்றிய உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க மக்கா.
கொசுறு புதுசு:தலைப்பு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
Subscribe to:
Comments (Atom)

இதில் இருக்கும் காய்களின் எண்ணிக்கை ஆறா ? அஞ்சா? மொத்தத்தில் இதுதாங்க ஆரஞ்ச்.




இதுதாங்க உடும்புப் பிடி 